திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி இன்னும் குழந்தை பிறக்கவில்லையா இதோ சில இயற்கை வழிகள்


பெண்களுக்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்காக டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற் கொள்வார்கள் அப்படி சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லையா இதோ நம் முன்னோர்கள் சொன்ன சில எளிய இயற்க்கை குறிப்புகள்



ஆலம்பழத்தை உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் ஆலம்பழ பொடி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி செய்து வந்தால் பெண் மலடு நீங்கி கரு தரித்தல் உண்டாகும்

வெள்ளம் இருநூறு கிராம் குப்பைமேனி இலை சாறு நூற்றிஐம்பது மில்லி பெருங்காயம் பொரித்து மூன்று கிராம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து புது மண்சட்டியில் ஊற்றி வெள்ளைத்துணியால் மூடி இளம் வெயிலில் வைத்து மாத விலக்கு காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி மூன்று முறை செய்தால் கருப்பை மலடு நீங்கும்



பருத்திக்கொட்டை ஐம்பது கிராம் எடுத்து அரைத்து பால் எடுத்து நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவில் கலந்து சாப்பிட கருப்பை நீர்கட்டிகள் உடையும் அடுத்த மாதம் செப்பு நெருஞ்சி வேரை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட கரு தங்கும்

வேப்பிலைச்சாறு நூற்றிஐம்பது மில்லி ஆடாதோடை சாறு நூறு மில்லி தேங்காய் எண்ணெய் நூறு மில்லி நல்லெண்ணெய் நூறு மில்லி சேர்த்து பக்குவமாய் காய்ச்சி வடித்து கொள்ளவும் இதை பனிரெண்டு நாட்கள் சாப்பிட பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்



மாத விலக்கான மூன்று நாட்களும் இரவு பட்டினி இருந்து காலையில் தாமரைப்பூவை பாலில் அரைத்து குடித்து வர குழந்தை தங்கும்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்