Posts

இறந்த பிறகும் கூட மனிதர்களுக்கு நகங்களும் முடியும் வளரும் என்பது உண்மையா..? தெரிஞ்சுக்க இதைப் படிங்க

Image
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும் முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இதுகுறித்து பல கதைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில், மனித நகங்களும் முடியும் இறந்த பிறகும் தொடர்ந்து வளர்கிறதா என்பது குறித்து மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சி நடந்துள்ளது என்பதே உண்மை.. உண்மையில், ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலின் வெவ்வேறு பாகங்களின் செல்கள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவது நிறுத்தப்படும். மூளை செல்கள் செயல்பாட்டில் இல்லை. எனவே, இதயம் துடிப்பதை நிறுத்திய ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள், மூளை செல்கள் அனைத்தும் இறக்கின்றன. ஒரு நபரின் உறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றால், அவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தை அகற்ற வேண்டியது அவசியம். இவை அடுத்த ஆறு மணி நேரத்தில் நன்கொடையாளரின் உடலில் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இறந்த பிறகும் தோல் செல்கள் உயிரோடு இருக்கும். ஒரு நபர் இறந்த 12 மணி நேரம் வரை தோல் மா

'ஆ.. செம காரம்"னு = ஒதுக்கிறாதீங்க..! சைனஸ் வயிற்று பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பலவற்றிற்கு தீர்வு இருக்கு..!!

Image
பொதுவாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயை அனைவரும் பார்த்திருப்போம், சமையலில் சேர்த்திருப்போம். ஆனால் சாப்பிடும் போது அதனை ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுவோம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மூக்கின் சளிச்சவ்வை தூண்டுவதால் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் சைனஸ் பிரச்னை, தலையில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தாலும் மூக்கின் வழியாக வெளியேற்றிவிடும். பச்சை மிளகாய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு உடலின் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை பச்சை மிளகாய்க்கு உண்டு. இரும்பு சத்தை இயற்கையாகவே அதிகம் கொண்டிருக்கும் பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வத

கோபத்தைக் குறைக்கும் மஹேஸ்வரி காயத்ரி மந்திரம்

Image
சப்த கன்னியரில் ஒருவரும் சிவபெருமானின் அம்சமாகவும் தோன்றியவர் ஶ்ரீமஹேஸ்வரி. இவர் அம்பிகையின் தோளிலிருந்து உருவானவர். இவரை வழிபட்டு வந்தால் நம்முடைய கோபத்தைக் குறைத்து, மன அமைதியைத் தருவார். மேலும் நம்முடைய உடலில் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை மஹேஸ்வரிக்கு உண்டு. வடகிழக்கு எனப்படும் ஈசானியத்தை இவர்தான் நிர்வகிக்கின்றார். இவரது வாகனம் ரிஷபம். சிவ பெருமான் நிகழ்த்தும் அனைத்து சம்ஹாரங்களும் மஹேஸ்வரியின் சக்தியால்தான் செய்கிறார். மந்திரம்: ஓம்  ச்வேத  வர்ணாயை  வித்மஹே! சூல  ஹஸ்தாயை  தீமஹி! தன்னோ  மஹேஸ்வரி  ப்ரசோதயாத். இந்த காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து 108 முறை சொல்லி வந்தால், மனதில் உள்ள கோபம் மறைந்து அமைதி உருவாகும்.

மொபைல் போனை 100% சார்ஜ் செய்யக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

Image
மொபைல் போனை 100% சார்ஜ் செய்வது ஆபத்தானதாக கருதப்படுகிறது.. இதுகுறித்து பார்க்கலாம்.. நமது மொபைல் போன் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்தால், எந்தப் பயனும் இல்லை. ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும்போது, ​​தொலைபேசி விரைவாக சேதமடையும். உங்கள் தொலைபேசியை 40 முதல் 80% வரை சார்ஜ் செய்தால், உங்கள் பேட்டரி அதிகமாக இயங்கும். இது தவிர, ஒரே இரவில் மொபைலை சார்ஜ் செய்வதும் தவறு. இதைச் செய்வதன் மூலம், தொலைபேசி சூடாகிறது. உண்மையில், லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பத்தால் தொலைபேசியை சேதப்படுத்தும். தொலைபேசி பேட்டரியை மீண்டும் மீண்டும் அகற்றக்கூடாது. தொலைபேசியின் பேட்டரியை நீங்கள் மீண்டும் மீண்டும் 0% ஆக மாற்றினால், அவை நிலையற்றதாகிவிடும். உங்கள் பேட்டரி ஒரு நிலையான சார்ஜிங் சுழற்சியைக் கொண்டுள்ளது, சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட் போனை சூடான இடத்தில் வைக்க வேண்டாம். சார்ஜ் செய்தபின் தொலைபேசியை சார்ஜ் செய்வதிலிருந்து உடனடியாக அகற்றவும். நீண்ட நேரம் போனை சார்ஜரில் பொருத்தியிருந்தால் பேட்டரி மோசமடைகிறது. ஒரே இரவில் தொலைபேசியை படுக்கையில் விட்டுவிட்டு சார்ஜ் செய்

BREAKING: பேருந்துகளில் இலவசம். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Image
சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயணத்துக்கான டோக்கனை முதியோர் பெறலாம். அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படும். மேலும் mtcbus.tn.gov

நவக்கிரகங்களால் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம் எப்படி?முழு விவரம் உள்ளே

Image
சூரியன் :  பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடமிருந்து பெற்று பித்ரு தேவதைகளின் வழியாக இறந்து போன நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியன். தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு மிகவும் உகந்தது.  சந்திரன்:  சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கிறது. வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. தேய்பிறையில் அறிவாற்றல் குறைகிறது. அதனால்தான் நல்ல காரியங்களை வளர்பிறையில் துவங்குகிறார்கள். திங்கட்கிழமையில் விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது சந்திர தோஷத்தை நீக்கும் பரிகாரம் ஆகும்.  செவ்வாய்:  பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் க

உங்கள் ராசிப்படி எந்த நிற ராசிக்கல் அணிய வேண்டும் 'இதன் பயன்கள் என்ன முழு தகவல் உள்ளே

Image
ஜோதிட ரீதியாக நாம் பார்த்தல் பலன்கள் பல முறையில் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்றான 'ராசிக்கல்' எதற்காக பயன்படுத்த வேண்டும்? எந்த ராசிக்காரர்கள் எந்த நிற கல் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். இதை முழுமையாக நாம் அறிந்து கொண்டாலே போதும். ராசிக்கல் என்ற பெயரில் நம்மை ஏமாற்றுபவர்களிடம் இருந்து நாம் தப்பித்து விடலாம். மேலும் வீண் பணச்செலவு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றில் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம். நோய்: நமக்கு உடல் உறுப்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான கிரகத்தின் தன்மையை அறிந்து அந்த கற்களை மோதிரமாகவோ அல்லது வேறு எதுவும் நகைகளாகவோ நாம் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அணிந்தால் நம் உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம். கண் திருஷ்டி: கல்லடியை விட கண்ணடி தான் பெரியது. அதனால் 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்கின்றனர். இவ்வாறு கண்ணடி இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையாது. அதனால் கண் திருஷ்டியை போக்க நம் ராசிக்கு ஏற்ற உரிய கல் என்ன என்பதை அறிந்து அதன்