Posts

Showing posts from 2021

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று... இந்தியாவில் பார்க்க முடியுமா...??

Image
பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதன் காரணமாக சூரியனின் ஒளி பூமியை அடைய முடியாமல் போகிறது.. இந்த ஆண்டின் முதல் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.. இந்த கிரகணத்தை இந்தியாவிலிருந்து பார்க்க முடியும்.. ஆனால் அருணாச்சல பிரதேசம் , லடாக் போன்ற வடகிழக்கில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தெரியும். இது ரஷ்யா, கனடா மற்றும் கிரீன்லாந்தின் சில பகுதிகளிலிருந்து தெரியும் என்று நாசா கூறியுள்ளது. கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளை சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள். பெரும்பாலான பகுதிகளில், 2021 வருடாந்திர சூரிய கிரகண நிகழ்வு 01:42 PM (IST) மணிக்குத் தொடங்கும், அது 06:41 PM (IST) மணிக்கு உச்சத்தில் இருக்கும். தடுக்கப்படும் ஒளியைப் பொறுத்து பல்வேறு வகையான சூரிய கிரகணங்கள் உள்ளன. உதாரணமாக, சந்திரனும் பூமியும் ஒரு நேரடி வரியில் இருந்தால், நம் உலகின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய ஒளியைக் காண முடியும் மற்றும் பகலில் கூட வானம் இருட்டாக மாறும்

நாளை மட்டும் ஊரடங்கில்தளர்வு...?ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அனைத்து கடைகளும் மூடல்..?

Image
தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. நோய்த் தொற்று கட்டுக்குள் வராததால் மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் " கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்..ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு வந்துள்ளது.. முழு ஊரடங்கின் போது தொற்று குறைந்துள்ளதே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். இதே போல் இந்த கூட்டத்தில் கலந்து மற்ற கட்சி எம்.எல்..ஏக்களு

இன்று தங்கம் வாங்கினால் மகாலட்சுமி....உப்பு வாங்கினால்?

Image
சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாளில் வளர் பிறையில் வரும் திருதியை திதி அக்ஷய திதியாகும். கிருதாயுகத்தில் பிரம்மன் உலகை தோற்றுவித்தது இந்நாளில் தான். திரேதா யுகம் தொடங்கியதும் இந்நாளில்தான். பகீரதன் கடுமையாக தவம் புரிந்து பல போராட்டங்களுக்குப் பிறகு கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததும், கங்கை நீர் பூமியில் பட்டு புண்ணியமான தினமும் அக்ஷயதிருதி அன்றுதான். விஷ்ணு பகவானின் அவதாரமான பரசுராமர் அவதரித்தது இந்நந்நாளில்தான். அக்ஷய என்ற வார்த்தை சமஸ்கிருதத்தைக் கொண்டது. எப்போதும் குறையாதது என்னும் பொருளை கொண்டது. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அதே அட்சயம் என்றால் தேயாதது, குறையாதது, வளர்வது என்று பொருள். எல்லா நலன்களையும் அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில் நாம் வாங்கும் அனைத்தும் அடுக்கடுக்காய் சேரும் என்பது ஐதிகம். அதனால் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர். இன்று அக்ஷய திருதியை என்றால் தங்கம் தான் வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தான் செல்வம் பெருகும் என்பதி

தமிழக அரசின் புதிய அறிவிப்பு கொரோனா அதிகரிப்பு காரணமாக மே-6'முதல் புதிய கட்டுப்பாடுகள் மளிகை, காய்கறிகள் கடைகள் மதியம் 12மணி வரை மட்டுமே அனுமதி

Image
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும், வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மை காலங்களில் இந்திய அளவில் ஒரு சில நாட்களில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக,மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த

COVID-19; உங்கள் உடம்பில் இந்த 7 அறிகுறிகள் தான் உங்கள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விட்டதாக குறிக்கின்றன.!

Image
இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அது போன்ற சமயங்களில் இந்த மாதிரியான தகவல்களை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கடுமையான மற்றும் சிக்கலான COVID-19 நோயாளிகளை குணப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி, மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. முன்னோடியில்லாத சூழ்நிலைக்கு மத்தியில், எந்தவொரு இடத்திற்கும் பொருந்தக்கூடிய ஆக்ஸிஜன் டேங்கர்கள் நிறுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது தவிக்காமல் இருக்குமா என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டது. இதற்கிடையில், பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கு

ஏசியை புல் கூலிங்கில் வைத்து முகத்திற்கு கழுத்திற்கு என்று விதவிதமாக காற்று வாங்கும் நபர்களே., கவனம் தேவை.!!

