இறந்த பிறகும் கூட மனிதர்களுக்கு நகங்களும் முடியும் வளரும் என்பது உண்மையா..? தெரிஞ்சுக்க இதைப் படிங்க
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும் முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இதுகுறித்து பல கதைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில், மனித நகங்களும் முடியும் இறந்த பிறகும் தொடர்ந்து வளர்கிறதா என்பது குறித்து மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சி நடந்துள்ளது என்பதே உண்மை.. உண்மையில், ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலின் வெவ்வேறு பாகங்களின் செல்கள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது, மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவது நிறுத்தப்படும். மூளை செல்கள் செயல்பாட்டில் இல்லை. எனவே, இதயம் துடிப்பதை நிறுத்திய ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள், மூளை செல்கள் அனைத்தும் இறக்கின்றன. ஒரு நபரின் உறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றால், அவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தை அகற்ற வேண்டியது அவசியம். இவை அடுத்த ஆறு மணி நேரத்தில் நன்கொடையாளரின் உடலில் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இறந்த பிறகும் தோல் செல்கள் உயிரோடு இருக்கும். ஒரு நபர் இறந்த 12 மணி நேரம் வரை தோல் மா