Posts

மரணத்தை தரும் பூக்கள் பற்றி தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா

Image
பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.  கால்மியா பூ : பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்தப்பூவில் அதிக விஷத்தன்மை உள்ளது. இதன் இலைகளை பிய்த்து வாயில் போட்டால் வாந்தியில் துவங்கி ஏராளமான உடல் உபாதைகள் ஏற்படும். ஒனாந்தே பூ : ஸ்வீடன், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகமாக வளருகிறது. இதனை சாப்பிடுவதால் போதை ஏறும். தொடர்ந்து உட்கொண்டால் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட 70 சதவீதம் வரை வாய்ப்புகள் உண்டு. அடேனியம் பூ : பூக்களைப் பறித்து தண்ணீரில் நன்றாக கொதிக்க வைப்பார்கள் அந்த தண்ணீர் எல்லாம் வற்றியபிறகு பூக்கள் வெந்து கெட்டியான பிசினாக மாறும். இது பயங்கர விஷத்தன்மை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில்,வேட்டைக்காரர்கள் வேட்டையாடப் பயன்படுத்தும் அம்புகளில் இந்த விஷத்தை தடவிக் கொள்வார்கள்.  கேஸ்டர் பூ : இந்தியாவில் இந்த செடியை அதிகம் காணமுடியும். அதிக விஷத்தன்மையுள்ள பூ என்று கின்னஸில் இடம் பிடித்திருக்கிறது. டெத் பூ : இந்த வகை பூக்

ஆதார், பான் எண் இணைக்காமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு உண்டாகும் சிக்கல் ...

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் மக்களவையில் ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது ஆதார் பான் இணைப்பினை செய்யக் கடைசித் தேதி ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இது இணைப்பைச் செய்யாதவர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக இருந்தாலும் இணைப்பை செய்யாமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி என ஜூலை 31-ம் தேதி வரை கடைசித் தேதி என வருமான வரித்துறை அறிவித்தது. அதே நேரம் ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு ஆதார், பான் இணைப்புக் கட்டாயம் என்று அறிவித்து இருந்தது.தேதியை 5 நாட்கள் நீட்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்தது.  ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பைச் செய்யக் கடைசித் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி எனவும் அறிவித்தது. இப்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இணைப்பைச் செய்யக் கடைசித் தேதி ஒன்றும் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதில் தான் குழப்பம் எழுந்துள்ளது.வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பைச

விரைவில் வருகிறது ஃபேஸ்புக் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி

Image
ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்து கொண்டிருக்கும் போதே ஷாப்பிங் செய்யும் புது வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அப்டேட் செய்து கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தன் வசம் ஈர்த்துள்ள ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் இந்தியாவில்தான் மிக அதிகம் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரங்கள். இந்நிலையில் ஃபேஸ்புக் ‘மார்க்கெட் ப்ளேஸ்’ எனும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பொருட்களை வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும். இச்சேவை ஏற்கனவே அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது தற்போது 17 ஐரோப்பிய நாடுகளில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். பொருட்களை வாங்குவதற்கு முன் விற்பனையாளரின் சுயவிவரங்களை ஃபேஸ்புக் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதனால் ஆன்லைன் மோசடி தடுக்கப்படும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் மே மாதத்தில் மட்டும் 18 மில்லியன் பொருட்கள் ஃபேஸ்புக் மூலம

உஷார்...! சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை?

Image
உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும். ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள் பற்றி இந்த பகுதியில் காணலாம். செல்களில் நச்சுத்தன்மை ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது டி.என்.ஏ போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம். இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொருப்பாகிறது. சுவாசக்கோளாறை உண்டாக்குகிறது ஊதுவர்த்தியின் புகை சிலருக்கு இருமல் மற்றும் தும்மலை ஏற்படுத்துகிறது. இது சுவாசப்பாதைகளை நச்சுக்களை உருவாக்குகிறது. இதில் உள்ள நுண்ணிய நச்சுக்கள், மிகவும் ஆபத்தானவை. நுரையிரல் பாதிப்பு காற்று மாசுபடுவதினால் நுரையிரலில் எரிச்சல் ஏற்படுகிறது. இது நுரையிரல் புற்றுநோய்க்கான ஆபத்துகளை அதிகரிக்கலாம். மேலும் உடல் நலத்தையும் பாதிக்கிறது. ஆஸ்துமா அறிகுறிகள் காற்றை மாசுபடுத்தி, எரிச்சலூட்டுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளை அதிகரிக்கிறது. இருமல் போன்றவற்றிற்கு

இனி வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம்....

Image
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் UPI வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் இனி வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் எளிதாக செய்துக்கொள்ளலாம்.  ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்-ஐ கைப்பற்றிய பிறகு அதில் நிறைய வசதிகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது என்றும் அதை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதன்படி தற்போது ஆதார் எண் மூலம் பண பரிமாற்றம் செய்யக்கூடிய UPI  PAYMENTS வசதியை இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப்பில் எளிதாக பண பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம். அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக, இனி வரும் காலங்களில் அனைத்து பரிமாற்றங்களும் இனி ஆன்லைன்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால் வாட்ஸ்அப் சாட்மூலமாகவே ஒரு வங்கி கணக்கிலிருந்து, மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாறிக்கொள்ளளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் டிஜிட்டல் திட்டத்தை பயன்படுத்திக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் லாபம் ஈட்ட இம்முறையை கையாளுகிறது.

சமூகத்தை சீர்குலைக்கும் சாராஹ் ஆப்… ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Image
ஃபேஸ்புக், ட்விட்டர் என அங்கு பார்த்தாலும்  Sarahah  என வண்ணமயமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது ஒரு ஸ்டேடஸ் செயலி. வலைதளங்களில் நம்முடன் இணைந்துள்ள மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரது முகம் தெரியாமல் அறிந்துகொள்ள வழிவகை செய்கிறது இந்த செயலி. எளிமையாக சொன்னால் இது ஒரு ஆண்-லைன் மொட்டை கடுதாசி சிஸ்டம் பாஸ். எப்படி செயல்படுகிறது ? ஆழ்மனதில் தேங்கியுள்ள வக்கிரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து மனசை துடைத்து தூர் வாரும் இந்த செயலி, ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி IOS இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அந்த செயலியில் உங்களது கணக்கை துவங்கி, உங்களுக்கான URL முகவரியை ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் ட்வீட்டி விட்டால் போதும், உங்களது முகமறியாத நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்த செயலிக்குள் இருக்கும் Inboxக்கு அனுப்பி வைப்பார்கள். இன்னும் விசேசம் என்னவென்றால், உங்களது முகவரிக்கு யார் வேண்டுமானாலும் லாக்-இன் செய்யாமலேயே கருத்து தெரிவிக்கலாம், பாராட்டலாம், விமர்சிக்கலாம், நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்கலாம், கழுவியும் ஊற்றலாம். இப்படி உங்களிடம் தெரிவிக்க வேண்ட

நாளை சந்திர கிரகணம்: 2 மணி நேரம் நீடிக்கும்

Image
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில்  பார்க்க முடியும்.நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர  கிரகணம் நாளை  நடக்கிறது. இதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் காண முடியும் என  கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் தேபிபிரசாத் கூறி உள்ளார்.அவர் கூறுகையில், ‘‘சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 10.40 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கும். முழு கிரகணம் 11.50  மணிக்கு ஏற்படும்’’ என்றார்.