Posts

Showing posts from October, 2017

அக்டோபர் 22 உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்

Image
திக்குதல் விழிப்புணர்வு நாள் - Stuttering Awareness Day ஒருவர் கூற வரும் கருத்தை விட அதை எவ்விதம் கூறுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் உலகத்தில் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோம். ஒருவர் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தான் கூற வேண்டிய வார்த்தைகளை விழுங்கியோ, திக்கியோ சொல்வதை கேலி செய்தும், அவர் மனம் புண்படுவதைக் கண்டு மகிழ்ந்தும் இருக்கிறோம். இதை விடக் கொடுமையானது என்னவென்றால், இவ்வாறு அவரின் குறையை எள்ளி நகையாடுவது அவர் தன்னைத் திருத்திக் கொள்வதற்கே, அவர் நலனுக்கே எனக் கூறிக் கொள்வது. உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் (22 அக்டோபர்)  இந்த திக்குவாய் பிரச்சினை என்பது, வார்த்தைகளின் முதலில் சிரமப்பட்டு ஆரம்பிப்பது, சொற்றொடரின் நடுவே விட்டு விட்டு பேசுவது, தேவையில்லாமல் சில சொற்களைத் திரும்ப திரும்ப சொல்வது, ஒரே சொல்லை சொற்றொடருக்கு நடுவே பலமுறை வேகமாக சொல்வது, பேசும்போது அர்த்தமற்ற அசைகள் (ஒலிகள்) எழுப்புவது (ஆ... ம்ம்... ஹ..), இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். நமக்குப் புதிதான மொழியைப் பழகும் போது, நிச்சயம் அனைவரும் திக்கி தான் பேசுவோம். இதற்கு காரணம், நாம் பேசும் போது நம

காலையில் எழும்போது எந்த திசையை நோக்கி பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

Image
நம் முன்னோர்கள் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று சொல்லி வந்திருப்பார்கள். மேற்கே தலை வைத்து கிழக்கு நோக்கி படுத்து உறங்குவதே சிறப்பு என சொல்வார்கள். அதேபோல காலையில் துயில் எழும்போது எந்த திசையை பார்த்தவாறு எழுந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள். கிழக்கு: கிழக்கு திசை நோக்கி பார்த்து எழும்போது ஆயுள் விருத்தி அடையுமாம். காலையில் எழும்போது கண்களை மூடியவாறே எழுந்து கிழக்கு திசையை நோக்கலாம். மேற்கு: ஒருவர் மேற்கு திசையை நோக்கி எழும்போது வாழ்வில் அதிகப்படியான நல்ல விஷயங்கள், சுப நிகழ்வுகள் நிகழும். வடமேற்கு:  ஒருவர் தினமும் காலையில் வடமேற்கு திசையை நோக்கி எழும்போது உடல்வாகு, ஆன்ம பலம் கூடும். வடகிழக்கு:  தினமும் காலையில் எழும்போது வடகிழக்கு மூலையை பார்த்தவறே எழும்போது சிந்தனை தெளிவாகும். உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். தென்கிழக்கு ஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்கிழக்கு திசையை பார்த்தால் அவருக்கு எதிராக பகைமை, வெறுப்புணர்வுகள் உண்டாகலாம். தெற்கு: ஒருவர்

இதையெல்லாம் சாப்பிட்டால் உணவும் விஷமாகும்!

