கோடை வெப்பத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்க டிப்ஸ்...
அக்னி வெயில் தொடங்கும் முன்னே சாலையில் அனல் கொதிக்கிறது. வெப்பத்தினால் பல்வேறு நோய் பாதிப்புகள் தோன்றுவது இயற்கை. வரும் முன் காக்கவும், நோய் வந்தபின்னர் குணப்படுத்தவும் எளிய டிப்ஸ்: வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள எளிய வழிகள்: வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும்.நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம். உடல் உஷ்ணம் நீங்க: உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணல்தக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும். திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும். உடல் சூட்டினால் வயிறுவலி ஏற்படுவது இயற்கை. அதனைப்போக்க ஒரு காய்ந்த மிளகாய் போதும். அதன் காம்பை கிள்ளிவிட்டு உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து வாயில்போட்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தி விழுங்கிவிடவேண்டும். வயிற்றுவலி போய்விடும். அம்மைநோயிலிருந்