Posts

அறுபதாம் கல்யாணம் எப்படி செய்ய வேண்டும் ?

Image
“சஷ்டியப்தபூர்த்தி” என்பது திருமணமான ஒரு ஆண் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் திருமணமாகும். இதை தமிழில் “60 ஆம் கல்யாணம்” அல்லது “மணிவிழா” என்று அனைவரும் கூறுவார். இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கு குடும்பத்தின் மூத்தவரான அந்த ஆண் தான் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திர திதியன்று நடத்தபடுகிறது. இந்த 60 வது திருமண சடங்கு பற்றி மேலும் பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நமது தமிழ் பாரம்பரியத்தில் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. அதன் படி குடும்ப தலைவரான ஒரு ஆண் இந்த 60 ஆண்டுகள் வயது மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61 ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது. மேலும் வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று

உதவியவர்களை என்றும் மறக்காதீர்கள்

Image
நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத் தரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை பார்ப்போம்... யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான். கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, ‘கண்ணன் இங்கு வரவில்லையே’ என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான். அவன் கண்ணனிடம், கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன் எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான். கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான். ததிபாண்டன் அப்போதும் விடவில்லை. கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு! என்றான். கண்ணன், தாழிக்கும் விமோ

ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா ?

Image
நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் என்போதும் உயர்ந்தது. பொட்டு வைத்துக்கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அற்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும் என்பது உண்மை. அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தைப் பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிபடும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மைய

திருமணம் உண்டா இல்லையா ?

Image
எனக்கு திருமணம் உண்டா இல்லையா ? பொதுவாக எல்லா இளைஞர், இளைஞிகளுக்குத் தோன்றும் கேள்வி. சிலர் தாமாகவே திருமணத்துக்கு, பெண்ணை / ஆணை தேர்ந்தெடுத்துப் பெற்றோர்களின் சம்மதத்திற்கு காத்திருந்தாலும் அவர்கள் மனதில் சிறு இழை ஓடுவது அம்மா, அப்பா ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ அப்புறம் தமது காதலர் வீட்டில் ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, இப்படிப் பல கேள்விகளை முன்னிறுத்தி, எனக்குத் திருமணம் உண்டா அல்லது இல்லையா என்கிற பாணியிலேயே இருக்கும். அதேபோல், காதலிக்காதவர்களும் எனக்கு அப்பா, அம்மா திருமணம் செய்வார்களா, இல்லையா எனவும் மனது ஏங்கித் தவிக்கத்தான் செய்யும். அப்படியே அவர்கள் இஷ்டப்படி செய்வித்தாலும், வருபவர் என்னை அன்பாகக் கவனிப்பவராக வருவாரா, அவர் சமூக அந்தஸ்து உள்ளவராக இருப்பாரா, அவரின் நிறம் மற்றும் அழகு எவ்வாறு இருக்கும். அவரின் கவர்ச்சித் தன்மை, ஈர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையுமா என்றெல்லாம் எண்ணத்தோன்றும். ஒருவருக்கு, அவர்தம் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினம், சுப கிரகங்களின் தொடர்பும், இலக்கினாதிபதி பலமாக இருந்தாலும், அவருக்கு திருமணம் நடக்க

சுமங்கலிகள் எப்படி தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும் ?

Image
நவராத்திரி விழாவின்போதும், பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பார்கள். கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாகவும் அதை வாங்கும் சுமங்கலியும் 3 தேவியராகவும் இருக்கின்றன. நாம் கொடுக்கும் தாம்பூலத்துடன் மற்ற பொருட்களையும் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் தேங்காய், மட்டையுடன் இருக்கும் தேங்காயாக கொடுக்க வேண்டும். இந்த மட்டை தேங்காய்க்குள் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. அதாவது நாம் ஆணவம், மாயை, வன்மம் இவற்றை அகற்ற வேண்டும். ஆணவம் மட்டை தேங்காய், மாயை அதன் நார், வன்மம் ஓடு இவையெல்லாம் நீக்கினால் தான் வெண்மையான தேங்காய் கிடைக்கும். கொடுக்கும் சுமங்கலி நாருடன் கூடிய தேங்காயில் மஞ்சள் தடவி பூவை சுற்றி இருகைகளால் வாங்கும் சுமங்கலி பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். வாங்கும் சுமங்கலிகள் மடி ஏந்தி வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கொடுக்கும் சுமங்கலியிடமும், பெறும் சுமங்கலியிடமும் மூன்று தேவியரும் வாசம் செய்வதால் நாம் நினைக்கும் காரியங்களை, வரங்களை தேவியர் மூவரும் தங்கு தடையின்றி நமக்கு அருள்கின்றன.தாம்பூலத்தை கொடுப்பதிலும், வாங்குவதிலும் நன்

சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?

 சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருப்பது தெரியுமா? மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன் தம்பிக்குள் தகராறாகி, கோபித்துக்கொண்ட முருகன் மலை மீது ஏறி நின்ற கதைகள் பல கேட்டிருப்போம். அப்படி பட்ட முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் பல சுவாரசியங்களும், இன்ப அதிர்ச்சிகளும் நிறைந்தது இந்த சூரசம்ஹாரம். இதையே பெரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். அதுவும் திருச்செந்தூரில். சிக்கலில் வேல் வாங்கி வந்த முகம், செந்தூரில் சூரனை வதம் செய்த முகம் என்று முருகப் பெருமானின் பெருமைகளை பாடுவார்கள். இந்த சூரசம்ஹாரத்தின் வரலாறு பற்றியும், அதன் பின் இருக்கு சில சுவாரசியமான தகவல்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் இன்று மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு படையெடுக்கிறார்கள். எப்படி செல்வது எது சிறந்த வழி என்பதையும், சூர சம்ஹார நிகழ்

தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு...! மற்றும் மருத்துவம்!

Image
டெங்கு காய்ச்சல்: ஏடிஎஸ் வகை கொசு கடித்தால் மனிதர்களுக்கு இந்த தொற்று நோய் பரவுகிறது. இதை 'எலும்பு முறிவு காய்ச்சல்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் வந்தால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த நோய் மிகவும் தீவிரம் ஆகும் பட்சத்தில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் 'டெங்கு குருதிப் போக்கு காய்ச்சல்' ஏற்படும். இது உயிருக்கு ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயை பரப்பும் கொசுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். ஆனால் டெங்கு காய்ச்சல் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. டெங்கு காய்ச்சல் ஒருவருக்கு இருக்கும்பொழுது உடலில் நீர் சத்து மிகவும் குறைந்து காணப்படும். இந்த நீரின் அளவை சரிசெய்வதற்கு கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் வழங்கும் ஓஆர்எஸ் என்ற நீராகாரம் போதுமான அளவு கொடுத்து வர வேண்டும். இதனால் உடலில்