லட்சோப லட்ச வருடங்களை கடந்து மனித இனமாக இந்த உலகில் வாழ்ந்து வருகின்றோம். எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனாலும் வாழ்வியலின் அடிப்படை தேவையான ‘உணவு’ என்ற விடயத்தில் நாம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்றே எண்ணம் எழுகிறது. சரிவிகித உணவு முறை என்பது நம்மில் பலரிடமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பதே இதற்கு சான்று. வாழையிலை என்பதை விழாக்காலங்களில் மட்டுமே பார்க்கிறோம். எந்த உணவையாவது சாப்பிட்டுவிட்டு Food Poisoning ஆகிவிடுகிறது. சரியான உணவுமுறை, இதை சாப்பிட்டால் இதை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் எல்லாம் நம் தாத்தா-பாட்டியோடு சென்றுவிட்டது. ஆனால் கும்பகோணம் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் ஒரு அறிவுரைப் பலகை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதில்  “உணவும் நஞ்சாகும்”  என்ற தலைப்பின் கீழ் எந்த வகை உணவுகளை சாப்பிட்டால் எந்த உணவை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள உணவியல் அறிவுரைகள்: மீன் சாப்பிட்டால் பால், புளிப்புச்சுவை கொண்ட பழங்கள், கீரைகளை சாப்பிடக் கூடாது. கோழி இறைச்சி அல்லது மாமிசம் உட

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசணும்?

Image
இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக்கொள்வது எவ்வளவோ குறைந்து போய்விட்டது. ஆண்ட்ராய்ட் இருக்கிறது, அதில் வாட்ஸப் இருக்கிறது, மெசெஞ்சர் இருக்கிறது. எல்லாம் இருந்தாலும் கூட, அவற்றில் எல்லாம் பேசினாலும் கூட சில நேரங்களில் சில நபர்களுடனான நட்புறவு பிடிபடுவதில்லை. அவருக்கும் நமக்கும் ராசி இல்லையோ என தலைக்கு மேல் கிளை விரிக்கும். அது உண்மைதான். பேசுவதற்கும் ராசிக்கும் சம்மந்தம் உண்டு என ஆரூடர்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவரின் ராசிக்கேற்ப அவர்களிடம் பேசினால் நாம் எண்ணிச்சென்ற காரியம் முடியும் என்பதை இங்கே நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே. மேஷம் : பேச்சுப்புயல், சொல்லிலே போர் வாளாக இருக்கும் இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இடம் கொடுத்தார் என்பதற்காக ஓவராக போய் வாக்குவாதம் செய்யக்கூடாது. ரிஷபம் : பார்த்தால் வம்பில் கோர்த்துவிடும் ஆளைப் போலத் தெரிந்தாலும் சரியான வெள்ளந்திகள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்களிடம் கனிவாகவும், பக்குவமாகவும், பொறுமையாகவும் பேச வேண்டும். மிதுனம் : உங்களுடன் பழகுவதற்கு முன்பு உங்களைப் பற்றி ஒரு பெரிய ரி

சாத்விகம், ராட்சதம், தாமசம்… இதில் உங்களுடைய குணம் என்ன?

Image
சாத்விகம், ராட்சதம், தாமசம் இந்த மூன்றும் முக்குணங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று குணங்களின் அடிப்படையில் வெவ்வேறு விதமான பலன்களை கொண்டிருப்பார். இந்த மூன்று குனங்களுக்கான தன்மைகள், குணவான்களுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களை படித்துப் பாருங்கள். சாத்விகம்: சாத்விக குணத்தை கொண்டவர்களின் மனம் நற்காரியங்களை செய்வதில் நாடியிருக்கும். மன அடக்கம், புலன் அடக்கம், நாவடக்கம் என சகல விதமான அடக்கத்துடனும் இருப்பர். ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற கொள்கையை கடைபிடிப்பர். துன்பங்களை பொறுத்து அதை வெல்வதால், இவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குபவர்களாக இருப்பர். விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பணிவு மற்றும் எளிமை போன்ற பண்புகளை கொண்டிருப்பர். குறிப்பாக இவர்களுக்கு கடவுள் பக்தி மிகுதியாகவே இருக்கும். ராட்சதம்: சுய ஊக்கம், ஞானம், வீரம், தான தர்மம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர் போன்ற இயல்புகளை கொண்டிருப்பவர்கள் ராட்சத குணவான்கள். தற்புகழ்ச்சிக்கு ஆசை உள

மனிதர்களுக்கு 3 கண்கள் இருக்கிறது… எப்படி கண்டுபிடிப்பது?

