மேஷம் முதல் மீனம் வரை ராகு-கேது பெயர்ச்சியின் உச்ச பலன்கள்!


நவகிரகங்களில் ராகும்வும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி ஆடி மாதம் 11ம் தேதியன்று, அதாவது ஆங்கில மாதத்தில் நேற்று (ஜூலை 27ம் தேதியன்று) ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஆவணி 1ம் தேதி, அதாவது ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ஜாதகப் பலன்களுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கமும், கோயில் விசேடங்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கமும் பின்பற்றப்படுகிறது. ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது கிரகங்கள் வழங்குகின்றன என்கிறது சோதிட சாத்திரம். அதன்படி இந்த ராகு-கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலாபலன்கள் கிடைக்கும். ராகு-கேது கிரகங்களின் இணைப் பெயர்ச்சியினால் மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கிரகப் பரிகாரம் செய்யலாம். அப்படி செய்வதால் மேற்கூறப்பட்ட பலன்கள் கிடைக்கும். இனி மேஷம் முதல் துலாம் என முதல் 6 ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

 

மேஷம்:

இதுவரை சிம்ம ராசியில் இருந்த ராகு, கடக்க ராசியில் பகை நிலை பெற்று கல்வி, வியாபாரம், நிலம், வீடு, வாகன யோகம், சொத்து சுகம் உள்ளிட்ட பலன்களை தருவார். கடக ராசியுடன் பகை நிலை பெற்றாலும் கடக்க ராகு அதிக பலன்களை உண்டாக்குவார். வேலையில் ப்ரோமோஷன், தொழில் முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருக்கும் வில்லங்கம் நீங்கும். தடைபட்ட திருமணம் கூடிய விரையில் நடக்கும். நல்ல பெயர் எடுக்கிறேன் என தேவையற்ற சில காரியங்களில் இறங்கி இருக்கும் பெயரையும் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

பரிகாரம் – ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யவேண்டும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காளி வழிபாடு, சனிக்கிழமை அனுமன் வழிபாடு செய்க

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்கு 3ம் இடத்திற்கு ராகுவும், 9ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். 3ம் இடத்தில் உங்களுக்கு தைரியம், துணிச்சல், கோபம், வீரம், போகம், பலம் உண்டாகும். மந்த நிலை அகன்று, தாமதங்கள் நீங்கி, எண்ணிய காரியம் விரைந்து முடியும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி கிடைக்கும். கோர்ட் வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பாகும். திருமண சுபகாரியம், புத்திர யோகம் கைக்கூடும். வெளிநாட்டு யோகங்கள், புதிய தொழில் அமையும். கூட்டாண்மை தொழில் இறங்க வேண்டாம். கடன்தொல்லைகள் தீரும். கணவன்-மனைவி இடையே புரிதலும், தாம்பத்தியமும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

பரிகாரம் –  செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை. வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுதல்.

 

மிதுனம்:

ராசி நண்பர்களுக்கு ராகு பகவான் இரண்டாம் வீடான தனம் குடும்பம் வாக்கு உங்கள் ராசியின் இரண்டாம் இடத்திற்கு வரும் ராகுவால் சோதனை மேல் சோதனை வரலாம். மனதிடத்துடன் செயல்பட்டு ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வேலைவாய்ப்புகளில் இருக்கும் தொல்லைகளும், நெருக்கடிகளும் நீங்கும். திருமண வரன் தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிட்டும். நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேரு அடைவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தினரையும், உறவினர்களையும் அனுசரித்து செல்ல வேண்டும். கேது பகவான் உங்களுக்கு நிறைய தேர்வுகளை வைப்பார். எனவே எதிலும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பணம், நகை போன்ற பொருளாதார விடயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் – வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம், பௌர்ணமியன்று அம்மன் வழிபாடு.

 

கடகம்:

கடந்த 18 மாதங்களாக 2ம் இடத்தில் இருந்த ராகுவும் 8ம் இடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தனர். தற்போது ஜென்ம ராசிக்கு வரும் ராகுவால் குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில், வேளைகளில் இருந்த மனஉளைச்சல் நீங்கி உற்சாகம் பிறக்கும். சிலருக்கு எந்த காரியத்தை தொட்டாலும் தடைகள் உருவாகும். கேது 7ம் இடத்திற்கு வருவதால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் வரும். புதிய மனோதிடத்துடனும், பொறுமையுடனும் அணுக வேண்டும். படபடப்பு, டென்சன், மன உளைச்சல் உங்களை தீண்டிப்பார்க்கும். அவற்றை பக்குவத்துடன் சமாளித்து அனுப்புங்கள்.

