தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தத்துவங்கள்! தினமும் சுருசுருப்பாக இருக்க இதை படியுங்கள்!!


உழைப்பு = வெற்றி

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண்மீனையும் விழுங்கி விட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாக செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களை சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல மடிவதை விட , கடமை எனும் களத்தில் போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்த்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நெருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான் - சுவாமி விவேகானந்தர்.

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும் - அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்:

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.

2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

3. பிறரைக்காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள் - வில்லியம் ஷேக்ஸ்பியர்

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் - எமர்சன்

சுறுசுறுப்பாய் உள்ள மனிதன், எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பான் - ஹென்றி போர்டு

திறமை தான் ஏழையின் மூலதனம் - எமர்சன்

வாழ்க்கையில் முன்னேற, குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை - இம்மூன்றும் இருந்தால் போதும் - தாமஸ் ஆல்வா எடிசன்

உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது - வால்டேர் உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கு மூலம் - கார்ல் மார்க்ஸ்

வெற்றி = தோல்வி

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்க தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிகொண்டிருக்கக் கூடாது - அடால்ப் ஹிட்லர்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு - கிளப்டைன் 

பயம்

அஞ்சி நடுங்கி கொண்டு இருப்பவனால் சிறு குட்டையை கூட கடக்க முடியாத - சாணக்கியன் 

முயற்சி

விதைத்துக்கொண்டே இரு. முடிந்தால் மரம்; இல்லையேல் உரம்.

முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது - எமர்சன்

சுதந்திரம் என்பது கொடுக்கப்படவில்லை எடுக்கப்படுவத்து - நேதாஜி

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

இருட்டை சபித்து கொண்டிருப்பதை விட்டு விட்டு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் - காணபூஷியஸ்

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை.

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வருமைக்குள் தள்ளிவிடும் - இங்கர்சால்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்