நிலவேம்பு கசாயம் எப்படி செய்யலாம்? சில யோசனைகள்!!
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நிலவேம்பு கசாயத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் டெங்கு ஒலிப்பில் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. முக்கியமாக கொசுக்களை ஒழிக்கும் பணிகளிலும் மும்மரமாகவும், கவனத்துடனும் செயலாற்றி வருகின்றன. முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார மையங்களில் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு ஆகியவற்றை பொடித்து உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு மூலிகையே நிலவேம்பு பொடியாகும். இது நாட்டுமருந்து கடைகளில் தனித்தனி மூளிகைகலாகவும், ஒருங்கிணைந்த பொடியாகவும் கூட கிடைக்கிறது. இதை எப்படி கசாயமாக காய்ச்ச வேண்டும் என இங்கு பார்ப்போம். 5 கிராம் முதல் 10 கிராம் வரையிலான நிலவேம்பு பொடியை 200 மில்லி லிட்டர் தண்ணீருடன் கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். 200 மில்லி ஆனது 50 மில்லியாக க