Posts

இந்த யோகம் உடையவர்கள் நேர்மையானவர்களாம்

Image
பாச யோகம் : ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஐந்து ராசியில் சஞ்சரித்தால் அது பாச யோகம் எனப்படுகிறது. இந்த யோகம் உடையவர்களின் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.  பாச யோகம் உடையவர்கள் உண்மையை பேசக் கூடியவர்கள். தொழிலில் நேர்மையான எண்ணம் உடையவர்கள். சொத்துக்கள் வாங்குவதில் அதிக விருப்பம் கொண்டவர். தாமினி யோகம் : ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது ஆறு ராசியில் அமைவது தாமினி யோகம் எனப்படும். இந்த யோகத்தினால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.  தாமினி யோகம் உஙள்ளவர்கள் கல்வி ஞானம் உடையவர்களாக இருப்பர். நற்பண்புகளைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். கருணை உள்ளம் கொண்டவர்கள். கேதார யோகம் : ராகு - கேதுவை தவிர மற்ற ஏழு கிரகங்களும் ஏதாவது நான்கு ராசியில் இருப்பது கேதார யோகம் எனப்படும். கேதார யோகத்தால் உண்டாகும் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.  இந்த யோகம் உள்ளவர்கள் விவசாயம், கால்நடைகள் மூலம் அதிக லாபம் அடைவார்கள். மனைகள் மூலம் பொருள் ஈட்டுவார்கள். தமிழக கோவில்களின் வரலாறுகளை ( தினந்தோறும் வெளியாகும் ) அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்-ஐ டவுன்லோடு செய்யு

தை மாதத்தில் பொங்கல் மட்டுமில்லீங்க, இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கு?

Image
தை மாதம் என்றால் பொங்கல் மட்டும் தான் சிறப்பா என்ன? இன்னும் வேறென்ன சிறப்புகள் இருக்கின்றது என்பதைப் பற்றி பார்ப்போம் வாருங்கள். தை மாத விரதாதி தினங்கள் : தை - 5 = 18.01.2018 = சந்திர தர்சனம், ச்ரவண விரதம்  தை - 7 = 20.01.2018 = சுக்ல பக்ஷ சதுர்த்தி, அப்பூதி அடிகளார் குருபூஜை  தை - 8 = 21.01.2018 = சதுர்த்தி விரதம்  தை - 9 = 22.01.2018 = சுக்ல பக்ஷ ஷஷ்டி  தை - 10 = 23.01.2018 = ஷஷ்டி விரதம், கலிக்கம்பர் குருபூஜை, நமசிவாய தேசிகர் குருபூஜை  தை - 11 = 24.01.2018 = ரத சப்தமி, கரிநாள்  தை - 13 = 26.01.2018 = தை கிருத்திகை  தை - 14 = 27.01.2018 = சுக்ல பக்ஷ ஏகாதசி  தை - 15 = 28.01.2018 = கண்ணப்பர் குருபூஜை, சுக்லபக்ஷ வைஷ்ணவ ஏகாதசி  தை - 16 = 29.01.2018 = சுக்லபக்ஷ மஹாப்பிரதோஷம், அரிவட்டார் குருபூஜை  தை - 17 = 30.01.2018 = பௌர்ணமி, கரிநாள்  தை - 18= 31.01.2018 = தைப்பூசம், வடலூர் ஜோதி தரிசனம், சந்திர கிரஹணம்  ( மாலை மணி 5.18 முதல் இரவு 8.41 வரை) வாஸ்து நாள் : தை - 12 = 25.01.2018 = வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல் ( நல்ல நேரம் காலை 10.06 முதல் 10.42 வரை

பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சில விஷயங்கள்

Image
ஜோதிட சாஸ்திரப்படி பெண்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி பொதுவான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.  • திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும். • கர்ப்பமான பெண்கள் உக்ர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு போகக்கூடாது. • பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது. • அமாவாசை, நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. • மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். • பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது). • கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. • பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது. •  கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி

நட்சத்திரங்களில் சிறந்தது எது ?

Image
நீங்கள் மூல நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமனாருக்கு ஆகாது. ஆயில்ய நக்ஷத்ரமா - அப்படீன்னா மாமியாருக்கு ஆகாது. சித்திரை நக்ஷத்ரமா - சித்திரை அப்பன் தெருவிலே. பெண் கேட்டை நக்ஷத்ரமா - கட்டிக்கப்போறவன் அண்ணனுக்கு ஆகாது. பூராடம் நக்ஷத்ரமா - காராடும், நூலாடாது. திருவோணமா - அது ஒரு ஓணமா இருக்கும். இது போன்ற தகவல்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேற்சொன்ன நக்ஷத்ரங்களில் ஒரு குழந்தை பிறந்த உடனே நிறையப் பேர் சொல்வது இந்த கருத்துதான்.  27 நக்ஷத்ரமும் நல்ல நக்ஷத்ரம் தான் - 12 ராசிகளும் நல்ல ராசிகள்தான். எந்த நக்ஷத்ரமும் கெட்ட நக்ஷத்ரமல்ல - எந்த ராசியும் கெட்ட ராசியல்ல. இது எதையும் நம்ப வேண்டாம். இதுவே உண்மை. நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது. தமிழக கோவில்களின் வரலாறுகளை ( தினந்தோறும் வெளியாகும் ) அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள்...

