மரணத்தை தரும் பூக்கள் பற்றி தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா


பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம். 





கால்மியா பூ : பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப்பூவில் அதிக விஷத்தன்மை உள்ளது. இதன் இலைகளை பிய்த்து வாயில் போட்டால் வாந்தியில் துவங்கி ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும்.





ஒனாந்தே பூ : ஸ்வீடன், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது. இதனை சாப்பிடுவதால் போதை ஏறும். தொடர்ந்து உட்கொண்டால் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட 70 சதவீதம் வரை வாய்ப்புகள் உண்டு.





அடேனியம் பூ : பூக்களைப் பறித்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைப்பார்கள் அந்த தண்ணீர் எல்லாம் வற்றியபிறகு பூக்கள் வெந்து கெட்டியான பிசினாக மாறும். இது பயங்கர விஷத்தன்மை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில்,வேட்டைக்காரர்கள் வேட்டையாடப் பயன்படுத்தும் அம்புகளில் இந்த விஷத்தை தடவிக் கொள்வார்கள். 





கேஸ்டர் பூ : இந்தியாவில் இந்த செடியை அதிகம் காணமுடியும். அதிக விஷத்தன்மையுள்ள பூ என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது.





டெத் பூ : இந்த வகை பூக்களில் இரண்டு வகை உண்டு . ஒன்று, விஷத்தன்மை இல்லாதது. இன்னொன்று, அதிக விஷத்தன்மை வாய்ந்தது. இரண்டையும் அவ்வளவு எளிதாக வித்யாசம் காண முடியாது. இந்த வகைப் பூக்கள் உள்ளுறுப்புக்களை பாதித்து மரணத்தை உண்டாக்கும். 





கடும்புல் பூ: ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்தப் பூ ‘நிலவின் பூ' என்றும் சொல்லப்படுகிறது. இது காலை நேரங்களில் மொட்டாக இருக்கும் இரவில் தான் படிப்படியாக விரியும். விரிந்த இரண்டு மணி நேரத்தில் சுருங்கிவிடும். 





தீக்குச்சிப்பூ : இதன் வடிவமே இதற்கு இப்பெயர் வரக்காரணம். அர்ஜன்டீனா, ப்ரேசில் நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் பூ விற்கு பெரிதாக பராமரிப்பு தேவையில்லை. ஒரு முறை ஊன்றிவிட்டால் அதன் தண்டுகளில் இருந்து கூட புதிய செடி உருவாகிடும். 




Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்