உங்களை காதலிப்பவரை எப்படி கண்டு பிடிக்கலாம்?



இன்றைய காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் நீண்ட நாட்கள் நண்பர்களாக இருக்க முடியவில்லை. அப்படி அவர்கள் நண்பர்களாக பழகும் போது ஒரு வித வித்தியாசமான உணர்வுகள் வருகின்றன. அந்த உணர்வை ஆண்கள் வெளிப்டையாக தெரிவிக்கின்றனர். அனால் பெண்கள் அப்படி இல்லை. பெண்களுக்கும் உங்களை பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று பார்க்கலாம்.

பெண்களுக்கு ஆண்கள் மீது காதல் வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியுமா?
பெண்கள் உங்களிடம் பேசும் பொழுது அதிகமாக உங்கள் கண்களை பார்த்து பேசினால் உங்கள் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் என்று அர்த்தம். அதும் தொடர்ந்து உங்கள் கண்களையே பார்த்து கொண்டிருந்தால் உங்களை பிடித்திருகிறது என்று அர்த்தம். பெண்களுக்கு உங்களை பிடிதிருந்த்ல் உங்களை அடிக்கடி தொட்டு தொட்டு பேசுவார்கள். உதாரணமாக விளையாட்டுக்கு அடிப்பது தொட்டு பேசுவது, கைகளை பிடித்துகொண்டு நடப்பது போன்றவை செய்வார்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால் உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தம்.

பெண்களுக்கு உங்கள் மீது விருப்பம் இருந்தால் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள் எந்த நேரமாக இருந்தாலும் உங்களுடன் பேச ஆசைபடுவார்கள். அவர்களாகவே கால் செய்து பேசுவார்கள். உங்களை நேசிக்கின்ற எந்த ஒரு பெண்ணும் உங்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்கள. கடை கண்ணால் பார்பார்கள். நீங்கள் பார்க்காத சமயங்களில் உங்களை பார்ப்பார்கள். உங்கள் மீது அக்கறை இல்லாதது போல நடிப்பார்கள். உங்கள் அருகாமையை விரும்புவார்கள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பார்கள். அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். மேற்கூறியது போல நடந்து கொண்டால் நிச்சயம் அது காதல் தான்.

பெண்கள் உங்களிடம் பேசும் பொழுது முடிகளை கைகளால் சுருட்டிகொண்டிருந்தால், நீங்கள் வேறு பெண்ணுடன் பேசுவதை பார்த்து கோவப்பட்டால் அது கூட உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் ஆனால் அதை அவர்கள் ஒப்புகொள்ள மாட்டார்கள். உங்களை மற்றவர்களிடம் விட்டுகொடுக்காமல் இருப்பார்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்