வளர்ச்சிக்கான வழிமுறை எது







* அதிகாலையில் (காலை 6:00 மணிக்கு முன்) எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள். இதுவே வளர்ச்சிக்கான வழிமுறை.

* குடும்பத்தை பேணுதல், தர்மநெறி தவறாமல் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே நல்ல பெண்ணுக்கு அழகு.

* பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு செயலில் ஈடுபடுவது பண்பாகாது. தானாகவே கடமையைச் செய்ய முன் வரவேண்டும்.

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசுபவன் தனது வாதங்களை முகத்தில் அடித்தாற் போல நிதானமின்றி கூறக்கூடாது. 

* இனிமை தரும் நல்ல மொழிகளைப் பேசு. கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய். 

* நல்ல நுால்களைப் படித்தால் அறியாமை அகலும். ஆராய்ந்து முடிவு செய்து, பிறகு செயலில் இறங்கு. 

* தர்மநெறியை வாழ்வில் எப்போதும் மறவாதே. எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று. 

* நல்ல செயல்களை நீயே முன்னின்று செய். எந்த செயலையும் அதற்குரிய காலத்தில் செய். 

* பசியை விடக் கொடிய நோய்வேறில்லை. அளவுக்கு அதிகமாக உண்ணாதே. 


- அவ்வையார்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்