Posts

Showing posts from August, 2017

இந்த 30 நதிகளை இணைத்தால் தண்ணீர் பஞ்சமின்மை சாத்தியமே!

Image
இ மாலயத்திலிருந்து குமரி வரை ஓடும் இந்தியாவின் ஜீவ நதிகளை இணைப்பது குறித்த பூர்வாங்க முடிவுகளுக்கு இப்போதுதான் வந்துள்ளது இந்திய அரசு. நாட்டின் நதிகளை இணைத்துவிட்டால் விவசாயமும், பொருளாதாரமும் தழைத்தோங்கும் என்பதை இதுவரை நாம் செவிவழிச் செய்தியாகவும், வல்லுனர்களின் கூற்றாகவும் கேள்விப்பட்டிருப்போம். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முதல்கட்ட நகர்வாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2009ம் ஆண்டிலேயே மத்திய அரசிடம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. நாட்டில் உள்ள முப்பது ஜீவநதிகளை இணைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறியது. இமாலயத்த பிறப்பிடமாக கொண்டிருக்கும் கோசி, காக்ரா, கங்கா, யமுனா,மானஸ், சாரதா, தீஸ்தா உள்ளிட்ட 14 ஆறுகளையும், தென்னிந்தியாவின் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பாலாறு, பெண்ணாறு உள்ளிட்ட 16 ஆறுகளையும் இணைப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகள் முழுவடிவம் பெறுவதற்குள் மூன்று அரசுகள் மாறிவிட்டன. திட்டமதிப்பிலும் அபார உயர்வு ஏற்பட்டது. மகாநதி-கோதாவரி நதிகளையும், கோதாவரி-கிருஷ்ணா நதிகளையும் இணைக்க முடியும். கோதாவரி-கிருஷ்ணா நதிகளை மூன்று இடங்களில் இணைக்க

இந்தியாவின் எதிர்காலத்தை சுதந்திரத்திற்கு முன்பே உரக்கச் சொன்ன இங்கிலாந்து பிரதமர்!

Image
இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை நாம் சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருப்போம். சுதந்திரம் பிறந்த கதையையும், அதற்காக நடந்தேறிய மீப்பெரும் போராட்டங்களையும் அதன் தாக்கங்களையும், தியாகங்களையும் நாம் கேட்டு வளர்ந்துள்ளோம். ஆனால் நமது நாட்டினுடைய சுதந்திரத்தை அடைவதற்கு முன்பாக அதை கைப்பற்றியிருந்தவர்களில் மிக முக்கியமானவர் இங்கிலாந்து இளவரசர் வின்சென்ட் சர்ச்சில். எந்த நிலையிலும் இந்திய நாடு சுதந்திரத்தை பெற்றுவிடக் கூடாது என்பதிலும் இந்திய அரசியல் மலர்ந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருந்தார். இரண்டாம் உலகப் போர் மற்றும் அதன் துவக்கப் போர்களில் முன்னோடியாக திகழ்ந்த இவரது நடவடிக்கைகள் இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு தடையாக இருந்தது? அவர் ஏன் இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் என சொல்லப்படுபவர்களை புறந்தள்ளினார்? என்பதற்கான காரணங்களை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம். காந்தி கேட்ட கேள்வி: இரண்டாம் உலகப்போர் வந்தபோது இங்கிலாந்தினுடைய பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஹிட்லரின் நாஜிப்படைகளை எதிர்ப்பதற்காக இந்தியத் துருப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார். இந்தியாவின் துருப்புகளை அவ்வாறு அவர் தவறாக