Image
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் குளிர்பதனப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் தங்களின் பணிகளையும்., வீடுகளில் அறை குளிரூட்டியை பொறுத்தியும் குளுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இனி காண்போம்.  குளிரூட்டியின் பயன்பாடு மூலமாக நமது சருமத்திற்கு அதிகளவு தீங்கானது விளைகிறது. நமது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு., சருமம் தனது வறட்சியை அடைகிறது. இதுமட்டுமல்லாது உதடுகளும் விரைவில் தனது வறட்சியை அடைந்து உலர்கிறது. அதிக நேரம் ஏசியில் அமர்ந்து இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளியானது கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.  ஏசியில் பணியாற்றும் சிலர் ஏசிக்கு நேரடியாக அமர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அல்லது அவர்களுக்கு எதிராக ஏசியின் அமைப்பு அமையபெற்று இருக்கலாம். இதனால் சைனஸ் தூண்டப்பட்டு., மூக்கடைப்பு., தலைவலி மற்றும் குளிரால் காது அடைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும்., சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற

நாளை சனிக்கிழமை..ஏழு ஜென்ம பாவங்களை போக்க பச்சரிசியை கொண்டு இப்படி செய்யுங்கள்..!

Image
ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என கூறுகிறது ஐதீகம். சனிக்கிழமையில் விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்து, அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அந்த அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போது கையில் வைத்து இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம். கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பதாக புராணங்களில் கூறுவதுண்டு. அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டு காலம் வரை இருக்கும். இதன்மூலம் மிக கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட

உங்கள் காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Image
நமது காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள கால கட்டத்தில் நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருவதால் உரிமையாளர்கள் கார்களில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன ஆனால் அந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம் என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர். எனவே பெரும்பாலான கார்களில் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளை பற்றி இந்த செய்தியில் வழங்கபட்டுள்ளது. டோர் ஓபன் வார்னிங் லைட் உங்கள் காரில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படாத பட்சத்தில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிறும் மேலும் ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற சரியான தகவலும் காட்டப்படும். வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர் இந்த விளக்குகள் வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது எரியும், ஆனால் பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக காணப்படும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா..? சில பாட்டி வைத்திய குறிப்புகள் இதோ..!

Image
கோடைகாலம் நெருங்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை உடல் உஷ்ணம். இதன் மூலம் நிறைய நோய்களும் உருவாகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே உடல் உஷ்ணத்தை குறைப்பது அவசியமாகிறது. அதற்கான பாட்டி வைத்திய முறையில் சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீரை குடித்து வர உடல் உஷ்ணம் குறையும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடித்து வர அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உட

கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லவைக்கும் ஜூஸ்கள்!

Image
மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான வயிற்றுப் பிரச்சனைகளுள் ஒன்றாகும். இது ஒழுங்கற்ற குடலியக்கத்தால், வயிற்றில் செரிமான பிரச்சனைகளை தூண்டுவதால் ஏற்படுகிறது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், நீங்கள் கழிக்கும் மலம் இறுக்கமடைந்து கடப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மலச்சிக்கலின் மிகவும் பொதுவான அறிகுறிகள் குறைவான குடல் அசைவுகள், மலத்தைக் கடப்பதில் சிக்கல், வயிற்று வீக்கம் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவையாகும். இத்தகைய மலச்சிக்கலை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் திறம்பட தடுக்கலாம். அதுவும் கோடைக்காலத்தில் ஏராளமானோர் மலச்சிக்கலை அனுபவிப்பார்கள். மலச்சிக்கல் ஏற்பட்டால், அது மிகவும் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும். இறுக்கமடைந்த மலத்தை இளகச் செய்வதற்கு பானங்கள் பெரிதும் உதவி புரியும். கீழே குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பானங்களை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். குடலியக்கத்திற்கான ஆரோக்கிய பானங்கள் நீங்கள் சந்தி

உடலில் ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் !

Image
நமது உடலுக்கு அனைத்துவிதமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். இவற்றில் ஒரு ஊட்டச்சத்து உணவின் மூலம் எளிதில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான இந்தியர்களிடம் இந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அது தான் இரும்புச்சத்து. உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு/இரத்த சோகை ஏற்படுகிறது. நமது உடலுக்கு ஏன் இரும்புச்சத்து தேவைப்படுகிறது? இந்த இரும்புச்சத்து குறைவாக இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? எந்த உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்குவதற்கு இரும்புச்சத்து அவசியமாகும். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளன. அவை நம் நுரையீரலில் இருந்து பெறப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் இந்த ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத

வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்த பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்கள் ! செம குத்து ! அசத்தல் வீடியோ !

