ஆடிப்பெருக்கு என்றால் என்ன

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம்நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்துஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம்பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்குபருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில்பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல்பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்குஎனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில்நம்பிக்கையுடன் பட்டம்பார்த்து விதை விதைப்பர்.இப்பொழுது நெல், கரும்புமுதலியவற்றைவிதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில்அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றாநதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து,பூசைகள் செய்து பின் உழவு வேலையைதொடங்குவார்கள்.இதனையொட்டியே ஆடிப்பட்டம்தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.

மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப்பெருக்கைக் கண்டு களிப்பர். இந்துசமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும்செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில்குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும்பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம்செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல்வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலைவைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றிவைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை,பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி,தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரைவழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழைமட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில்விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம்பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும்மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்றஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளைசெய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள்வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள்(தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல்,எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவதுஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும்,நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாகஉணவை சாப்பிடுவார்கள்.

காவிரிக்கரை:

காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில்இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.

தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாககாவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரைஇவ்விழா வெகு சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது.

·         மேட்டூர் அணை,

·         பவானி கூடுதுறை,

·         ஈரோடு,

·         பரமத்தி-வேலூர்,

·         குளித்தலை,

·         திருச்சி,

·         புகார்

சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம்படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும்நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில்இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி,அம்மா மண்டபம் படித்துறைக்குஎழுந்தருள்வார். அங்கு சுவாமிக்குதிருமஞ்சனம் நடக்கும். மாலை வரைபெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின்சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும்மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில்அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்றுஅங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில்நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம.ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசுபோக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதுவழக்கம்

பழங்காலம் போல் தற்போது எல்லாஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லைஎன்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சிலஆறுகளில் மட்டுமாவதுஅணைகளைத் திறந்துவிட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றன

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்