Posts

கோடை வெயிலில் கூந்தல் வெடிப்பை தவிர்க்க இதல்லாம் பண்ணுங்க

Image
கு ளிரைச் சபித்து, கோடைக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வெயிலைத் திட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கோடை சீசன் முழுவதுமாக ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வியர்வை வழிந்து எப்போதும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற வாடையை சகித்துக்கொள்வது பலரும் எதிர்கொள்கிற சவால். அதிலிருந்து விடுபட இயற்கையான வழிகளைக் கூறுகிறார் அழகுக்கலை நிபுணர் மேனகா. *  தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் வைத்திருந்து அலசவும். இது வியர்வை சேர்ந்து, கூந்தலில் இருந்து வரும் வாடையைத் தவிர்க்கும். *  சிறிதளவு தண்ணீரில் புதினா இலைகள் சேர்த்துக் கொதிக்க வைத்து மூடி வையுங்கள். ஆறியதும் அந்தத் தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து உபயோகித்தால் வியர்வை வாடை வீசாது. *  தண்ணீரில் அரோமா ஆயில் கலந்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். காலை நேரத்தில் பெப்பர்மின்ட், வெட்டிவேர், ஜாஸ்மின் அல்லது யிலாங் யிலாங் போன்றவற்றில் ஒன்றையும், இரவில் லேவண்டர் ஆயிலையும் 5 துளிகள் கலந்து குளிக்கலாம். பகல் நேரத்தில் மனதை உற்சாக

இயற்கையாக உடல் எடையை அதிகரிக்க உதவும் பழங்கள்

Image
உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் பல வழிகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் பலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டுமெனில், கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்து வருவார்கள்.  இருப்பினும் அப்படி கொழுப்புக்களை அதிகம் சேர்த்தால், அவை நாளடைவில் பல நோய்களுக்கு வழிவகுத்துவிடும். ஆகவே ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க  ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம் . இத்தகைய பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகம் இருப்பதால், அவை ஒருவருக்கு தேவையான உடல் எடையைப் பராமரிக்க உதவும். பொதுவாக இந்த பழங்களை உடல் எடையை குறைக்கத் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்த பழங்களானது ஒருவரின் உயரத்திற்கு தேவையான உடல் எடையைப் பெறவும் உதவியாக இருக்கும். இங்கு உடல் எடையை அதிகரிக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!! அவகேடோ எடையை அதிகரிக்க வேண்டுமானால் அவகேடோவை சாப்பிடுங்கள். ஏனெனில் இவற்றின் ஒரு பெரிய பழத்தில் 322 கலோரிகள் உள்ளது. மேலும் இவற்றில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவை இதயத்திற்கு

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!

Image
பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில் தீமை தான் நிறைந்து இருக்கின்றன. இந்த வகையில் கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்… தயாரிப்பு முறை! கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும். உறக்கம்! உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். காய்ச்சல்! உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது. அதிக உடல் சூட்டல் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோரைப் ப

பழைய டூத் பிரஷ்-ஐ பயனுள்ளதாக மாற்ற சில டிப்ஸ் !

Image
டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்கை நீக்க : இரண்டு டைல்ஸ்கள் ஒன்று சேரும் இடத்தில் அழுக்குகள் கோடு போன்று தங்கிவிடும். மாப் போட்டுத் துடைத்தாலும் அழுக்குகள் போகாது. அதனால் டைல்ஸை சுத்தம் செய்யும் போது பிரஷால், இடுக்குகளில் தேய்த்து துடைத்தால் அழுக்கு நீங்கி தரை முழுவதும் சுத்தம் ஆகும். சீப்பை சுத்தமாக்குவதற்கு : சீப்பை சுத்தம் செய்வதற்கு சூடான நீரில் சோப்பு தூளை கலந்து அதில் சீப்பை ஊற வைக்கவும். பின்பு சிறிது நேரம் கழித்து பிரஷால் சீப்புகளின் இடுக்கில் உள்ள அழுக்குகளை தேய்த்து எடுத்தால் சீப்பில் உள்ள அழுக்குகள் எளிதாக நீங்கிவிடும். கேஸ் அடுப்பு : எண்ணெய் பசை படிந்த கேஸ் ஸ்டவ் பர்னர்கள், சிம்னி இவற்றை சுத்தம் செய்வதற்கு பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் சோப்பு தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால் தேய்த்து துடைத்தால் எண்ணெய் பசைகள் நீங்கிவிடும். காலணிகள் : ஷூ, செருப்பு முதலான காலணிகளை சோப்பு நீரால் பிரஷை வைத்து தேய்த்து துடைத்தால் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். நன்கு சுத்தம் செய்த பிறகு ஷூ -க்கு பாலிஷ் போட்டால் ஷூக்கள் புதிது போல் இருக்கும். புருவம், மீசை மற்ற

அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்?

Image
நம் அன்றாட வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் திதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி "அட்சய திருதியை" எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பல நல்ல பலனை தரக்கூடியது.  இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 5ம் நாள் புதன்கிழமை (18-04-2018) அன்று வருகிறது. இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இந்நாளில் விலை உயர்ந்த பொருளை வாங்க இயலாதவர்கள் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்? • அட்சய திருதியை அன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விச் செல்வம் பெருகும். • அட்சய திருதியை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் பாவம் போகும். பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் முக்கூடல் எனப்படும் மூ

அட்சய திருதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா?

Image
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு "கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது" என்று பொருள். அதாவது 'க்ஷயம்' என்றால் கேடு, 'அக்ஷயம்' என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும். வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் தங்கத்தை வாங்கி அணிய வேண்டும் என்பதெல்லாம் ச‌ரியானத‌ல்ல. பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள். அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது. மஞ்சள் துணியில், சிறிது அரிசி எடுத்துக் கட்டி பீரோவிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி டப்பாவிலும் போட்டு வைத்தால் என்றும் குறைவில்லாத உணவு கிடைக்கும். அதற்கடுத்து மஞ்ச

அட்சய திருதியில் முக்கியமாக இதைச் செய்ய மறக்காதீங்க!

Image
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு "கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது" என்று பொருள். அதாவது 'க்ஷயம்' என்றால் கேடு, 'அக்ஷயம்' என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும். அட்சய திருதியில் பல்வேறு விஷேசங்கள் இருந்தாலும், இதை மட்டும் செய்ய மறக்கக் கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அது என்ன என்றால்?  அட்சய திருதியை அன்றைக்குத் திதி கொடுக்க வேண்டும். முன்னோர்களை நினைத்துத் திதி கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படித் திதி கொடுக்கும் போது வாழைக்காய், பச்சரிசி, துணி, பணம் கொடுத்துத்தானே திதி கொடுக்கிறோம். அதுவும் ஒரு வகையான தானம்தானே. அதாவது மந்திரங்கள், வேதங்கள் படிப்பவர்களை மதித்து தானம் தருவது. அட்சய திருதியில் திதி கொடுப்பதினால் 30 வருடம் திதி கொடுத்த பலனாம். இதுவரை நீங்கள் சரிவர திதி கொடுக்கவில்லை என்றாலும், திதி கொடுப்பதில் ஏதேனும் தவறு இருந்திருந்தாலும் அதைச் சரிசெய்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். எனவே, முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறக்காதீர்கள்.