Posts

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி

Image
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி? மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக... கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே! திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும். கழிக்கும் வகைகள் : கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம். பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

Image
1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். 8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். 9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. 11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள். 12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். 13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். 14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். 15. அடுத்தவரைப் பார்த்து பொற

சளி, இருமலுக்கு ஒரே நாளில் பலன் தரும் ’கதா பானம்’... வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...

Image
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். கதா ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும், இது பெரும்பாலும் தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : 2 கப் - தண்ணீர் 1 துண்டு - தோல்நீக்கிய இஞ்சி, 5 - கிராம்பு, 6 - கருப்பு மிளகு, 6 - துளசி இலைகள், ½ தேக்கரண்டி - தேன் 2 அங்குல இலவங்கப்பட்டை தேவையான பொருட்கள் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்கு நசுக்கு சேர்க்கவும். பின்னர் துளசி இலைகளை சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள். கதா பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள

காது குடையலாமா? – எதை வைத்து சுத்தம் செய்யலாம்??

Image
காதுகளைக் குடையலாமா என்று கேட்டால் மருத்ஹுவர்களின் ஒற்றை பதில் நோ.... காதுகளை எப்போதுமே குடையக் கூடாது.  காதுகள் ஒருவருக்கு  சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்காக  இயற்கை வேக்ஸ் என்ற பாதுகாப்பான ஒரு விஷயத்தைக் கொடுத்துள்ளது .   நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.  காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து  செவிப்பறைக்கு சேதம் ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த செருமென் 24மணி நேரமும் தனது பணியைச் செய்து வருகிறது.  எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான். எனவே இந்த வேக்சை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதிதாய் வேக்ஸ் உருவான பின் பழையது தானாகவே  மெல்ல மெல்ல வெளியே வந்துவிடும். இதனை  'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்' என்று சொல்கிறார்கள்.   ஆனால் சிலர் இதனை

பல் சொத்தையாகாமல் தடுக்க சூப்பரான வழி முறைகள்!

Image
நம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க தினமும் 2 முறை பல் துலக்குவதுடன் மெல்லிய குச்சிகளைக் கொண்ட பிரஷ்ஷை மட்டும் உபயோகிக்க வேண்டும். மேலும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். Fluoride நிறைந்த பற்பசைகளையே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை நிறைந்த இனிப்புகள், சாக்லேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவசியம் நிறுத்த வேண்டும். வெண்ணெய், திராட்சை போன்ற பற்களின் நலனிற்கு உகந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.இதை பின்பற்றினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.உங்கள் பற்களையும் பாதுகாக்க முடியும். 

குடும்ப சண்டையையும் பண விரயத்தையும் தடுக்கணுமா..? அப்ப இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கக்கூடாது..

Image
மக்கள் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர் தங்கள் வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல வகையான படங்களையும் வைக்கின்றனர். ஆனால் படங்களை வைத்திருக்கும்போது வாஸ்து மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவை இயற்கையில் எதிர்மறையான / நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்த படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனடியாக வீட்டை விட்டு அகற்றி விட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்வது போலவோ நீரூற்று புகைப்படங்கள் இருந்தால், அதை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தண்ணீர் பாயும் அதே வழியில், பணமும் வீட்டை விட்டு வெளியேறுகிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து படி, எந்த மூழ்கும் படகு அல்லது படகு படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது. வீட்டில் வெளியிடப்பட்ட இத்தகைய படங்கள் வீட்டின் உறுப்பினர்களை எதிர்மறையாக பாதிக்கின்றன. வீட்டில் காணப்படும் இதுபோன்ற படங்கள் அதிர்ஷ்டம் தொடர்பான தடைகளை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போர் தொடர்பான படமும் வீட்டில் நிறுவப்பட்டிருந்தால், அதுவும் தாமதமின்றி

ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்..

Image
ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை .. இந்தத் தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்.. இது முற்றிலும் கட்டுக் கதையோ மூட நம்பிக்கையோ கிடையாது. நம் முன்னோர்கள் எதைக் கூறினாலும் அதில் பெரும் அர்த்தம் புதைந்திருக்கும். எனவே அதை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடித்து வாழ்வில் நலம் பெறுவோம். அவ்வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் செய்யக் கூடாத சில வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஆண்கள் செய்யக்கூடாத தவறுகள்: 1. தாய் தந்தையர் உள்ள ஆண்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை அன்று சவரம் செய்யக்கூடாது. 2. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின கதவின் மேல் போடக்கூடாது . 3. நம் தலையில் உடம்பிலிருந்து உதிர்ந்த முடிகளையும் நகங்களையும் வீட்டில் வைக்கக்கூடாது உடனே அப்புறப்படுத்த வேண்டும். 4. இரண்டு கைகளையும் வைத்து ஒரே சமயத்தில் தலையை சொறியக்கூடாது. 5. திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுக்கு சென்று வந்த பின்பு நீராடுவது கூடாது. 6. எவ்வேளையிலும் இருகைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமரக்கூடாது. 7. ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு உணவு உண்ணக்கூடாது. 8. கோவிலில் கடவுளை வணங்கும் பொழுது முன்பக்கம் உள்