Posts

Showing posts from March, 2018

கோடை வெப்பத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்க டிப்ஸ்...

Image
அக்னி வெயில் தொடங்கும் முன்னே சாலையில் அனல் கொதிக்கிறது. வெப்பத்தினால் பல்வேறு நோய் பாதிப்புகள் தோன்றுவது இயற்கை. வரும் முன் காக்கவும், நோய் வந்தபின்னர் குணப்படுத்தவும் எளிய டிப்ஸ்: வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்: வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும்.நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம். உடல்  உஷ்ணம் நீங்க: உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணல்தக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும். திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும். உடல் சூட்டினால் வயிறுவலி ஏற்படுவது இயற்கை. அதனைப்போக்க ஒரு காய்ந்த மிளகாய் போதும். அதன் காம்பை கிள்ளிவிட்டு உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து வாயில்போட்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தி விழுங்கிவிடவேண்டும். வயிற்றுவலி போய்விடும். அம்மைநோயிலிருந்

ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் தமிழர் பாரம்பரியம்

Image
நகைகள், தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும், ஆடம்பரத்திற்கும் மட்டுமே நகைகள் அணிவதில்லை. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கொலுசு அணிதல் : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மெட்டி அணிதல் : மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏனென்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் முக்கிய

உலகின் மிக ஆபத்தான பாலங்கள் படங்கள்

Image
உலகின் மிக ஆபத்தான பாலங்கள் படங்கள் மரைன்ர்புகெக் ஜெர்மனி மரைன்ர்புகெக் பாலம் ஜேர்மனியில் அமைந்துள்ளது. இந்த அழகிய, ஆபத்தான பாலம், இரண்டு பக்கங்களின் பாறைகளை இணைக்கும் பவேரிய ஆல்ப்ஸ்களை நெருக்கமாக கட்டியுள்ளது. இந்த பாலம் முதல் பார்வையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது, ஆனால் இது உண்மையில் உங்கள் இதய துடிப்பு அதிகரிக்கப்படாது, எனவே இது பல முறை இதை கடந்து செல்லும் என்று நினைக்கிறேன் அற்புதமான இன்னும் ஆபத்தான பாலம். கால் பாலங்கள் பாக்கிஸ்தான் பாக்கிஸ்தான் கால் பாலங்கள் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் போன்றவை இந்த பாலம் ஏழை இடைநீக்கத்துடன் தூக்கி எறியப்பட்டு ஏழைப் பொருள்களால் கட்டப்பட்டது கூட பாலம் இரு பக்கங்களிலிருந்தும் ஆதரவு மிகவும் பலவீனமாக இருப்பதைக் காண முடிந்தது. இது தேவைப்படும் வரை அல்லது இந்த பாலம் வழியாக செல்ல ஒப்புதல் இல்லை. அகுய்லே டூ மிடி பிரான்ஸ் Aiguille du Midi Bridge பிரான்சில் அமைந்துள்ளது நீங்கள் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பாலம் கடக்கும் திட்டத்தை தவிர்க்க நீங்கள் பரிந்துரைக்கிறேன் இது குறுகியது மற்றும் கடல் மட்டத்திலிருந்து

பெண் வேடத்தில் இருக்கும் நபர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சிரியம் படுவீங்க..!

Image
பொதுவாக நடிகர்கள் தான் பெண் வேடத்தில் நடிப்பார்கள். ஆனால் இவர் நடிகர் கிடையாது என்பது தான் உண்மை. பார்ப்பதற்கு பெண் போல் தெரியும் இவர் ஒரு சிறந்த இசையமைப்பாளர். பெண் வேடத்தில் இருக்கும் இந்த நபர் இசையமைப்பாளர் அனிருத் தான். பார்ப்பதற்கு ஒரு உண்மையான பெண் தான் என்று சொல்லும் அளவிற்கு இவருடைய இந்த புகைப்படம் அமைந்துள்ளது. மிகவும் அழகான தோற்றத்துடன் ஒரு பார்ப்பவர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வகையில் உள்ளது. முதல் முதலாக யாராவது பார்த்தால் பெண் என்று வர்ணித்து கூறும் அளவுக்கு இந்த புகைப்படம் உள்ளது. இவர் படத்தில் நடிக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அதும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா என்ற படத்தில் என்று கூறப்பட்டது. ஒருவேளை அப்படத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அனிருத்தின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் குறித்து இன்னும் எந்த தகவலும் அனிருத் தெரிவிக்கப்படவில்லை.

தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தத்துவங்கள்! தினமும் சுருசுருப்பாக இருக்க இதை படியுங்கள்!!

Image
உழைப்பு = வெற்றி துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண்மீனையும் விழுங்கி விட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாக செயல்படு! கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களை சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல மடிவதை விட , கடமை எனும் களத்தில் போரிட்டு உயிர் துறப்பது மேலானது. எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்த்தாலும் பாதகம் இல்லை. எதிர் காலத்தில் என்ன நெருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான் - சுவாமி விவேகானந்தர். மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும் - அம்பேத்கர் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்: 1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள். 2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 3. பிறரைக்காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள் - வில்லியம் ஷேக்ஸ்ப

தமிழரின் 'கள் பானம்' குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா?

