Posts

நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி?

Image
நவகிரகங்களால் ஏற்படகூடிய தோஷங்கள் விலகவும், நவகிரகங்களின் அருள் பெற அவர்களுக்கு உரிய நவதானியம் வைத்து எளிய பரிகாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம். சூரியன்: நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும். சந்திரன் : சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும். செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க

வீட்டு வாசலில் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி விலகும்

Image
வீட்டு நிலைவாசலில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டி விலகும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக அகலும். விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது. பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றி நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல், எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளவேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், வீட்டு நிலைவாசலில் எலுமிச்சையை சரிபாதியாக்கி அதில் மஞ்சள் தோய்த்து வைக்க வேண்டும். அதேபோல், வாசலின் இரண்டு பக்கமும் அகல் விளக்குகள் மாலை வேளையில் ஏற்றி வைக்க வேண்டும். வாசலில், எ

ஜாக்கிரதை... குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்..

Image
இப்போதெல்லாம் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுடன் இருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், பெரியவர்களை விடவும், குழந்தைகளுக்கு தான் மொபைல் போன்களை எப்படி பயன்படுத்துவது என்று அதிகமாக தெரிகிறது. அதனால்தான் அவர்கள் நாள் முழுவதும் மொபைல், டிவி அல்லது கணினியுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அதிக மொபைல், தொலைக்காட்சி அல்லது கணினித் திரைகளில் ஒட்டிக்கொண்டிருந்தால் இது ஒரு நல்ல அறிகுறி அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மெமோரியல் கேர் ஆரஞ்சு கோஸ்ட் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, ஒரு குழந்தை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒரு திரையைப் பார்த்தால், அது முழுக்க முழுக்க பாதிக்கிறது. அதே நேரத்தில், அவர்களின் மன ஆரோக்கியம், கற்றல், புரிதல், நினைவாற்றல் சக்தி ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம் மக்கள் ஐந்து முதல் ஏழு மணி நேரம் திரைக்கு அருகில் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். அவருக்கு மன அழுத்தமும், அமைதியற்ற தன்மையும் அதிகரிக்கும். எனவே இதை குறைவாகப் பயன்படுத்துவது நல்லது. பெரியவர்களுக்கே இந்த நிலை

மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்கு சென்றால் வறுமை நீங்குமாம்.. எங்குள்ளது தெரியுமா?

Image
சரஸ்வதி நதிக்கு சாபம் விட்ட விநாயகர், சிவபெருமானின் ஆசி பெற்ற இடம் என இந்தியாவிலேயே மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் ஒரு கிராமத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.   மகாபாரத காலத்துடன் தொடர்புடைய இந்த கிராமத்திற்கு சென்றால் வறுமை நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல கிராமங்கள், பல்வேறு புராண ரகசியங்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கிராமத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம். உத்தரக்காண்டில் உள்ள இந்த கிராமம் 'இந்தியாவின் கடைசி கிராம்' அல்லது 'உத்தரகாண்டின் கடைசி கிராமம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் புனித இடங்களில் ஒன்றாக கருதப்படும் பத்ரிநாத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. மகாபாரத காலத்தோடு தொடர்புகொண்ட இந்த கிராமத்திற்கு விநாயகருடனும் தொடர்பு உள்ளது. பாண்டவர்கள் இந்த கிராமத்தின் வழியாக தான் சொர்க்கத்திற்கு சென்றதாகவும் நம்பப்படுகிறது. சுமார் 19,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தின் பெயர் 'மனா'. முன்பொரு காலத்தில் மணிபத்ர தேவ் என்ற பெயரில்

ரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக தெரியுமா?

Image
இந்தியாவில் உள்ள அதிகளவு மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தப்படியாக ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக இப்போதெல்லாம் ரயில் பயன்பாடு அதிகரித்துவிட்டது என்று தான் கூறவேண்டும். இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள். பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளுக்காக அர்த்தம் தெரியாமல் இருக்கும். அப்படியான ஒருவிஷயம்தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள், இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கூறலாம். இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும். இந்த நீலநிற பெட்டியி

கலகத்தை விளைப்பவர் நாரதர் முனி என சொல்வது ஏன்? உண்மையில் நாரதமுனி யார்?

Image
தேவ ரிஷி நாரதர் அல்லது நாரத முனி பிரம்மரின் புதல்வர். மஹாவிஷ்ணுவின் அதி தீவிர பக்தர். இவர் பிரபஞ்சம் சுற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் சொல்வார் என்கிற பொதுவான ஒரு பிம்பம் உண்டு. "நாரதர் கலகம் நன்மையில் முடியும் " என்ற பழமொழியும் உண்டு. நாரதர் என்றால் ஏதேனும் இரு ஆட்களிடையே ஒரு கலகத்தை உருவாக்கி அதில் நன்மையை உருவாக்குவார் என்பது பொதுவான கருத்து. விஷ்ணுபுராணத்தின் படி, "நரம் னார் சம்யூகம் கலாஹீனா த்யாதி கந்தயாதிதி " என சொல்கின்றனர். அதாவது ஒரு கலகத்திற்கு காரணமாக இருப்பவர் நாரதர். ஆனால் ஒருபோதும் நெஞ்சில் தீய எண்ணமோ, வஞ்சகமோ இல்லாத பரிசுத்த ஆன்மா. உலக நன்மைக்காக வித்யாசமான ஒரு யுத்தியை கையாண்டவர். நாரத முனியை அடிப்படையில் ஒருவர் புரிந்து கொள்வது சற்று கடினம். மிகவும் சிக்கலான பிம்பத்தை உடையவர். பார்ப்பதற்கு வேடிக்கையான, விளையாட்டான பாவனைகளை வெளிப்படுத்தினாலும். அடிப்படையில் மகா ஞானி, அறிவுக்களஞ்சியம். புராணங்களை புரட்டி பார்த்தால் அவர் நிகழ்த்திய லீலைகளும், அற்புதங்களும் ஏராளம். நாரதர் என்பவர் கருத்து பரிமாற்றத்தின் அடையாளம். தெய்வீக கருத்துக்களை

பற்களுக்குப் பாதுகாப்பு வாய் துர்நாற்றம் அகலும்: ஆயில் புல்லிங் தரும் நன்மை

Image
உணவுகள் நம் வாய் வழியாகவே வயிற்றினுள் செல்கின்றன. வாயை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்தின் பெரும்பங்கு நிறைவேறிவிடும். தினமும் காலையில் 15 நிமிடம் செலவழித்தால் வாயை மிகவும் தூய்மையாக பராமரிக்கலாம். வாயினுள் இருக்கும் தீமை செய்யும் கிருமிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் வழிதான் ஆயில் புல்லிங். எப்போது செய்ய வேண்டும்? காலையில் எழும்பியதும் வாயை சுத்தம் செய்யவேண்டும் என்ற உணர்வு ஏற்படும். வழக்கமாக நீங்கள் பல் விளக்கி அல்லது மவுத் வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்திருப்பீர்கள். அதற்குப் பதிலாக ஆயில் புல்லிங் செய்ய வேண்டும். ஆயில் புல்லிங் செய்வது எப்படி? சுத்தமான தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யவேண்டும். 10 மில்லி லிட்டர் தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்து, பல் விளக்கும் முன்பு, தண்ணீர் பருகுவதற்கு முன்பு வாயினுள் விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வாய்க்குள் அதை நன்றாக உதப்பவேண்டும். பற்களுக்குள் சென்று வருவதுபோல், வாயின் எல்லா பக்கங்களும் எண்ணெய்படுவதுபோல் வேகமாக வாய்க்குள் அங்குமிங்கும் எண்ணெயை தள்ளவேண்டும். வாய்க்குள் உதப்பிய எண்ணெயை