பரிகாரம் – சனியன்று நவகிரகத்திற்கு அர்ச்சனை, வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு தீபம், சுண்டல் மாலை. பௌர்ணமியன்று அம்மன் வழிபாடு.

 

சிம்மம்:

ராகு பகவான் உங்கள் ராசியில் 12ம் வீடான செலவுகள், விரயம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு வருகிறார். வாழ்க்கையில் மிகுந்த சோதனைகளை கடந்து வந்த உங்களுக்கு இனி ஆறுதல் கிடைக்கும். சனிப்பெயர்ச்சிக்கு பின் எல்லா பிரச்சினைகளில் இருந்தும் வெளிப்படலாம். தொழில் முன்னேற்றம், பணியில் உயர்வு, இனிய தாம்பத்தியம் என போகங்கள் கிடைத்தாலும், ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத நேரத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். கேது பகாவான் 6ம் இடத்திற்கு மாறுவதால், எதிரிகள், கடன்கள், நோய்கள், பயம், துன்பம் நீங்கும். கேடு நன்மைகளை வாரி வழங்குவார்.

பரிகாரம் – சனியன்று பெருமாளுக்கு துளசி மாலை, அர்ச்சனை. கார்த்திகை விரதமிருந்து முருகனுக்கு தீபம், காலையில் சூரிய வழிபாடு.

 

கன்னி:

உங்கள் ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில ராகும், 6ம் இடத்தில கேதுவும் இருந்ததால் செலவுகள், பண விரயம், நேர விரயம் அதிகமாக இருந்தது. தற்போதைய கிரகப்பெயர்ச்சியால் இனி பொருளாதாரத்தில் பலவித மாற்றங்களை சந்திப்பீர்கள். படிப்பிற்கு தகுந்த வேலை, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், தொழிலில் லாபம், தன லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று கடன்களை அடைத்துவிடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. கோயில் பயணங்கள், யாத்திரைகள் செல்வீர்கள். புதுமுயற்சிகள் கைக்கூடும், புத்தி சிந்தனைகள் சீராகும். கேது 5ம் இடத்திற்கு வருவதால் பூர்வபுண்ணியம் சேரும். கற்பனை வளம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள புரிதலின்மை, மன வேற்றுமை நீங்கி இல்லறம் சிறக்கும். காரிய சித்தி கிடைக்கும். சொந்த வீடு கட்டி குடியமரலாம்.

பரிகாரம் – வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு. வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை. பிரதோஷ நாளன்று நந்திக்கு நெய்தீபம் ஏற்ற வேண்டும்.

துலாம்:

இதுவரை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த ராகு, ஜீவன ஸ்தானத்திற்கு வருகிறார். தொழிலில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். புதிய தொழில் அல்லது வேலைவாய்ப்புகள் கிடைக்கும். காரியங்களில் துணிச்சலாக செயல்படுவீர்கள். கஷ்டங்கள் தீர்ந்து குடும்பத்திலும், வெளியிலும் நிம்மதி கிடைக்கும். ஜென்மத்தில் குரு வருவதால் எந்த விடயத்தையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துவிட்டு செய்யுங்கள். அகல கால் வைத்தால் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்வீர்கள். வாங்கிய கடன்களை அடைப்பீர்கள். கடன் சுமை குறையும்.

பரிகாரம் – ராகு-கேது பகவானுக்கு அச்சனை. வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு. சுவாதி நட்சத்திரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு தீபம்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் குருபகவான் 9ம் இடமான தந்தை, குரு, தெய்வம், பயணம், யாத்திரை என சொல்லக்கூடிய காரகங்களை குறிக்கும் ஸ்தானத்திற்கு வருகிறார். இதன் மூலம் புதிய முயற்சிகள் கைகூடும். முதலீடு போடாத தொழில்களான கமிஷன், தரகு, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களால் வருமானம் அதிகரிக்கும். மொத்தத்தில் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். மனதிடத்துடன் செயல்பட்டு ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வேலைவாய்ப்புகளில் இருக்கும் தொல்லைகளும், நெருக்கடிகளும் நீங்கும். திருமண வரன் தேடி வரும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிட்டும். நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேரு அடைவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.

பரிகாரம் – சனியன்று அனுமனுக்கு நெய்தீபம். பௌர்ணமி நாளன்று கிரிவலம். செவ்வாய் முருகன் வழிபாடு.

