கோடை வெயிலில் கூந்தல் வெடிப்பை தவிர்க்க இதல்லாம் பண்ணுங்க
கு ளிரைச் சபித்து, கோடைக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வெயிலைத் திட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கோடை சீசன் முழுவதுமாக ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வியர்வை வழிந்து எப்போதும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற வாடையை சகித்துக்கொள்வது பலரும் எதிர்கொள்கிற சவால். அதிலிருந்து விடுபட இயற்கையான வழிகளைக் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா. * தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் வைத்திருந்து அலசவும். இது வியர்வை சேர்ந்து, கூந்தலில் இருந்து வரும் வாடையைத் தவிர்க்கும். * சிறிதளவு தண்ணீரில் புதினா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்து மூடி வையுங்கள். ஆறியதும் அந்தத் தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து உபயோகித்தால் வியர்வை வாடை வீசாது. * தண்ணீரில் அரோமா ஆயில் கலந்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். காலை நேரத்தில் பெப்பர்மின்ட், வெட்டிவேர், ஜாஸ்மின் அல்லது யிலாங் யிலாங் போன்றவற்றில் ஒன்றையும், இரவில் லேவண்டர் ஆயிலையும் 5 துளிகள் கலந்து குளிக்கலாம். பகல் நேரத்தில் மனதை உற்சாக