Image
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கமிங் பாடலுக்கு இளம் பெண்கள் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது . அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது . எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், https ://youtu.be/sEsNBScf11c திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும். மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்

பாத்ரூம் கதவுக்கு பின்னால் பெண் கண்ட காட்சி..என்ன இருந்தது தெரியுமா..? வைரல் வீடியோ

Image
பகுதி  1 நியூயார்க் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது குளியலறை கண்ணாடியின் பின்னால் ஒரு முழு அப்பார்ட்மெண்டை கண்டுபிடித்தார். இப்போது வைரலாகி வரும் தொடர் டிக்டாக் வீடியோக்களில், சமந்தா ஹார்ட்சோ என்ற பெண் தனது கண்டுபிடிப்பை ஆவணப்படுத்தினார். தனது குளியலறையில் ஜன்னல் இல்லாத நிலையில், எப்படி குளிர்ந்த காற்று வருகிறது என்பதை கண்டறிய முடிவு செய்தது குறித்து சமந்தா தனது முதல் வீடியோவில் விளக்கியுள்ளார். குளியலறையின் சின்க்கின் மீதிருந்த ஒரு கண்ணாடியின் பின்னால் இருந்து தென்றல் வருவதை அந்த பெண் கண்டுபிடித்ததை வீடியோ காட்டுகிறது. கண்ணாடியை அதன் இடத்திலிருந்து அகற்றியபோது, ​​வெளிச்சம் இல்லாத ஒரு அறையில் ஒரு பெரிய துளை திறக்கப்படுவதை அந்த பெண் வெளிப்படுத்தினார். இதுகுறித்து மேலும் அறிய முயற்சித்த ​​அந்த பெண் முகமூடி, கையுறைகள் அணிந்து அறைக்குள் நுழைகிறார், பாதுகாப்புக்காக ஒரு சுத்தியலைப் பிடித்துக் கொண்டார். பகுதி 2 ஆனால் அது ஒரு அறை மட்டுமல்ல, அவளுடைய குளியலறை கண்ணாடியின் பின்னால் ஒரு முழு அபார்ட்மெண்ட் என்று அவள் விரைவில் கண்டுபிடிப்பாள். "ஆஹா, இது முழுக்க முழுக்க அபார்ட்மென்ட

ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் தமிழர் பாரம்பரியம்

Image
நகைகள், தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும், ஆடம்பரத்திற்கும் மட்டுமே நகைகள் அணிவதில்லை. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலின்  ஒவ்வொரு  உறுப்புகளையும் பராமரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கொலுசு அணிதல் : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மெட்டி அணிதல் : மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏனென்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில்

விநாயகர் ஸ்லோகம்

Image
மந்திரங்கள்   ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்த்ராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கர்ணாய நம ஓம் ஹேரம்பாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றுந் தாஅல்லல்போம் வல்லினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம் தப்பாமற் சார்வார் தமக்குகணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கருமம் இல்லையே.திருவாக்கும் ச

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!

Image
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்ரி மந்திரம் தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பிரச்சோதயாத்

தமிழக அரசின் புதிய முயற்சி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய whatsapp சேனல் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Image
தமிழக அரசின் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) ஆனது பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை 26 பிப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர, GCC மற்றும் பொதுமக்களிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான வசதியாகவும் இந்த வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தப்படும். வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு GCC தான் என்றும் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான தானியங்கி குறைகளை பதிவு செய்யும் முறை குடிமக்களுக்கு பதிவு செய்யப்பட்ட குறைகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும். முக்கியமான அறிவிப்புகள், புதுப்பிப்புகள், குறிப்பிட்ட கால நிகழ்வுகள், ஹெல்ப்லைன்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களுக்கும் இது வழி வகுக்கும். சரியான நேரத்தில், பயனாளிகளுக்கான தடுப்பூசி வெளியீட்டு முறைகள் குறித்த முக்கியமான தகவல்களும் இந்த சேனல் வழியாக வழங்கப்படும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல், சரியான நேரத்தில் வரி செலுத்துதல் குறித்த நினைவூட்டல்கள் மற்றும் குடி

நந்தியின் காதுகளில் வேண்டலாமா ?

Image
நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை சிவனிடமே நேரிடையாகச் சொல்வதாகப் பாவித்து நந்தியின் காதில் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வது பல ஆலயங்களிலும் காணப்படுகிறது. இதை சாஸ்திரம் தடுக்கவில்லை. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம்,  ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.

பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது.  அதே  போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது. தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண்

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

Image
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி. கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !! நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன். கணபதி மந்திரம் … ப