குழந்தை வந்த ராசி..

Image
ஆன்மீக கதைகள்  அந்த வீடே இரண்டாம் முறையாக சந்தோஷத்தால் நிறைந்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்து நெஞ்சங்களையும் படபடக்க வைத்தன. இந்த இரண்டாவது குதூகலம் ஆனந்தனால் வந்தது. மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பிய அவன், வழக்கம் போல பேன்ட்  -சட்டையிலிருந்து விடுபட்டு, லுங்கி சுதந்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, முகம் கழுவி, பூஜையறைக்குச் சென்று, லேசாக நெற்றியில்  விபூதியைத் தீற்றிக்கொண்டு, பத்து விநாடிகள் இறைவனுக்கு தன் தியானத்தை சமர்ப்பித்துவிட்டு ஹாலுக்கு வந்து டெலிவிஷன் முன் இருந்த  நாற்காலியில் அமர்ந்தான்.  அவனுடைய அம்மாவும் அப்பாவும் இங்கிதம் தெரிந்து, வாசலுக்குச் சென்று காற்றாட அமர்ந்துகொண்டார்கள். அவனிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்த விலாசினி, அவனுக்கு டீ தயாரிக்க ஆரம்பித்தாள். படுக்கையறையில், முதல் சந்தோஷத்துக்குக் காரணமான கீர்த்தனா தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு மாதக் குழந்தை.ஆவி பறந்த டீயை ஒரு கோப்பையில் ஏந்தி வந்த விலாசினி, ஆனந்தனிடம்  அதைக் கொடுத்து விட்டு பக்கத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அவளுக்குள் என்னவென்ற

கை தட்டு, சித்தி உண்டாகும்

Image
ஆன்மீக கதைகள்  ஒரு குருவிடம் பல சீடர்கள் இருந்தனர். குரு சீடர்களுக்கு நற்போதனைகள் செய்வதுடன் அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களும் கூறுவார். ஒரு நாள், சீடர்களில் ஒருவன், ‘‘குருவே! பக்தியில் முழுமையாக ஈடுபட என்ன செய்ய வேண்டும்? ஏகாந்த சித்தி ஏற்பட வேண்டுமானால் அதற்கு என்ன  வழியைக் கையாள வேண்டும்?’’ என்று கேட்டான். அவனைப் பார்த்து மெல்லச் சிரித்த குரு, ‘‘இறைவனிடம் பக்தி செலுத்த பல வழிகள் உள்ளன. அவரவர் மனப்பக்குவத்துக்கு ஏற்ப அந்தந்த வழி களில் முயன்றால் ஏகாந்த சித்தி ஏற்படும். மௌனமாக இறைவனை வழிபடுவது ஒரு முறை.  ஆனால், மனம் இறைவனிடம் ஒன்றாமல் சிதறுமானால், அதை அடக்க இன்னொரு வழி இருக்கிறது. அது கைகளைத் தட்டியபடி இறைவன் பாடல்களைப் பாடுவது. ஒரு மரத்தின் அடியிலிருந்து கை தட்டி னால் அம்மரக் கிளைகளில் இருக்கும் பறவைகள் நாலா பக்கங்களிலும் சிறகடித்துப் பறந்து போகும். அதைப்போல இறைவனின் லீலைகளையும் கரு ணையையும் பாடலாக பாடி  நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு கை தட்டினால் உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகளெல்லாம் அகன்றோடிவிடும்.  கைகளால் தாளம் போட்டுக் கொண்டே இறை நாம சங்கீர்த்தனம் செய். அப்போது உனக்கு

வேல் வழங்கியது ஏன் ?

Image
முருகப்பெருமான் வேல் எனும் ஆயுதத்தை கையில் தாங்கியுள்ளார். இதனால் தான் அவர் "வேலாயுதம்' எனப்பட்டார். இது அவரது அன்னை பார்வதியால் தரப்பட்டது. "ஒரு அம்மா தன் பிள்ளைக்கு இப்படி ஒரு ஆபத்தான ஆயுதத்தை கொடுத்து பிறரைக்கொல்ல  ஏவலாமா?' என்ற கேள்வி சிலரது மனதில் எழும்.  இதோ அதற்குரிய விளக்கம். "வேல்' மிகவும் சக்தி வாய்ந்தது. சக்தியின்றி உடலில் உயிர் நிலைக்காது. தாயே தன் குழந்தைக்கு சக்தி தருபவள். அவள் தன் குழந்தையை தைரியத்துடன் வளர்க்க வேண்டும். "வீரன் ஒரு முறை சாகிறான். கோழை தினமும் சாகிறான்' என்ற விவேகானந்தரின் வாக்குப்படி அவள் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி வளர்க்க வேண்டும் என்பதை வேல் தத்துவம் காட்டுகிறது.