வந்தாச்சு பொங்கல்... எதுக்கு கொண்டாடுகிறோம்.. வாங்க தெரிஞ்சிக்கலாம்..!!


தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஜாதி மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொங்கலை தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியாது.

இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளுள் ஒன்று தான் உணவு.


பழங்காலத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவைத் தேடி அலைந்த போது அந்த நிலையை மாற்றுவதற்கு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு உணவை உற்பத்தி செய்ய முயன்றனர். அவ்வாறு அயராது உழைத்து நெல்லை பயிரிட்டு அறுவடை செய்தனர். தமிழ்நாட்டின் முதன்மை உணவு பொருளை அரிசிதான். இந்த உணவுப் பொருளை விளைவிக்க உறுதுணையாக இருந்த இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்த பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் கொண்டாடப்படும்.

முதல் நாள் போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்டால் மார்கழியில் அறுவடை செய்து மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் இந்த நாளன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கத்தின் காரணமாக மக்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து தேவையில்லாத பொருட்களையும் எரித்து விடுவார்கள். இரண்டாம் நாள் பொங்கல் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் விவசாயத்திற்கு பெரிதும் உதவி புரிந்த கதிரவனை வணங்கி பூஜை செய்து நாம் அறுவடை செய்து வந்த புத்தரிசி பொங்கலிட்டு படைத்து அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்துகொள்வார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலை திருவள்ளுவர் தினம் என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த நாளில் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தம் திருக்குறளில் மூலம் தமிழின் பெருமையையும் தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியதனால் தான் இந்த நாளை திருவள்ளுவர் தினமாக கொண்டாடுகிறோம்.

நான்காவது நாள் காணும் பொங்கல். இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்