Image
வெறுங்கண்ணால் சூரிய ஒளியை பார்த்துவிட்டு கண்களை மூடினால் சிவப்பு நிறமாக தோன்றுவதை நாம் பார்த்திருப்போம். கண்ணை மூடிக்கொண்டு பார்த்திருப்போம். ஆம், நமது இரண்டு கண்களுக்கு அப்பால் நெற்றியின் மீதுள்ள மூன்றாம் கண்தான் இந்த நிறத்தை கண்டு உணர்த்தி நம் மூளைக்கு தகவல் கடத்துகிறது. நெற்றி முழுவதும் தோலால் மூடப்பட்டுள்ளபோது எப்படி நெற்றிக்கண் செயல்படுகிறது? அது எங்கே இருக்கிறது? என அறிந்துகொள்ள எல்லோருக்கும் ஆர்வம் மிகுதியாகவே இருக்கும். 7 சக்கரங்கள் 7 சக்கரங்கள் பொதுவாகவே மனித உடலில் 7 சக்கரங்கள் இயங்குகின்றன. அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை மற்றும் சகஸ்ரகாரம். இதில் ஆக்ஞை எனப்படும் ஞான சக்கரம் அமைந்துள்ள இடம்தான் நெற்றிக்கண். இந்த சக்கரத்தை சர்வசாதரணமாக யாராலும் இயக்க முடியாது. கடுமையான தியானம், தவம் மேற்கொள்ள வேண்டும். மனித உயிர்சக்தியை மூலாதாரத்தில் இருந்து தூண்டி எழுப்பி, இறுதியாக சகஸ்ரகாரம் வரை கொண்டு வருபவர்களே சித்தர்கள் அல்லது ஞானிகள் என அழைக்கப்படுவர். இந்த ஆக்ஞை சக்கரத்தை இயக்குபவர்கள் சமூக வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். ஞானம், தெளிவு

எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கினால் வாழ்வில் முன்னேறலாம் ?

Image

பேன் தொல்லைக்கு ஒரே நிரந்தர தீர்வு இதுதான்!

Image
சர்வதேச அளவில் பெண்களின் தலைக்கு மேல் இருக்கும் முக்கிய பிரச்சினை பேன் தொல்லைதான். கூந்தலின் அழகை கெடுப்பதிலும், தலையில் கடித்து உயிரை வாங்குவதிலும் பேன்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஷாம்பு, எண்ணெய்கள், ஆயுர்வேதம் என இணையத்தில் உலவிய டிப்ஸ், பக்கத்து வீட்டம்மா சொன்ன டிப்ஸ், வீட்டில் அம்மா சொன்ன டிப்ஸ், சொந்தக்காரப் பெண்கள் சொன்ன டிப்ஸ், தொலைக்காட்சியில் வரும் பெண்களுக்கான நிகழ்சிகளில் பிரபலங்கள் சொன்ன டிப்ஸ் என ஒரு குயர் நோட்டு முழுவதும் டிப்ஸாக எழுதி வைத்து, அதை வொர்க்-அவுட் செய்தாலும் பேன் தொல்லை உங்களை விடுவதில்லை. ஹேர் கேருக்குச் சென்றால் உங்கள் தலையில் பேன் எடுத்துக்கொண்டே, உங்கள் பர்சிலும் காசை உருவிவிடுவார்கள். ஆனால் பாருங்கள், அவர்கள் செய்யும் சிகிச்சையை நாமே வீட்டிலேயே செய்து விடலாம். என்ன அந்த சிகிச்சை? எப்படி செய்வது? என்று கேட்கிறீர்களா? தேவையான பொருட்கள்: பேன் சீப்பு வெள்ளை வினிகர் (White Viniger) மவுத் வாஷ் (Mouthwash) பிளாஸ்டிக் பேக் (Shower Cap) முதலில் தலை முடியை மவுத் வாஷ் கொண்டு கழுவுங்கள். பிறகு தலைமுடியை சுரட்டி, தலையை பிளாடிக் பேக் கொண்டு இறுக்