சளி, இருமலுக்கு ஒரே நாளில் பலன் தரும் ’கதா பானம்’... வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். கதா ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும், இது பெரும்பாலும் தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : 2 கப் - தண்ணீர் 1 துண்டு - தோல்நீக்கிய இஞ்சி, 5 - கிராம்பு, 6 - கருப்பு மிளகு, 6 - துளசி இலைகள், ½ தேக்கரண்டி - தேன் 2 அங்குல இலவங்கப்பட்டை தேவையான பொருட்கள் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்கு நசுக்கு சேர்க்கவும். பின்னர் துளசி இலைகளை சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள். கதா பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள