Posts

தமிழ் நாடு பற்றி பொது அறிவு வினா விடை பற்றி காண்போம்

Image
1.சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள் 2.சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம் 3.முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை 4.இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம் 5.மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை 6.இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம் 7.சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை 8.நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம் 9.வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள் 10.பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்

நாம் மூளை முடிவை எடுக்க எத்தனை வினாடிகள் தெரியுமா?

Image
நாம் மனதிற்குள் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பே, நமது ஆழ்மனதில் அந்த முடிவு எடுக்கப்பட்டுவிடுகிறது. இதை உளவியலாளர்கள் காலங்காலமாக சொல்லி வந்துள்ளனர். ஆனால், அண்மையில் தான் எதை முன்பாக ஆழ்மனதில் முடிவு எடுக்கப்படுகிறது என்பதை, மூளையியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூளையின் இயக்கத்தை படம்பிடிக்கும். எப்.எம்.ஆர்.ஐ., இயந்திரத்தில் 14 பேரை படுக்க வைத்து இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு விடையாக அவர்கள் ஒரு பொத்தானை அழுத்தும்படி சொல்லப்பட்டது. அப்போது மூளையில் முடிவு எடுக்கும் பகுதியில் ஏற்பட்ட மாறுதல்களையும், பொத்தானை அழுத்தும்போது ஏற்பட்ட மாறுதல்களையும், விஞ்ஞானிகள் கவனித்தனர். இந்த இரு செயல்களுக்கும் உள்ள இடைவெளி, 11 வினாடிகள். எனவே ஒரு முடிவை நாம் உணர்வதற்கு 11 வினாடிகள் முன்பாகவே மூளையில் அந்த முடிவு எடுக்கப்பட்டு விடுகிறது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வின் முடிவு, &'சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ்&' இதழில் வெளியாகியுள்ளது.

வாழைப்பழத்தை ஏன் தெய்வங்களுக்கு படைக்கிறார்கள்? இதற்குள் இவ்வளவு காரணம் இருக்கு – தெரிந்து கொள்ளுங்கள்.!

Image
☆ பழங்களிலேயே தவறாமல் வாழைப்பழத்தை தான் எல்லா தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்து விடுகின்றோம் அந்தக் கொட்டையில் இருந்து மீண்டும் ஒரு செடி முளைக்கும். ☆ ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. ☆ நாம் கடவுளிடம், கடவுளே! எனக்கு மீண்டும் பிறவியே இருக்கக்கூடாது என்பதை வேண்டுவதற்காகவே பிறவி இல்லாத வாழைப்பழத்தை நாம் இறைவனுக்கு படைக்கிறோம். ☆ அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. ☆ முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. ☆ மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், நமது எச்சில்படாத தேங்காய், வாழைப்பழம் இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவா

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி இன்னும் குழந்தை பிறக்கவில்லையா இதோ சில இயற்கை வழிகள்

Image
பெண்களுக்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்காக டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற் கொள்வார்கள் அப்படி சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லையா இதோ நம் முன்னோர்கள் சொன்ன சில எளிய இயற்க்கை குறிப்புகள் ஆலம்பழத்தை உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் ஆலம்பழ பொடி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி செய்து வந்தால் பெண் மலடு நீங்கி கரு தரித்தல் உண்டாகும் வெள்ளம் இருநூறு கிராம் குப்பைமேனி இலை சாறு நூற்றிஐம்பது மில்லி பெருங்காயம் பொரித்து மூன்று கிராம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து புது மண்சட்டியில் ஊற்றி வெள்ளைத்துணியால் மூடி இளம் வெயிலில் வைத்து மாத விலக்கு காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி மூன்று முறை செய்தால் கருப்பை மலடு நீங்கும் பருத்திக்கொட்டை ஐம்பது கிராம் எடுத்து அரைத்து பால் எடுத்து நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவில் கலந்து சாப்பிட கருப்பை நீர்கட்டிகள் உடையும் அடுத்த மாதம் செப்பு நெருஞ்சி வேரை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட கரு தங்கும் வேப்பிலைச்சாறு நூற்றிஐம்பது மில்லி ஆடாதோடை

