Posts

Showing posts with the label பிடித்திருந்தால் share செய்யுங்கள்

ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் அம்மன்

Image
அம்மன் என்றாலே பெண்களுக்குரிய தெய்வம் என்று உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ., தூரத்திலுள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். விநாயகருக்கு மட்டும் சன்னிதி உண்டு. இக்கோவிலுக்குள் பிறந்த பெண் குழந்தையைக் கூட அனுமதிப்பது கிடையாது. ஆனால் வெளியே நின்றபடி வழிபடத் தடையில்லை. இந்த அம்மனை இவ்வூர் ஆண்கள் ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளையில் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக இக்கோவில் செவ்வாய்க்கிழமை மட்டும் திறக்கப்பட்டு நள்ளிரவில் ஆண்களால் மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது.

பெண்ணின் பெயரில் பெருமாள்

Image
பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாற, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இந்த வடிவத்துடன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயாலி என்ற இடத்தில் பெருமாள் கோவில் கொண்டுள்ளார். 'ரயாலி' என்றால் 'விழுதல்'. மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் காட்சி தந்தபோது அவர் தலையில் சூடியிருந்த மலர் இங்கு விழுந்ததால் இவ்வூருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் விரல் நகம், ரேகைகள் துல்லியமாகத் தெரியும்படி சிலை நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறம் பெண்ணின் சாயல் உள்ளது.  கால்களில் தண்டை, சிலம்பு அணிந்து வட்டமாக கொண்டை முடிந்து, மலர் சூடி காட்சி தருகிறார். முன்புறத்தோற்றம் ஆணைப் போல் உள்ளது. ஆண் வடிவத்தை 'ஜெகன்' (உலகை ஆள்பவர்) என்றும், பெண் வடிவத்தை 'மோகினி' (பக்தர்களைக் கவர்பவள்) என்றும் சொல்கிறார்கள். இரண்டையும் இணைத்து சுவாமிக்கு 'ஜெகன்மோகினி கேசவப்பெருமாள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி, நாரதர், ஆதிசேஷன், கருடாழ்வார், கங்கை, தும்புரு, ரம்பை, ஊர்வசி ஆகியோரின் சிற்பங்கள் சிலையைச் சுற்றி உள்ளன. சுவாமியின் பாதத்தில் த

மகாசிவராத்திரி மகத்துவம் என்ன ?

Image
ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மகாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இதற்கு ஈஷா யோகா மைய சத்குரு விளக்கம்:- மகாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மகாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், ம

அம்மை அப்பனின் வடிவம் சிவலிங்கம்

Image
மனித தேகத்தின் தோற்றம் சிவலிங்கமாகவும், அதுவே சிதம்பரமாகவும், மேலும் அதுவே சதாசிவமாகவும் மற்றும் திருக்கூத்துமாகவும் உள்ளது. இலிங்கம தாவது யாரும் அறியார் இலிங்கம தாவது எண்டிசை எல்லாம் இலிங்கம் தாவது எண்ணெண் கலையும் இலிங்கம தாக எடுத்தது உலகே -ஆசான் திருமூலர் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழ்ச்சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த அண்டமும் சிவலிங்க(நீள்வட்ட / முட்டை) வடிவமே. இந்த அண்டத்திலுள்ள உயரணுக்களிலிருந்து, முழுவடிவம் பெற்ற அனைத்து உயிர்களும் சிவலிங்க வடிவமே.  சிவமும், சக்தியும், நாதமும், விந்துவும் கலந்து சிவசக்தி, நாதவிந்தாகப் படைப்புக்கள் நடைபெறுகின்றன. இந்த அண்டங்கள் எல்லாம் சிவசக்தியின் வடிவாதலால் அதனை (Universe is in the form of Energy) ஆவுடையார் என்ற வட்ட வடிவில் அமைத்தார்கள். சத்தி உயிர்களை நோக்கியது. ஆதலால், ஆவுடையாரின் முனையை கீழ்நோக்கி அமைத்தார்கள். மேலெழும் பரஞ்சோதியிலிருந்து சத்தி பிரிந்து உயிர்களை நோக்கி வந்து அறிவூட்டுவதாக இலிங்கத்தையும் ஆவுடையாரையும் பொருத்தினார்கள்.  ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவவமாகிய ஓம் எனும் ஓங்காரத்தில் அக

சுவாமிகளை வணங்கும் திசை

Image
பூஜையறையில் சுவாமி விக்ரஹம் அல்லது படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி வைத்து வழிபட வேண்டும். சுவாமி கிழக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் கிழக்கு நோக்கி அமர்ந்தும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். பெண் தெய்வங்களைப் பூஜிக்கும் போது நேருக்கு நேராக அமர்ந்து பூஜிப்பது சிறப்பு. அதாவது பராசக்தி மற்றும் மகாலட்சுமி படங்கள் கிழக்கு நோக்கி இருந்தால் மேற்கு நோக்கி அமர்ந்தும், வடக்கு நோக்கி இருந்தால் தெற்கு நோக்கி அமர்ந்தும் வழிபாடு செய்யலாம். அவ்வாறு அமரும் போது அம்மன் படங்களின் முன் நேருக்கு நேராகவும் அமரலாம். 

ஜீவ சமாதி மகிமை

Image
ஜீவ சமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார்.  பொதுவாக ஜீவ சமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவ சமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும்.  நாம் அவற்றை வலம் வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்து விடும். பல மகான்கள் ஜீவ சமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

யார் இந்த வாஸ்து புருஷன் ?

Image
வீடு, கட்டிடங்கள், கோவில் கட்டும் போது வாஸ்து பார்க்கிறார்கள். யார் இந்த வாஸ்து புருஷன் தெரியுமா?  அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர்.  மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.