சென்னை மாநகரில் ஏப்ரலில் மைனஸ் 3 டிகிரியான வெப்பநிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Image
1815-ம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த அதிசயம் சென்னையில் எப்போதும் 3 பருவநிலைகளே உள்ளன. வெப்பம், அதிவெப்பம், மேலும் வெப்பம் என்ற 3 நிலைகளையே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் சென்னையில் கடும் கோடையான ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியத்துக்கும் கீழே வெப்ப நிலை சென்றது என்று நான் கூறினால் மக்கள் என்னை நம்புவார்களா? இவ்வாறு கூறினால், இது ஒரு முட்டாள்கள் தின ஜோக் என்று தட்டிக் கழித்து விடுவார்கள் என்பதே உண்மை. ஆனால் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில், கோடை மாதமான ஏப்ரலில் வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றது. அதாவது 1815-ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்தது. 1815, ஏப்ரல் 24-ம் தேதி காலை வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி மைனஸ் 3 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை குறைந்தது. பனிப்பொழிவு கூட இருந்ததாக சில ஆதாரமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது சற்று மிகைப்படுத்தலாகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. 1815, ஏப்ரல் 28-ம் தேதி வெப்ப நிலை மைனஸ் 3 டிகிரிக்கு சென்றதற்கான காரணம், இந்தோனேசியாவில் தொலைதூரம் இருந்த மவுண்ட் தம்போரா என்ற எரிமலை வெடித்துச் சி

இந்தியாவில் சூரியகிரகணம் இல்லை; ஆனால் பாதிப்பு உண்டு…!

Image
இன்று நடக்கவிருக்கும் சூரியகிரகணம் அமெரிக்காவில் மேற்கத்திய நேரக்கணக்குப் படி, மதிய வேளை 1 மணிக்கும், பசிபிக் நேரக்கணக்கின் படி காலை 9.50 மணிக்கும் தோன்றும் என நாசா தெரிவித்துள்ளது. அதாவது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 21ம் தேதியன்று இரவு 10.39 மணிக்கு மேல் கிரகணம் உச்சம் பிடிக்கிறது. ஆனால் இந்தியாவில் கிரகணம் தெரியாது. மேலும் கிரகண கதிர்வீச்சுகளால் எவ்வித பதிப்புகளும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முழு கிரகணமும், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரையளவு கிரகணம் மட்டுமே தென்படும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. பாதிப்புகள் உண்டு: பொதுவாக 15 நாட்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் இரண்டும் ஏற்பட்டிருப்பதால், நாட்டின் அரசாங்க விஷயங்களில் பாதிப்புகள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படலாம். இயற்கை பேரிடர்கள் உருவாகவும், பிரபலமானவர்கள் மரணம் எய்தவும் நடக்கலாம் என பஞ்சாங்கம் கூறுகிறது. கடல்சீற்றம், தொடர்மழை, வெள்ளம் என இயற்கை சேதங்களும் ஏற்படலாம். அல்லது நாட்டின் பொருளாதார அம்சங்களான பங்குச்சந்தைகள், நிதியியல் வளர்ச்சிகளில் பாதிப்புகள் நிக

உம்பளாச்சேரி மாடுகள் பற்றிய காணொலி.

Image
உம்பளாச்சேரி மாடுகள் பற்றிய காணொலி.

திருக்குறளை பற்றி நீங்கள் அறியாத அரிய தகவல்கள்!

Image
பதினெண் கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால், உலகப்பொதுமறை என போற்றப்படும்  திருக்குறளும்  திகழ்கிறது. அறம், பொருள், இன்பம் என முப்பால்களாகிய இவை மூன்றும் இயல் எண்ணும் பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அதிகாரங்களைக் கொண்டதாகும். ஒவொரு அதிகாரமும் பத்து பாடல்கள் வீதம் 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குரல்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இப்பாடல்கள் அனைத்தும் தொன்மையான குறள் வெண்பா வகையை சேர்ந்தவை ஆகும். இங்கே இந்நூலினுடைய மற்ற சிறப்புக்களை தொகுத்து வழங்கியுள்ளோம். திருக்குறள் முதல்முதலாக புத்தகமாக அச்சிடப்பட்ட ஆண்டு 1812. திருக்குறளின் இயற்பெயர் முப்பால் ஆகும். இந்நூல் ‘அ’கரத்தில் தொடங்கி ‘கை’ரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் 14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194 தமிழ் எழுத்துக்கள் 247ல் 37 எழுத்துக்கள் மட்டும் திருக்குறள் நூலில் இடம்பெறவில்லை. திருக்குறளில் அனிச்சம் மற்றும் குவளை என இருமலர்கள் இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பலம் நெருஞ்சி திருக்குறளில் இடம்பெற