Posts

Showing posts from July, 2017

ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்*!!

Image
ஷீரடியில் உள்ள சாயிபாபா பளிங்கு சிலை உருவான விதம்*!! 1918- ம் வருடம் விஜயதசமி அன்று, சாயிபாபா மஹாசமாதியடைந்தார். நாக்பூரை சேர்ந்த செல்வந்தரும், பாபாவின் அடியவருமான ஸ்ரீமான்புட்டி அவர்களால் கட்டப்பட்ட வாதாவில், முரளி கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக அமைக்கப்பட்ட மேடையில் பாபாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, நான்கு கால ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், கிரமமாக நடந்து வந்தன. விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்தன. முப்பத்தாறு வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீர்டி சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. உடனே அதை ஏலத்தில்

பெண்கள் ஏன் வளையல் அணிகிறார்கள்? நம்பமுடியாத காரணங்கள்!

Image
பெண்களுக்கு என்றால் வளையல், மூக்குத்தி, தோடு, நெத்திச்சுட்டி, அட்டி என ஏராளமான ஆபரண அணிகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த அணிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் சுவாரசியமான காரணங்கள் இருக்கின்றன. வளையல் அணிவதிலும் கூட பெண்களுக்கு சில அபூர்வ பலன்கள் அடங்கியிருக்கிறது. ஆனால் இன்றெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வளையல் அணிவதில்லை. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் அணிகிறார்கள். நகரங்களில் வளையல் என்பது ஃபேஷன் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டு பல யுகங்கள் ஆகிவிட்டன. கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் போன்ற அதியற்புத தன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை அணிந்து கொள்ளும்போது, எழும் ஓசை சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த சாத்வீக-சைதன்ய அதிர்வலைகளுக்கு உண்டு. பெண்களுக்கு வளைகாப்பு என்ற சுபநிகழ்ச்சி இந்தியா முழுவதும் பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல் அணிவிப்பது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எல்லா வயது பெண்களுக்கும் வளையல்கள் சீராக கொடுக்க

மேஷம் முதல் மீனம் வரை ராகு-கேது பெயர்ச்சியின் உச்ச பலன்கள்!

Image
நவகிரகங்களில் ராகும்வும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி ஆடி மாதம் 11ம் தேதியன்று, அதாவது ஆங்கில மாதத்தில் நேற்று (ஜூலை 27ம் தேதியன்று) ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஆவணி 1ம் தேதி, அதாவது ஆகஸ்ட் மாதம் 17ம் தேதியன்று ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ஜாதகப் பலன்களுக்கு திருக்கணிதப் பஞ்சாங்கமும், கோயில் விசேடங்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கமும் பின்பற்றப்படுகிறது. ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது கிரகங்கள் வழங்குகின்றன என்கிறது சோதிட சாத்திரம். அதன்படி இந்த ராகு-கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு விதமான பலாபலன்கள் கிடைக்கும். ராகு-கேது கிரகங்களின் இணைப் பெயர்ச்சியினால் மேஷம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது. ரிஷபம், மிதுனம், கடகம்,

உங்கள் நினைவாற்றலை அதிக படுத்த சில யோசனைகள்..!

Image
1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும். 2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும். 3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம். 4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது. 5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics 6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்

இந்து மதம் கூறும் திருநீறு அணிந்து கொள்ளும் முறைகள்

Image
திருநீற்றை ஒருவருக்கு நாம் தரும் போதும், இல்லை நாம் பூசிக் கொள்ளும் போதும் . சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அனுஷ்டானம், சிவபூஜை செய்வோர் திருநீற்றைத் தண்ணீர் விட்டுக் குழைக்காமல் உச்சி, நெற்றி, மார்பு என இரு தோள்களிலும் பூசிக் கொள்ளுதல் வேண்டும். எக்காரணம் கொண்டும் திருநீர் கீழே சிந்துதல் கூடாது. அது போல கோயில்களில் நாம் நெற்றியில் ஈட்ட பிறகு எஞ்சிய திருநீற்றை கோயில் தூண்களில் போடுதலும் கூடாது. அதனை, ஒரு இலையில் மடித்து பத்திரப்படுத்தலாம் , முடிந்தால் மற்றவருக்குக் கொடுக்கலாம். ஆள்காட்டி விரலால் தொட்டு, பொட்டு போல் பூசுதல் கூடாது. நெற்றி நிறையப் பூசுதல் வேண்டும். அவ்வாறு திருநீற்றை நெற்றி நிறைய பூசும் போது , நமது முன் வினையால், பிரம்மன் நமது தலையில் எழுதியிருக்கும் கெட்ட முன்வினைப் பயன்கள் (மோசமான தலை விதிகள் ) ஈசனின் அருளால் (திருநீர் பூசும் போது) அழிக்கப்படும் என்பது ஐதீகம். அது போல, பையில் உள்ள திருநீற்றை தலைகீழாகக் கவிழ்த்தல் கூடாது. ஈர உடையுடனும், ஒற்றைத் துணி உடுத்திக் கொண்டும், ஆடை இன்றியும் திருநீற்றைப் பூசிக் கொள்ளுதல் கூடாது. திருநீறு, தருபவர் நிற்க நா

உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் தெய்வமே குலதெய்வம் ..

Image
உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஒடி வரும் தெய்வமே குலதெய்வம் .. நாம் வாழ்வதற்கு சுவாச காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். குழந்தைக்கு காது குத்துவது, முடிகாணிக்கை போன்ற தங்கள் வீட்டு முதல் விசேஷங்களை குலதெய்வ கோவிலில்தான் நிறைவேற்றுவார்கள். நம் இஷ்ட தெய்வம் என்னதான் சக்தி வாய்ந்த தெய்வமாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே வணங்க வேண்டும். காரணம், எப்படி நாம் ஒரு வீட்டுக்குள் செல்வதற்கு முன் அந்த வீட்டில் இருப்பவர்களின் அனுமதியை பெற்ற பிறகு நுழைகிறோமோ அதுபோல், மற்ற தெய்வங்கள் தன் பக்தர்களுக்கு உதவும் முன் குலதெய்வத்தின் அனுமதியை கேட்பார்கள். ஒரு வேலை அந்த குடும்பத்திற்கு குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனு

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

Image
கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ... நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் .. அந்த கலர்களின் அர்த்தம் , பச்சை - இயற்கை ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம் சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை கருப்பு - சுத்தமான ரசாயன கலவை . இனி டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள் . ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும்..

ஐயா கலாமின் பிறப்பும் வளர்ப்பும்

Image
இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களில் வடக்கே இருப்பது ‘காசி’ என்றால் தெற்கே இருப்பது ‘இராமேஸ்வரம்’ ஆகும். இவை இரண்டுமே சிவ தலங்கள் என்பது யாவரும் அறிந்தே. இப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த 'இராமேஸ்வரத்தில்’ 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் 'அவுல்பக் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர் - ஆசியம்மா' என்ற தம்பதிகளுக்கு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் அப்துல் கலாம். மரைக்காயருடைய குடும்பம் மிகவும் பெரிய குடும்பம். அதில் கலாம் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார். அப்துல் கலாமின் தந்தை ஒரு இஸ்லாமியராக இருந்த போதிலும் கூட அவரது தோழர்களில் பலர் இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த மத ஒற்றுமையை தனது குழந்தைப் பருவத்திலேயே பார்த்த கலாம் அவர்கள். தமது வாழ் நாள் முழுவதுமே அனைத்து மதத்தினரிடமும் மத நல்லிணக்கத்துடன் நடந்து கொண்டார். அத்துடன் தனது தாயாரிடம் நீதிக் கதைகளையும், பிறருக்கு உதவும் பண்பினை தந்தையிடமும் கற்றுக் கொண்டார். இப்படியாக வறுமையில் வளர்ந்தாலும். வறுமையிலும், செம்மை என்று சொல்வார்களே அந்த விதத்தில் தான் கலாம் வாழ்ந்தார்.

புதிய கீதை…!

Image
எது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது எது கிடைக்கவில்லையோ அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை! எது கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும் எதை நீ கேட்காமலிருந்தாய்? உன் நோக்கப்படி கிடைப்பதற்கு? எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்? அது நியாமாகக் கிடைப்பதற்கு? எது இன்று கிடைத்ததோ அது நாளையே உனக்கு அலுத்து விடும் அடுத்த நாள் உனக்கு அது வெறுத்து விடும்! கிடைப்பதன் அருமை அது கிடைக்கும் நொடி வரைதான் அடுத்த நொடி நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்! ஆகவே கேட்காமல் இரு! இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு! இதுவே கிடைப்பதின் நியதியும் பெறுவதின் சாரம்சமும் ஆகும்! சம்பவாமி யுகே! யுகே!