Posts

அதிக காலம் வாழும் செல்ல பிராணி நாய்களின் வகைகள்

Image
நாயின் வாழ்க்கை காலம் பல காரணிகளை பொறுத்து அமைந்துள்ளது. அதன் சொந்தக்காரர்களிடம் இருந்து கிடைக்கும் அக்கறை மற்றும் அன்பை தவிர, சில நாய்களின் ஆயுட்காலம் அதன் இனத்தை பொறுத்தே அமைகிறது. பொதுவாக நாயின் ஆயுட்காலம் 12 அல்லது 13 வருடங்களாக உள்ளது. ஆனால் சில இன நாய்கள் இதை விட அதிகமாகவும் வாழ்கிறது. நீண்ட காலம் வாழும் 10 நாய் இனத்தில் இதுவும் ஒன்றாகும். மேலும் சிஹுவாஹுவா என்பது மிகுந்த சிறிய இனத்தில் ஒன்றாகும். சிஹுவாஹுவா இனத்தின் ஆயுள் எதிர்பார்ப்பு சராசரியாக 15 முதல் 20 வருடங்களாகும். இந்த சிறிய இனம் குழந்தைகளிடம் கணிவாக நடப்பது ஈர்க்கத்தக்க அம்சங்களில் ஒன்றாக உள்ளது. நியூ கினியா சிங்கிங் நாய் ஒரு காட்டு நாயாகும். இதன் அதிகப்படியான ஆயுள் எதிர்ப்பார்ப்பு 18 வருடங்களாகும். இது காட்டு இனமாக இருந்தாலும் கூட மென்மையாகவும் நட்புடனும் பழகும். அதிக ஆயுளை கொண்ட நாய்களில் இதுவும் ஒன்றாகும். ஆஸ்திரேலியன் ஷெபர்ட் நாய்கள் அறிவுடன் இருக்கும். அதனால் தான் இது மிகவும் தேவைப்படுகிற இனமாக உள்ளது. இதன் ஆயுள் எதிர்ப்பார்ப்பும் 18 வருடங்கள் என்பதால் இதன் ஆயுத காலமும் அதிகமாக உள்ளது. டாஷந்த் நாய்களின் பெயர

மழை வரும் பொழுது எதனால் மண்வாசனை ஏற்படுகிறது

Image
முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் ,அதை ‘மண்வாசனை' என்று சொல்லிவிடுகிறோம்.அது எப்படி வருகிறது, எங்கேயிருந்து வருகிறது?  மண் மீது மழைத் துளிகள் பட்டவுடன் வேதிவினை நடப்பதால் மண்வாசனை தோன்றுகிறது.இந்தப் பாக்டீரியா வகைகள் உலகம் முழுவதும் மண்ணில் இழைகளாக வாழ்கின்றன. மண் காய்ந்து போகும்போது, இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன. மழை வரும்போது மழைத்துளிகள் மண் மீது விழும் வேகத்தில் இந்த வித்துகள் காற்றை நோக்கி மேலே வீசப்படுகின்றன. அதேபோல மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனை. இடி மின்னலுடன் மழை வரும்போது ஏற்படும் எனவே மழை வரும்போது அதிலிருந்து வரும் வாசம் மண்ணில் இருந்து வரவில்லை என்பதை தெரிந்துகொள்வோம் 

தெரிந்து இருக்க வேண்டிய சின்ன சின்ன அக்ரோனிம்ஸ்!

Image
ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ எளிதில் அழைக்க அதனின் முதல் எழுந்தை மட்டும் சுருக்கி அழைக்கின்றோம் அதனை ஆக்ரோனிம்ஸ் என்கிறோம். ஆனால் அன்றைக்கு எல்லோர் நினைவிலும் சுருக்கி அழைக்கபடும் எழுத்துகளே உள்ளது. அதனின் விரிவாக்கம் யாருக்கும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயல்வதில்லை. எல்லாத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் எழுத்துகளின் முழு அர்த்தத்தையாவது தெரிந்துக் கொள்ளவது நல்லது. டிபி (DP) - டிஸ்டாப் பிக்சர் எப்.எம் (FM) - ப்ரீக்வன்சி மாடியுலேஷன் எல்.சி.டி (LCD) - லிக்விட் க்ரிஷ்டல் டிஸ்ப்ளே எல்.இ.டி (LED) - லைட் எமிட்டிங் டயோட் கோல்டு (COLD) - க்ரோனிக் ஆப்ஸ்ரக்டிவ் லங் டிசிஸ் எல்.பி.டபல்யூ (LBW) - லெக் பீபோர் விக்கெட் எய்டிஸ் (AIDS) - ஆக்யூயர்டு இம்யூன் டிபிஷியன்ஸி சின்ரோம் ஐ.சி.யூ (ICU) - இன்டென்சிவ் கேர் யூனிட் பி.பி (BP)- ப்ளட் ப்ரெஷர் ஈ.சி.ஜி (ECG)- எலக்ட்ரோ கார்டியோ க்ராம்

