மனம் குழந்தையானது







இலங்கையில் சீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் மனைவி மண்டோதரியைப் பார்த்தான். அவளது அடக்கத்தைப் பார்த்து, அவளே சீதை என நினைத்துக் கொண்டான். தேடியது கிடைத்து விட்டால் மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை தானே! எழுபது வயது பெரியவராக இருந்தாலும், அபரிமித மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால், ஆட்டம் தானாக வருகிறதல்லவா! அதுபோல் வியாகரண (இலக்கணம்) பண்டிதர், சொல்லின் செல்வர் என்றெல்லாம் புகழப்படும் அனுமனும், தன் வாலை எடுத்து தரையில் அடித்தார். குரங்குகளுக்கு மகிழ்ச்சி வந்துவிட்டால், வாலை தான் தரையில் அடிக்கும். அத்துடன் ஒரு கம்பத்திலிருந்து இன்னொரு கம்பத்திற்கு தாவினார். மாறி மாறி தாவி விளையாடினார். இதன்மூலம் தன் பிறவிகுணத்தையும் அந்த இடத்திலே காட்டி விட்டார். எவ்வளவு பெரியவராக இருந்தாலும், இயற்கை சுபாவம் மாறாது என்பதும் இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அனுமனின் வால் தரிசனம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் தான், அதற்கு குங்குமம் இட்டு மரியாதை செய்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?