மணியடிக்க ஒரு மந்திரம்

Image
கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம், தூப தீபம், நைவேத்யம், கற்பூர ஆரத்தி காட்டும் போதும், வீட்டில் பூஜையிலும் மணியடிப்பது அவசியம். அப்போது,  “ஆக மார்தம்து தேவானாம் கமநார்தம் து ரக்ஷஸாம் குர்வே கண்டா ரவம் தத்ர தேவதா ஆஹ்வான லாஞ்சனம்”  என்னும் மந்திரத்தை சொல்ல வேண்டும். சமஸ்கிருதம் தெரியாதவர்கள், “தேவர்களை வரவேற்பதற்காகவும், பூஜை செய்யுமிடத்தில் இருக்கும் கண்களுக்குப் புலப்படாத தீய அல்லது அசுர சக்திகளை விலக்குவதற்காகவும் இந்த மணியோசையை எழுப்புகிறேன்,” என்று சொல்ல வேண்டும். பெருமாளுக்குரிய மணியின் உச்சியில் கருடாழ்வாரும், சிவனுக்குரிய மணியில் நந்தியும் இடம் பெற்றிருக்கும். 

எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம்

Image
கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும். ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும். விநாயகரை ஒரு முறையும். சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷ்ணுவை நான்கு முறையும், லட்சுமி தாயார் அல்லது அம்பிகையை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்

Image
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும், யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே நாம் வணங்கும் தேவதைகள், தெய்வங்கள் - அவதாரங்கள், ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர் சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்

பெண்கள் தாலிக்கயிறை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை

Image
பெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டாலோ, மாங்கல்யம் பழுதாகி புது மாங்கல்யம் அணிந்தாலோ, திங்கள், செவ்வாய், வியாழக்கிழமை மாற்றலாம்.  இதை காலை சாப்பிடும் முன்பே, ஏதேனும் கோயிலுக்குச் சென்று, நடைபாதையில் அமராமல், ஒரு ஓரமாக கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுவது மிகவும் நல்லது. மாங்கல்ய கயிற்றில் ஊக்கு, சாவி தொங்க விடக்கூடாது. மாலைநேரத்திலும், ராகு, எமகண்ட காலத்திலும் மாற்றக்கூடாது.  இவ்வாறு செய்வதால், கணவரும், தாலி மாற்றும் பெண்ணும் தீர்க்காயுளுடன் இருப்பர் என்பது ஐதீகம். அழுக்கு கயிற்றில் தாலி அணிந்திருந்தால் வறுமை அதிகமாகும். எனவே, உங்கள் தாலிக்கயிறை அவ்வப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

சிவராத்திரி: நன்மை தரும் ராத்திரி பூஜை

Image
சிவாய நம என சிந்தித்து இருப்போருக்கு ஒரு நாளும் அபாயம் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. சிவராத்திரி தினத்தில் இரவில் சிவபெருமானை வேண்டி 4 ஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணி, இரவு 9.30 மணி, நள்ளிரவு 12,30 மணி, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்வது காரியங்களில் நன்மை பயக்கும். முதல் காலத்தில் சிவனுக்கு பிரம்மா பூஜை செய்வதாக ஐதீகம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் பிறவியில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம். மகாவிஷ்ணு 2-வது கால பூஜையை செய்கிறார். இந்தக்காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் தன, தானிய சம்பத்துகள் சேரும். மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவாக அம்பாள் செய்வதாக ஐதீகம். இதை லிங்கோத்பவ காலம் என்பர். சிவபெருமானின் அடி, முடியை காண வேண்டி பிரம்மனோ அன்ன பறவை வடிவில் மேலேயும், மகாவிஷ்ணு ரூபமாக பாதாள லோகத்தையும் தேவ சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதம் இருந்து பூஜிப்பதால் எந்த வித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும். முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் அனைத்து

சிவனுக்கு உகந்த ஐந்து வகை சிவராத்திரி

Image
சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து வகையான சிவராத்திரிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும். யோக சிவராத்திரி: திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. நித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும். பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும். மாத சிவராத்திரி: மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி

இந்த நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அறிவாளிகளாம்..!

Image
பொதுவாக நட்சத்திரங்கள் 27-க்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதியாக இருக்கும். அந்தந்தக் கிரகங்களுக்கு ஏற்றவாறு அவர்களின் குணநலன்கள் அமையும். அந்தவகையில், இந்த நட்சத்திரக்காரர்கள் மட்டும் மிகவும் அறிவாளிகளாக இருப்பார்களாம். அது எந்த நட்சத்திரம் என்று பார்ப்போம்.  சித்திரை நட்சத்திரம்.....இது அங்காரகனின் ஆதிக்கத்தில் இருக்கும் நட்சத்திரம். இந்த நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அறிவாளிகளாக இருந்தாலும், செயலில் முரட்டுத்தனமும், குரலில் கடுமையும் தெரியும். அடுத்தவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதையே செயல்படுத்த முயல்பவர்கள். சில சமயங்களில்  முன் யோசனை இல்லாமல் தங்களிடம் உள்ளக் கருத்தை சொல்லி விடுவார்கள். அதனால் நிறையப் பேருக்கு இவர்களைப் பிடிக்காது. இவர்கள் சொல்லும் சில விஷயங்கள் மூடத்தனமாகத் தோன்றும். ஆனால் அதுதான் பின்னாளில் நடக்கும். வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் இவர்கள் முன்னேற்றத்தைப் பாதிக்காது. தன்னுடைய தைரியம், கடின உழைப்பு, அறிவுக்கூர்மையால் வெற்றி காண்பார்கள். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 22, 27, 30, 36, 39, 43, 48 வயதை நெருங்க