கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்
நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எதிர்கொள்ள அம்பிகையின் திருவடியை சரணடைவதுதான் ஒரே வழி.
சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து தினமும் 27 முறை சொல்லி வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
ஸ்லோகம்:
விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித – த்ருசா
மஹா – ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.
விளக்கம்:
பிரம்மன், திருமால், எமன், குபேரன், இந்திரன் என அனைவருமே மகா வெள்ளப்பெருக்கு காலத்தில் இல்லாமல் போகிறார்கள். ஆனால், அந்த பெரு வெள்ளக் காலத்தில் சிவன் சம்கார தாண்டவம் புரிவதை, சர்வ வல்லமை கொண்ட தேவி, நீ மட்டும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.
Comments
Post a Comment