Posts

மண் பாத்திரங்கள் மூலம் சமைப்பதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா??

Image
மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது அதில் இருக்கும் நுண் துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகி கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே உள்ள நீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் பானையின் உள்ளே இருக்கும் நீர் எப்பொழுதும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். மண்பாண்டங்கள் கழுவுவதற்கு மிக எளிமையானவை ரசாயன பொருட்கள் எதுவும் கொண்டு கழுவ வேண்டாம் மேலும் எந்தக் கெமிக்கலும் நம் உடலுக்கு சேராது. பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது மிகவும் குறையும். எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது. பானையில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண்பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. மண்பண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.உணவில் மண்பாண்டங்களில் சமையல் செய்யும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும். பிரி

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது

Image
விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார். மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:- சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித

கோடையில் சாப்பிட மற்றும் சாப்பிட கூடாத உணவுகளை பற்றித் தெரியுமா???

Image
கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிக்க சில உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அதே போல், சில உணவு வகைகளை சாப்பிட கூடாது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். சாப்பிட வேண்டிய உணவுகள் :   கோடை காலத்தில்  தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். மண்பானை குடிநீர் மிகவும் நல்லது. இளநீர்  அதிகமாக பருக வேண்டும்.  நுங்கு  சாப்பிடலாம்.  பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். பழச்சாறும் அருந்தலாம்.  வெள்ளரி, தர்பூசணி  ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் இரு முறை  எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதன் மூலம் உடல் சூடு குறையும்.  வெயிலிலிருந்து வந்ததும் தாகத்தைக் குறைக்க தண்ணீருடன்  குளுக்கோஸ், எலுமிச்சை சாறு  போன்றவற்றை கலந்து குடிக்க தாகம் தணிவதோடு உடலுக்கு ஆற்றலும் கிடைக்கும். சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கம்பு கேழ்வரகு போன்றவற்றைக் கூழ் செய்தும் சாப்பிடலாம். தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சாப்பிடக் கூடாத உணவுகள் :           கார உணவுகளை தவிர்க்க வேண்டும்.  அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக சிக்கன் சாப்பிடக் கூடாது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மாம்பழம் சாப்பிடுவது உட

உங்கள் குழந்தையை தூங்க வைக்க கஷ்டமா இருக்குதா?

Image
குழந்தைகளை தூங்க வைப்பதே பெரும் கஷ்டமா இருக்குதா உங்களுக்கு தூக்கம் வந்தாலும் உங்க குழந்தைக்கு தூக்கம் வரமாட்டேங்குதா குழந்தையை தூங்க வைக்கிறதுக்கு சில டிப்ஸ் இருக்குது தெரிஞ்சிப்போமா.  எப்பவுமே குழந்தைக்கு தூக்கம் வந்தா சில அறிகுறி மூலமா தெரிஞ்சிக்கலாம். குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனிக்க வேண்டும் அந்த நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. அப்படி விளையாட்டு காட்டினாள் குழந்தை தூங்காமல் சுறுசுறுப்பாக விளையாட தொடக்கி விடும் இதனால் குழந்தையின் தூக்கம் கலைந்துவிடும். குழந்தைக்கு தூக்கம் வருவதற்கான அறிகுறியாக  மூக்கு மற்றும் கண்களை கைகளால் தேய்க்க ஆரம்பிக்கும். உட்காராமல் சாய்ந்து கொள்ளும் சில குழந்தைகள் தூக்கம் வருவதை அழுகை மூலமாக கூட உணர்த்தும். இந்த மாதிரி நேரத்தில் தொட்டிலிலோ அல்லது மெத்தையிலோ படுக்க வைத்து மெதுவாக தட்டி கொடுத்தால் போதும் தூங்கிவிடும். குழந்தைகள் தூக்குவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பே விளையாட்டு காட்டுவதை நிறுத்த வேண்டும் சில குழந்தைகள் பால் குடித்தால் நன்கு தூங்கி விடும் சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். புட்டிபால் கொடுப்பவர்கள் ல

காதுக்குள் பூச்சி நுழைந்தால் உடனே இதை செய்யுங்கள்

Image
காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? நாம் உட்க்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கி கொண்டிருக்கும் போதோ நம்மை அறியாமல் காதிற்க்குள் பூச்சிகள் நுழைந்தால் என்ன செய்வது? காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது ஒரு எண்ணெய் வகையே அல்லது உப்பு கரைத்த நீரையே காதில் விடவேண்டும். இவ்வாறு உற்றுவதினாள் என்ன நடக்கும் என்றாள் பூச்சிகள் பூச்சி திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளே இறந்து மேலே வந்துவிடும் இன்னும் பலர் தண்ணீர் ஊற்றுவார்கள் இவை தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதர்கான பிராண வாயு உண்டு பூச்சி கடித்து கொண்டுதான் இருக்குமே தவிர வெளியே வராது இன்னும் சிலர் பூச்சியின் உடம்பை பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் போது பூச்சியின் உடல் மட்டும்மே நம் கையில் வருமே தவிர அதன் தலை நமது காதில் உள்ள பகுதியை கடித்துவறூ கதிற்க்குள் தலை மாட்டிகொள்ளும் அகவே முதலில் பூச்சியை சாகடித்து விட வேண்டும்.பிறகு அப்புறப்படுந்த வேண்டும்

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!!

Image
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!! * தர்பூசணி பழம் சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது. * தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தை பொலிவடைய செய்யும். * இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட மல்பெர்ரி பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது. * நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பலம் இது. 1.41 மி

பெண்களின் இளமை கண்களில் தெரியும் வாங்க பார்க்கலாம்

Image
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இனிமையானவள் எவ்வளவு நல்லவள் என்பதை சொல்லி விடலாம் அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அதிகம் கண்களை சரியான முறையில் கவனிக்காமல் விடும் போது கண்களைச் சுற்றி கோடுகளும் கருவளையங்களும் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முன்பே கண்களுக்கு சோர்வையும் களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. சத்துமிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் போதிய உடற்பயிற்சி மற்றும் மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும் இவ்வாறு ஐந்து ஆறு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும் பாதுகாப