Posts

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!

Image
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்ரி மந்திரம் தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பிரச்சோதயாத்

தமிழக அரசின் புதிய முயற்சி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய whatsapp சேனல் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Image
தமிழக அரசின் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) ஆனது பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை 26 பிப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர, GCC மற்றும் பொதுமக்களிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான வசதியாகவும் இந்த வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தப்படும். வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு GCC தான் என்றும் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான தானியங்கி குறைகளை பதிவு செய்யும் முறை குடிமக்களுக்கு பதிவு செய்யப்பட்ட குறைகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும். முக்கியமான அறிவிப்புகள், புதுப்பிப்புகள், குறிப்பிட்ட கால நிகழ்வுகள், ஹெல்ப்லைன்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களுக்கும் இது வழி வகுக்கும். சரியான நேரத்தில், பயனாளிகளுக்கான தடுப்பூசி வெளியீட்டு முறைகள் குறித்த முக்கியமான தகவல்களும் இந்த சேனல் வழியாக வழங்கப்படும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல், சரியான நேரத்தில் வரி செலுத்துதல் குறித்த நினைவூட்டல்கள் மற்றும் குடி

நந்தியின் காதுகளில் வேண்டலாமா ?

Image
நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை சிவனிடமே நேரிடையாகச் சொல்வதாகப் பாவித்து நந்தியின் காதில் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வது பல ஆலயங்களிலும் காணப்படுகிறது. இதை சாஸ்திரம் தடுக்கவில்லை. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம்,  ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.

பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது.  அதே  போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது. தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண்

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

Image
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி. கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !! நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன். கணபதி மந்திரம் … ப

இறந்த பிறகும் கூட மனிதர்களுக்கு நகங்களும் முடியும் வளரும் என்பது உண்மையா..? தெரிஞ்சுக்க இதைப் படிங்க

Image
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும் முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இதுகுறித்து பல கதைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில், மனித நகங்களும் முடியும் இறந்த பிறகும் தொடர்ந்து வளர்கிறதா என்பது குறித்து மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சி நடந்துள்ளது என்பதே உண்மை.. உண்மையில், ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலின் வெவ்வேறு பாகங்களின் செல்கள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவது நிறுத்தப்படும். மூளை செல்கள் செயல்பாட்டில் இல்லை. எனவே, இதயம் துடிப்பதை நிறுத்திய ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள், மூளை செல்கள் அனைத்தும் இறக்கின்றன. ஒரு நபரின் உறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றால், அவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தை அகற்ற வேண்டியது அவசியம். இவை அடுத்த ஆறு மணி நேரத்தில் நன்கொடையாளரின் உடலில் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இறந்த பிறகும் தோல் செல்கள் உயிரோடு இருக்கும். ஒரு நபர் இறந்த 12 மணி நேரம் வரை தோல் மா

'ஆ.. செம காரம்"னு = ஒதுக்கிறாதீங்க..! சைனஸ் வயிற்று பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பலவற்றிற்கு தீர்வு இருக்கு..!!

Image
பொதுவாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயை அனைவரும் பார்த்திருப்போம், சமையலில் சேர்த்திருப்போம். ஆனால் சாப்பிடும் போது அதனை ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுவோம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மூக்கின் சளிச்சவ்வை தூண்டுவதால் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் சைனஸ் பிரச்னை, தலையில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தாலும் மூக்கின் வழியாக வெளியேற்றிவிடும். பச்சை மிளகாய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு உடலின் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை பச்சை மிளகாய்க்கு உண்டு. இரும்பு சத்தை இயற்கையாகவே அதிகம் கொண்டிருக்கும் பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வத