ஏசியினை தொடந்து பயன்படுத்தினால் உண்டாகும் விளைவுகள்

Image
Pozhichai sundar எந்த நேரமும் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு இயற்கையான சூரிய ஒளி கிடைப்பதில்லை இதனால் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் D உடலுக்கு கிடைக்காமல் போகிறது. ஏசி அறையில் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு சரும பிரச்சனைகள் உண்டாகின்றன, சருமத்தின் ஈரபதத்தினை ஏசி உறிஞ்சி விடுகிறது. இதன் காரணமாக சருமம் வரண்டு காணப்படும். எக்சிமா,சொரியாசிஸ் போன்ற நோய் உள்ளவர்கள் தொடந்து ஏசி அறையில் இருக்கும் போது நோயின் தாக்கம் அதிகமாகிறது. சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் D இதயம்,நுரையீரல் சீீீீராக இயங்குவதற்க்கு முக்கியமான ஓன்றாகும். ஏசி அறையில் தொடர்ச்சியாக இருப்பவர்களுக்கு இது கிடைக்காமல் போவதால் எலும்புகள் பலவீீனமடையும். முதுகு வலி, மூட்டு வலிகள் எளிதில் வந்துவிடும். ஆஸ்துமா மற்றும் சைனஸ் போன்ற பிரச்சனைகள் வரும். தலைமுடி வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படும். ஏசி யினை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்பட்டு சருமம் பாதிப்படையும். அம்மை நோய் மற்றும் மெட்ராஸ்ஐ போன்ற நோய் உள்ளவர்கள் ஏசி அறையில் அமர்ந்தால் அவர்களிடம் இருந்து நோய் மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும்.

புராண கதாபாத்திரங்கள்

Image
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல வகையான கதாபாத்திரங்கள் உள்ளன. அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்குக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதாகவும், வலுசேர்ப்பதாகவும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட புராண, இதிகார கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை இந்தப்பகுதியில் பார்க்கலாம். அபிமன்யு மகாபாரதம் என்னும் புகழ்பெற்ற இதிகாசத்தில் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்பவன் அர்ச்சுனன். இவனது வீரப்புதல்வன் தான் அபிமன்யு. குருஷேத்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக அபிமன்யுவும் பங்கேற்றான். கவுரவர்களின் படைத்தளபதி துரோணர் பாண்டவர்களை அழிப்பதற்காக சக்கரவியூகம் அமைத்தார். வலுமிகுந்த அந்த சக்கரவியூகத்தை உடைத்து உடைபுகும் வித்தையை கண்ணன், அபிமன்யுவுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். அதைப்பயன்படுத்தி சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு கடுமையாக போர் செய்தான். அதே நேரம் சக்கரவியூகத்தை உடைத்து வெளியேறும் வித்தையை அவன் அறியாத காரணத்தால், போரில் வீரமரணம் அடைந்தான். மகாபாரதத்தின் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவின் வீரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பீஷ்மர் அளவில்லாத சக்திகளைப் பெற்ற

வளர்ச்சிக்கான வழிமுறை எது

Image
* அதிகாலையில் (காலை 6:00 மணிக்கு முன்) எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள். இதுவே வளர்ச்சிக்கான வழிமுறை. * குடும்பத்தை பேணுதல், தர்மநெறி தவறாமல் வாழ்தல், உயிர்களை நேசித்தல் இவையே நல்ல பெண்ணுக்கு அழகு. * பலமுறை சுட்டிக்காட்டிய பிறகு செயலில் ஈடுபடுவது பண்பாகாது. தானாகவே கடமையைச் செய்ய முன் வரவேண்டும். * பெரியோர் இருக்குமிடத்தில் பேசுபவன் தனது வாதங்களை முகத்தில் அடித்தாற் போல நிதானமின்றி கூறக்கூடாது.  * இனிமை தரும் நல்ல மொழிகளைப் பேசு. கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்.  * நல்ல நுால்களைப் படித்தால் அறியாமை அகலும். ஆராய்ந்து முடிவு செய்து, பிறகு செயலில் இறங்கு.  * தர்மநெறியை வாழ்வில் எப்போதும் மறவாதே. எல்லா உயிர்களையும் கடவுளாகப் போற்று.  * நல்ல செயல்களை நீயே முன்னின்று செய். எந்த செயலையும் அதற்குரிய காலத்தில் செய்.  * பசியை விடக் கொடிய நோய்வேறில்லை. அளவுக்கு அதிகமாக உண்ணாதே.  - அவ்வையார்