Image
மதுபானங்களின் வருகைக்குப் பின் கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள். கள்ளும் ஒரு மதுபான வகைதான் என்றாலும் இது பழந்தமிழரின் பானம் ஆகும். மனித வரலாற்றில் இனக்குழுக்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல் பல்வேறு போதை பானங்களை பருகியுள்ளனர் என்பதை நமது வரலாறும், புராணங்களுமே எடுத்துரைக்கின்றன. ஔவையே குடித்தார்: இப்புவிப் பரப்பில் தமிழ் மொழியை பாடல்களால் வளர்த்த ஔவையார், அதியமானை ஒரு பாடலில் புகழ்ந்து எழுதும்போது, தனக்கு அதியமான் கள் பருகக் கொடுப்பான் என்றும், கள்ளை குடித்துவிட்டு தன்னிடம் பாடல் பாடச் சொல்லி அதை கேட்டு ரசிப்பான் என்றும் குறிப்பிடுகிறார். பலமரக் கள்: தென்னை மரத்தில் மட்டுமல்ல, பனை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேப்பிலை மரம் என பல வகை மரங்களில் இருந்தும் கூட கள் இறக்கப்பட்டுள்ளது என்பதை சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன. இவ்வளவு ஏன், சப்பாத்திக்கள்ளியில் இருந்தும் கூட கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன மரங்கள் பலவும் சர்வதேச வணிகத்தின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடிகிறது அல்லவா? அவர்களிடம் இருந்து தப்பித்தது தென்னையும், வேம்பும் மட்டுமே. சித்த

தமிழர்களிடம் இருந்து உலகம் கற்றுக்கொண்ட 'சாப்பிடும் முறைகள்'!

Image
தமிழர்கள் தான் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்துள்ளனர் என்பதை நமது வரலாற்று ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. பண்பாடு, கலாச்சாரம், வீரம், கலை, நாகரீகம், மருத்துவம் என அனைத்திலும் முன்னோடியாக வாழ்ந்தனர் தெரிந்துள்ளனர். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமான உணவுகள் உண்டு நொடுநாள் சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள். தமிழர் உணவியலின் பன்னிரண்டு முக்கிய சாராம்சங்களை இங்கே பார்ப்போம். 1. அருந்துதல்: மிகவும் சிறிய அளவியே உட்கொள்ளுதலே அருந்துதல் என்கிறனர். பழரசம் போன்றவற்றை குறைந்த அளவிலேயே அருந்துவதே மிகவும் நல்லது என்று தெரிவித்துள்ளனர். 2. உண்ணல்: பசிக்கும் போது சாப்பிடுவது. அதாவது பசிக்கும் போது மட்டுமே சாப்பிடவேண்டும். அதுவும் பசி நீங்க முழுமையாக சாப்பிடுவது உண்ணல் என்று தெரிவிக்கின்றனர். 3.உறிஞ்சல்: நீர் ஆகாரத்தை வாயை குவித்து ஈர்த்து உட்கொள்வது. இப்படி உணவை உட்கொள்வது என்பது மிகவும் உடலுக்கு மிகவும் உறுதியை ஏற்படுத்துகிறது. 4. குடித்தல்: நீர் போன்ற உணவினை சிறிது சிறிதாக உட்கொள்வது. உணவினை குடிக்கும் போது பசி நீங்க குடிக்க வேண்டும். 5. தின்றல்: தின்பண்டங்களை தான் தமிழர்கள் தின்றல் என்று குறிப

பருக்கள் விட்டுச் சென்ற தழும்புகளைப் போக்கும் சில எளிய வழிகள்

Image
ஒருவரது முகத்தில் பருக்கள் இருந்தால், அது அவர்களது தோற்றத்தையே அசிங்கமாக காட்டும்.ஆண்கள் மற்றும் பெண்களின் அழகை முற்றிலும் கெடுக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பருக்கள்.இன்று ஏராளமான இளம் வயதினர் முகத்தில் பருக்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி முகத்தில் அதிக பருக்கள் வருவதற்கு காரணம், சரும வகை மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை தான். ஒருவரது முகத்தில் பருக்கள் வந்தால், பலரது மனதிலும் முதலில் எழுவது, இதை அப்படியே பஞ்சு கொண்டு உடைத்து துடைத்துவிட்டால் போய்விடும் என்பது தான். சிலர் பஞ்சு பயன்படுத்தி பருக்களை உடைத்தாலும், ஏராளமானோர் விரல் நகங்களைக் கொண்டு உடைத்துவிடுவர். ஆனால் இப்படி செய்தால், பருக்கள் உள்ள இடம் சிவந்து போவதோடு, அவை மிகுதியான அரிப்பையும் உண்டாக்கும்.இவற்றில் ஒன்றை தவறாமல் அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் பருக்களால் வந்த தழும்புகளை முற்றிலும் மறைத்துவிடலாம். உப்பு வீட்டில் உப்பு உள்ளதா? இது பருக்களால் வந்த தழும்புகளை எளிதில் எதிர்த்துப் போராடும். அதுவும் உங்கள் பருக்கள் உடைந்து, அதிலிருந்த சீழ் மற்ற இடங்களில் பட்டால், பருக்கள் பரவ ஆரம்பிக்கும