Posts

COVID-19; உங்கள் உடம்பில் இந்த 7 அறிகுறிகள் தான் உங்கள் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விட்டதாக குறிக்கின்றன.!

Image
இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். அது போன்ற சமயங்களில் இந்த மாதிரியான தகவல்களை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கடுமையான மற்றும் சிக்கலான COVID-19 நோயாளிகளை குணப்படுத்த சுகாதார அதிகாரிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி, மருத்துவ ஆக்ஸிஜனின் பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. முன்னோடியில்லாத சூழ்நிலைக்கு மத்தியில், எந்தவொரு இடத்திற்கும் பொருந்தக்கூடிய ஆக்ஸிஜன் டேங்கர்கள் நிறுத்தப்படாமல் இருக்கிறதா அல்லது தவிக்காமல் இருக்குமா என்பதை உறுதிப்படுத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை கேட்டுக் கொண்டது. இதற்கிடையில், பல மாநிலங்களில் கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை பல மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வீடுகளில் சிகிச்சை அளிக்கு

ஏசியை புல் கூலிங்கில் வைத்து முகத்திற்கு கழுத்திற்கு என்று விதவிதமாக காற்று வாங்கும் நபர்களே., கவனம் தேவை.!!

Image
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் குளிர்பதனப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் தங்களின் பணிகளையும்., வீடுகளில் அறை குளிரூட்டியை பொறுத்தியும் குளுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இனி காண்போம்.  குளிரூட்டியின் பயன்பாடு மூலமாக நமது சருமத்திற்கு அதிகளவு தீங்கானது விளைகிறது. நமது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு., சருமம் தனது வறட்சியை அடைகிறது. இதுமட்டுமல்லாது உதடுகளும் விரைவில் தனது வறட்சியை அடைந்து உலர்கிறது. அதிக நேரம் ஏசியில் அமர்ந்து இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளியானது கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.  ஏசியில் பணியாற்றும் சிலர் ஏசிக்கு நேரடியாக அமர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அல்லது அவர்களுக்கு எதிராக ஏசியின் அமைப்பு அமையபெற்று இருக்கலாம். இதனால் சைனஸ் தூண்டப்பட்டு., மூக்கடைப்பு., தலைவலி மற்றும் குளிரால் காது அடைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும்., சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற

நாளை சனிக்கிழமை..ஏழு ஜென்ம பாவங்களை போக்க பச்சரிசியை கொண்டு இப்படி செய்யுங்கள்..!

Image
ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என கூறுகிறது ஐதீகம். சனிக்கிழமையில் விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்து, அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அந்த அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போது கையில் வைத்து இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம். கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பதாக புராணங்களில் கூறுவதுண்டு. அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டு காலம் வரை இருக்கும். இதன்மூலம் மிக கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்ட

உங்கள் காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Image
நமது காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள கால கட்டத்தில் நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருவதால் உரிமையாளர்கள் கார்களில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன ஆனால் அந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம் என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர். எனவே பெரும்பாலான கார்களில் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளை பற்றி இந்த செய்தியில் வழங்கபட்டுள்ளது. டோர் ஓபன் வார்னிங் லைட் உங்கள் காரில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படாத பட்சத்தில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிறும் மேலும் ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற சரியான தகவலும் காட்டப்படும். வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர் இந்த விளக்குகள் வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது எரியும், ஆனால் பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக காணப்படும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா..? சில பாட்டி வைத்திய குறிப்புகள் இதோ..!

Image
கோடைகாலம் நெருங்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை உடல் உஷ்ணம். இதன் மூலம் நிறைய நோய்களும் உருவாகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே உடல் உஷ்ணத்தை குறைப்பது அவசியமாகிறது. அதற்கான பாட்டி வைத்திய முறையில் சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீரை குடித்து வர உடல் உஷ்ணம் குறையும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடித்து வர அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உட

கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லவைக்கும் ஜூஸ்கள்!

Image
மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான வயிற்றுப் பிரச்சனைகளுள் ஒன்றாகும். இது ஒழுங்கற்ற குடலியக்கத்தால், வயிற்றில் செரிமான பிரச்சனைகளை தூண்டுவதால் ஏற்படுகிறது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், நீங்கள் கழிக்கும் மலம் இறுக்கமடைந்து கடப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மலச்சிக்கலின் மிகவும் பொதுவான அறிகுறிகள் குறைவான குடல் அசைவுகள், மலத்தைக் கடப்பதில் சிக்கல், வயிற்று வீக்கம் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவையாகும். இத்தகைய மலச்சிக்கலை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் திறம்பட தடுக்கலாம். அதுவும் கோடைக்காலத்தில் ஏராளமானோர் மலச்சிக்கலை அனுபவிப்பார்கள். மலச்சிக்கல் ஏற்பட்டால், அது மிகவும் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும். இறுக்கமடைந்த மலத்தை இளகச் செய்வதற்கு பானங்கள் பெரிதும் உதவி புரியும். கீழே குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பானங்களை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். குடலியக்கத்திற்கான ஆரோக்கிய பானங்கள் நீங்கள் சந்தி

உடலில் ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் !

Image
நமது உடலுக்கு அனைத்துவிதமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். இவற்றில் ஒரு ஊட்டச்சத்து உணவின் மூலம் எளிதில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான இந்தியர்களிடம் இந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அது தான் இரும்புச்சத்து. உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு/இரத்த சோகை ஏற்படுகிறது. நமது உடலுக்கு ஏன் இரும்புச்சத்து தேவைப்படுகிறது? இந்த இரும்புச்சத்து குறைவாக இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? எந்த உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்குவதற்கு இரும்புச்சத்து அவசியமாகும். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளன. அவை நம் நுரையீரலில் இருந்து பெறப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் இந்த ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத