கலகத்தை விளைப்பவர் நாரதர் முனி என சொல்வது ஏன்? உண்மையில் நாரதமுனி யார்?
நாரத முனியை அடிப்படையில் ஒருவர் புரிந்து கொள்வது சற்று கடினம். மிகவும் சிக்கலான பிம்பத்தை உடையவர். பார்ப்பதற்கு வேடிக்கையான, விளையாட்டான பாவனைகளை வெளிப்படுத்தினாலும். அடிப்படையில் மகா ஞானி, அறிவுக்களஞ்சியம். புராணங்களை புரட்டி பார்த்தால் அவர் நிகழ்த்திய லீலைகளும், அற்புதங்களும் ஏராளம்.
நாரதர் என்பவர் கருத்து பரிமாற்றத்தின் அடையாளம். தெய்வீக கருத்துக்களை தேவையான இடங்களில் உலகமெங்கும் பரப்பியவர். மூவுலகங்களிலும் இடைவெளி இன்றி சுழன்றவர். தேவையான தகவல்களை, தேவர்களுக்கு, அசுரர்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு மாறி மாறி வழங்கியவர். சப்தகாலபத்ரூமாவில் இவர் குறித்த குறிப்புகள் உண்டு. தெய்வீக ஞானத்தை பரப்புபவர் என்று பொருள். இவர் குறித்து பிரபலாம சொல்லப்படும் பல புராணக்கதைகள் உண்டு, சிவபெருமான் குடும்பத்தில் முருக பெருமானுக்கும், விநாயகருக்கும் இடையே யார் பெரியவர் என்ற லீலையை அறங்கேற்றினார்.
முப்பெரும் தேவிகளான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதிக்கிடையே யாருடைய தன்மை பெரியது என்கிற விவாதத்தை கிளப்பி, மூவரும் கல்வியா, செல்வமா அல்லது வீரமா என்ற கலகத்தை உருவாக்கிய போது உலகம் என்றென்றும் நலமுடன் இருக்க மூன்று தன்மையுமே சம அளவில் தேவை என்பதை நிலைநாட்டியவர். தன்னுடைய பரம குருவான மஹா விஷ்ணுவுக்கே பல லீலைகள் நிகழ்த்தியவர். அனைத்து நிகழ்த்திய பின் தன்னை ஆட்டுவித்தவர் மஹா விஷ்ணு என்கிற சமர்பணத்தையும் வழங்குபவர்.
கர்நாடாகவில் ரய்ச்சூரிலிருந்து 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நாரதர் கோவில். கோர்வா என்பது இந்த பகுதியின் பெயர்.
Comments
Post a Comment