 

தனுசு:

இதுவரை 9ல் இருந்த ராகு பகவான் ஆயுள், சிந்தனை, அறிவாற்றல், துக்கம், மர்மம் ஆகிய காரகங்களை உடைய ஸ்தானத்திற்கு வருகிறார். பாவ கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும்போது கெடுதல்களை கொடுத்து பின் நன்மைகள் செய்வார் ராகு. உங்கள் ராசியின் அதிபதி குருபகவான் இருப்பதால் பிரச்சினைகளே இல்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற நிலை மாறும். திருமண வரன், புத்திர பாக்கியம், வாகன யோகம், வீடு-மனை யோகம் உண்டு. ஒரு கடன் தீர்ந்தால் அடுத்த கடன் உருவாகலாம். ஒருவித தயக்கம், பயம், படபடப்பு, அதிருப்தி என்ற சூழ்நிலை ஏற்படும்போது கேது 2ம் இடத்திற்கு வருவார். இதனால் தொழில் அல்லது வேளைகளில் பணியிட மாற்றம் உண்டாகும். பல தடைகளுக்குப் பின் வெற்றி காண்பீர்கள். நல்லதும் கேட்டதும் மாறி மாறி நடக்கும்.

பரிகாரம் – வெள்ளியன்று நாக தேவதை வழிபாடு. சனிக்கிழமை அனுமனுக்கு அர்ச்சனை. பிரதோஷத்தில் நெய்தீபம்.

 

மகரம்:

ராகு ஜென்ம ராசிக்கு ஏழாம் பாவத்திற்கு மாறுகிறார். இதனால் ராகு-கேது பெயர்ச்சியை விட இது நல்ல மாற்றம் தரலாம். இன்னல்கள் விலகி, குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கி, தொழில்நிலை மேம்பட்டு, உங்கள் முயற்சிகளும் வெற்றி பெரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் எல்லாம் நடக்கும். டிசம்பர் மாதம் வரை மனதில் சிறுசிறு குழப்பங்கள் நிலவினாலும், சனிப்பெயர்ச்சி ஆனதும் நிம்மதியான சூழல் உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். புதிய மனை வாங்குவீர்கள். ஏழரை சனி வருவதால் நீங்கள் பயப்பட வேண்டாம். ரிஷபம், துலாம், மகரம், கும்பம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் பாதிப்பு தர மாட்டார்.

பரிகாரம் – வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு தீபம். சனிக்கிழமை கிருஷ்ணருக்கு அர்ச்சனை.

 

கும்பம்:

ராகு ஆறாம் இடத்திற்கும், கேது 12ம் இடத்திற்கு வருகிறார்கள். பொதுவாக சனி பகவான் ராசியில் சஞ்சரிக்கும் ராகு-கேதுவால் எந்த வித பெரிய பாதிப்பையும் கொடுக்க முடியாது. இதனால் இந்த பெயர்ச்சியில், புதுமுயற்சிகள் கைக்கூடும். கால்வலி உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி கிடைக்கும். கோர்ட் வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக தீர்ப்பாகும். திருமண சுபகாரியம், புத்திர யோகம் கைக்கூடும். வெளிநாட்டு யோகங்கள், புதிய தொழில் அமையும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் கிட்டும். நீண்டநாள் குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப்பேரு அடைவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.

பரிகாரம் – செவ்வாயன்று கேதுவுக்கு அர்ச்சனை. ஞாயிறு ராகுகாலத்தில் காளியம்மன் வழிபாடு. வெள்ளியன்று லட்சுமிக்கு நெய்தீபம்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் ஆட்சி வீட்டில் பிறந்த தங்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பையும், நல்லோர் நட்புடன் விளங்கும் தாங்களுக்கு ராகு 5ம் பாவத்துக்கும், கேது 11ம் பாவத்துக்கும் மாறுகிறார்கள். இதனால் எடுக்கும் காரியங்களை உடனுடனே செய்து முடிப்பீர்கள். நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். மகள் அல்லது மகள் வகையில் பெருமை படத் தக்க சம்பவங்கள் நடக்கலாம். போட்டி, பொறாமைகள், கடன்கள் அனைத்தும் உங்களிடமிருந்து விலகும். வெளிநாடுகளில் வேலை எதிர்ப்பார்த்தவர்களுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும். முயற்சிகளை கைவிட வேண்டாம்.

பரிகாரம் – சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை. வியாழனன்று ராகவேந்திரருக்கு நெய்தீபம். வெள்ளியன்று மாரியம்மன் வழிபாடு.

 

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்