மரணத்தை தரும் பூக்கள் பற்றி தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா
பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம். கால்மியா பூ : பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப்பூவில் அதிக விஷத்தன்மை உள்ளது. இதன் இலைகளை பிய்த்து வாயில் போட்டால் வாந்தியில் துவங்கி ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும். ஒனாந்தே பூ : ஸ்வீடன், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது. இதனை சாப்பிடுவதால் போதை ஏறும். தொடர்ந்து உட்கொண்டால் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட 70 சதவீதம் வரை வாய்ப்புகள் உண்டு. அடேனியம் பூ : பூக்களைப் பறித்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைப்பார்கள் அந்த தண்ணீர் எல்லாம் வற்றியபிறகு பூக்கள் வெந்து கெட்டியான பிசினாக மாறும். இது பயங்கர விஷத்தன்மை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில்,வேட்டைக்காரர்கள் வேட்டையாடப் பயன்படுத்தும் அம்புகளில் இந்த விஷத்தை தடவிக் கொள்வார்கள். கேஸ்டர் பூ : இந்தியாவில் இந்த செடியை அதிகம் காணமுடியும். அதிக விஷத்தன்மையுள்ள பூ என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. டெத் பூ : இந்த வகை பூக்