கடல் நீர் உப்பு கரிப்பதன் நிஜமான காரணம்

Image
கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும்; அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இருக்கும்! ஏராளமான ஆறுகளும் நன்னீர் ஓடைகளும்தானே கடலில் கலக்கின்றன; அப்படியிருக்க இவ்வளவு அதிகமான உப்பு எங்கிருந்து வந்தது? அது பல இடங்களிலிருந்து வந்து சேர்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதில் ஒரு இடம், நாம் நின்றுகொண்டிருக்கும் நிலமாகும். நிலத்திலுள்ள மண் வழியாகவும், பாறைகள் வழியாகவும் மழைநீர் கசிந்து செல்கையில் சில உப்புகளையும் அவற்றின் பாகமான இரசாயனங்கள் உட்பட சிறிதளவு தாதுப் பொருள்களையும் கரைத்துச் செல்கிறது. அந்த நீர், ஓடைகள், ஆறுகள் வழியாக கடலில் கலக்கையில் இந்த உப்புகளையும் எடுத்துச் செல்கிறது.  ஆனால், நன்னீரில் உப்பின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை. மற்றொரு இடத்திலிருந்தும் உப்பு வருகிறது; அதுவே, கடலுக்கு அடியிலிருக்கும் புவி மேலோட்டிலுள்ள தாதுப் பொருள்கள் ஆகும். கடல் தரையிலுள்ள வெடிப்புகள் வழியாக தண்ணீர் புவி ஓட்டிற்குள் செல்கிறது; அங்கு பயங்கரமாக சூடாக

ரக்‌ஷா பந்தன் திருநாளின் சிறப்புகள்...!

Image
ரக்‌ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ரவன் மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி  ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்‌ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும்  பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்‌ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும்  பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது.    இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும்  கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர். மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி  எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர்.    கு

பச்சை மிளைக்காய் உண்பதால் இத்தனை நன்மை

Image
நமது உணவைக் காரசாரமாக்க பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பச்சை மிளகாய்  பச்சை மிளகாய்க்குள் கொட்டிக் கிடக்கிறது உடலுக்கு நம்மை தாரகக் கூடிய அத்தனை நன்மைகழும் ஆச்சரிய படும் அளவுக்கு மருத்துவ தன்மைகளும்.பொதுவாக பச்சை மிளகாயில் காணப்படும் காரத்தை கொடுக்கும் கேப்சைசின் (Capsaicin) சளி மற்றும் சைனஸ்-லிருந்து நம்மை காக்கிறது. இந்த கேப்சைசின் மூக்கின் ரத்த ஓட்டத்தை சீராகி சளி மற்றும் சைனஸ் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது.மேலும் பச்சை மிளகாய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மையுடையது என்பதால், வலி நிவாரணியாக செயல்படுகிறது வலியை கட்டுப்படுத்துகிறது. மேலும் மனநிலையை ஒழுங்குபடுத்தும் தன்மைகொண்டது இந்த பச்சை மிளகாய் எண்டார்பின்ஸ் (endorphins) என்ற ரசாயனப்பொருளை வெளியிடுவதன் மூலம், மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் நொதிகளை (enzymes) கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் வலியையும் கட்டுப்படுத்துகிறது.அத்துடன் இரத்தத்தில் இருக்கும் சர்க்கையின் அளவையும் கட்டுப்படுத்த வல்லது . இதில் இரும்புசத்து செறிந்து காணப்படுவதால் பச்சை மிளகாய் உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டினை கட்ட

கடுகு, தாளிப்பதற்கு மட்டும் தான் என்று நினைக்கிறீங்களா?உண்மையில் அதன் மருத்துவ குணங்கள் இதோ..

Image
கடுகை அரைத்து பின்னர் அதை நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்கு கொடுத்தால் விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.கடுகை அரைத்து கீழ் வாதத்தினால் ஏற்படும் வலி உள்ள இடத்தில் தடவி வர வலி தீரும். இரண்டு சொட்டு கடுகுஎண்ணெய் மற்றும் சந்தன எண்ணெய் இவை இரண்டையும் கலந்து முகப்பருவில் போட்டு வர முகப்பரு மாறும்.கால் டிஸ்பூன் கடுகு, சிறு துண்டு சுக்கு, 5 கிராம் சாம்பிராணி இவைகளை இடித்து சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு குழைத்து தலை வலி உள்ள இடத்தில் பூச தலைவலி தீரும். பாத வெடிப்பில் சிறிதளவு கடுகு எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் கழித்து சுடுநீர் ஒத்தடம் கொடுத்தால் பாத வெடிப்புத் தீரும்.ஐந்து கிராம் கடுகு, கடுக்காய் ஒன்று, கருஞ்சீரகம் 5 கிராம், திப்பிலி இவைகளை இடித்து காலை, மாலை உணவுக்குப்பின் அரை ஸ்பூன் சாப்பிட்டு பின் வெந்நீர் குடித்து வர மூலவாயு தீரும். ஐந்து துளி அளவு கடுகு எண்ணெய், எருக்கு இலைச்சாறு இவை இரண்டடையும் கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வலி தீரும்.கடுகுப் பொடி, மஞ்சள் பொடி இவை இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு நன்றாக குழைத்து தோல் நோய் உள்ள இடத்தில் மேல் பூசி வர, தோல் நோய் மறையும