Posts

குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய முதலுதவிகள்.!!

Image
நமது வீட்டில் இருக்கும் செல்லக்குழந்தைகள் விளையாட செல்வது வழக்கம். அப்போது எதிர்பாராமல் அவர்கள் விழுந்துவிட்டால் அவர்கள் அழுதுகொண்டே அம்மா நான் விழுந்துவிட்டேன் என்று அழுதுகொண்டே வருவதும்., அவர்களை கோபத்தோடு அழைத்து அவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை சமாதானம் செய்வதும் வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடப்பதாகும்.  குழந்தைகள் விளையாடும் போது நிலைதடுமாறி விழுந்து அவர்கள் இரத்த காயத்துடன் வருவது வழக்கமான ஒன்றே., அதனை கண்டு பெற்றோர்கள் அதிகளவில் மனஉளைச்சலுக்கு உள்ளாக தேவையில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் விழுந்துவிட்டால்., அந்த சமயத்தில் இரத்த காயத்துடன் வந்தால் செய்ய வேண்டிய முதலுதவி பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.  குழந்தைகள் கீழே விழுந்து இரத்தம் வரும் பட்சத்தில் குழாயில் இருந்து வரும் சுத்தமான சாதாரண நீரால் கழுவ வேண்டும் மற்றும் காயத்தில் நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.  அந்த காயத்தின் மீது இரத்தம் வரும் பட்சத்தில் காயத்தினை சுத்தமான துணியின் உதவியால் நன்றாக அழுத்தி கட்டுப்போட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு தற்போதுதான் "டெட்டனஸ் டெக்ஸாய்டு" போடப்பட்டிருந்தால் மீண்

நட்ஸ் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்!!

Image
பீனட்,கர்ப்ப காலத்தில் நிச்சயம் சாப்பிட வேண்டிய ஒன்று. வைட்டமின் ஈ இருப்பதால், ஞாபக திறனை அதிகரிக்கும். மன அழுத்தத்தை போக்கி இருதய நோய் அபாயத்தை தவிர்க்கும். முந்திரி,இரும்பு சத்து, மக்னீஷியம், கொழுப்பு, ஓலிக் அமிலம் இருப்பதால் புற்றுநோய் அபாயத்தில் இருந்து காக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்பட்டு, எலும்புகள் உறுதியாகின்றன. இதில் காப்பர் நிறைந்திருப்பதால் உங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் நல்லது. பிரேஸில் நட்ஸ்,புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை அழித்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்பு உள்ளதால் உடலில் அதிகபடியாக இருக்கும் LDL கொழுப்பு குறைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள்

Image
  ஆப்பிள்:  ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே. ஆப்பிளில் உள்ள விட்டமின் பெருங்குடல் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது! ஸ்ட்ராபெர்ரி:  பாதுகாப்பு தரும் பழம். இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட மொத்த Antioxidant சக்தி இருப்பதால், இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கிறது.   ஆரஞ்சு:  இனிப்பான மருந்து. ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும். கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும். அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது. தர்பூசணி:  மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான். 92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது. மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால், அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி, பொட்டாசியம் ஆகியவை.   கொய்யா & பப்பாளி:  இவை இரண்டுமே விட்டமின் சி நி

சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு..! அறிந்து கொள்வோம்!

Image
சுவாசத்திற்கும் உங்கள் ஞாபகத்திறனுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு என்பதை பற்றி நரம்பியல் துறை ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறது.சுவாசம் என்பது மூக்கின் வழி இருப்பது தான் சிறந்தது. சுவாசம் சீராக இருக்கும்போது, உடல் உறுப்புகள் மற்றும் அரோக்கியம் சீராக இருக்கும். வாயை மூடி கொண்டு மூக்கு வழியாக சுவாசிப்பவர்களை காட்டிலும் வாய் வழியாக சுவாசிப்பவர்களிடம் துர்நாற்றம் குறைவாக இருக்கிறது என்று ஆய்வரிக்கை தெரியவித்துள்ளது.  மூக்கு வழியாக சுவாசம் சீராக இருக்கும்போது ஞாபகத்திறனும், உணர்ச்சிக்கும் சீராக இருக்கும். உங்கள் சுவாசம் சீராக இருக்கும்போது, உடல், சிந்தனை, ஞாபகத்திறன் ஆகியவை மேம்படும். இந்த ஆய்வில் மூளையின் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. விலங்குகளிடமும் மனிதர்களிடமும் சுவாசம் மூக்கு அல்லது வாய் வழியாக இருக்கும்போது எப்படியான விளைவுகள் வரும் என்பது தெரிய வந்தது.சுவாச பிரச்சனைகளே மற்றும் உடல் உபாதைகளுக்கு காரணமாகிவிடும். அதனால் சுவாசத்தை மேம்படுத்த யோக பயிற்சி அல்லது சுவாச பயிற்சி செய்யலாம்.

தீர்த்தமாடும் முறை

Image
கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும். மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும். முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும். இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.

நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

Image
சிவாலயங்களில் ஈசனை தரிசனம் செய்யும் முன்பு நந்திதேவரை வணங்கி அவர் அனுமதியுடன் பெருமானை தரிசனம் செய்வது நம் வழக்கம். மேலும் பிரதோஷ காலத்தில், நந்தி எம்பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இத்தகைய நந்திதேவரை வணங்குவதும், அவரை பிரதட்சணம் செய்வதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்க வல்லது. நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம். 3 முறை பிரதட்சணம் செய்தால் - நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும். 5 முறை பிரதட்சணம் செய்தால் - எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும். 7 முறை பிரதட்சணம் செய்தால் - அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும். 9 முறை பிரதட்சணம் செய்தால் - உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும். 11 முறை பிரதட்சணம் செய்தால் - நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும். 13 முறை பிரதட்சணம் செய்தால் -  எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும். 15 முறை பிரதட்சணம் செய்தால் - கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும். 17 முறை பிரதட்சணம் செய்தால் - கிடைத்த தனம் விருத்தி அடையும். 108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாகம் செய்த பலன்

காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?

Image
காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும். காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  கங்கையில் நீர