Posts

Showing posts from 2018

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்

Image
சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: 1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது. 2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது. 3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது. 5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது. 6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது. 7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது. மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்

பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது. அதே போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது. தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண் கூடாக

இந்த உணவுகளை நீங்கள் கழுவிய பின்னர்தான் உண்ணவேண்டும் !!

Image
தர்பூசணியில் உள்ள உட்பகுதியை தான் நாம் சாப்பிடுவோம் என்றாலும், அதன் மேல் பகுதியில் இருந்து தான் நாம் கட் செய்வோம். எனவே, அதில் இருக்கும் சால்மோனெல்லா மற்றும் லிஸ்டேரியா போன்ற நோய் கிருமிகள் உள்ளே இருக்கும் பழத்திலும் வந்து ஒட்டி கொள்ளும். காளானில் ஏராளமான வகைகள் உள்ளன. நாம் சாப்பிட கூடிய காளானை நீரில் ஊற வைத்து கழுவிய பின்னரே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இதில் உள்ள தூசுகள் மற்றும் நுண் கிருமிகள் நமது உடலில் சென்று நோய்களை உருவாக்கும். சிப்பியை பலரும் சாப்பிடுவதற்கு பயன்படுத்துவர். ஆனால், இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக நன்றாக கழுவிய பின்னர் சாப்பிட்டால் நல்லது. ஏனெனில், கடலில் உள்ள கழிவுகள், பாக்டீரியாக்கள் இதனை மீது ஒட்டி கொண்டிருக்கும்.காய்கனிகள் என்றாலும் அவற்றை அப்படியே சாப்பிடுவது தவறு. முற்றிலுமாக கழுவிய பின்னரே அதனை சாப்பிட வேண்டும். 

வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

Image
திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும். ஓம் வாஜுஸூதேவம் ஹ்ருஷீகேஸம் வாமனம் ஜலஸாயினம் ஜனார்தனம்  ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்  கருடத்வஜம் வராஹம் புண்டரீகாக்ஷம்  ந்ருஸிம்ஹம் நரகாந்தகம் அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்த  மஜமவ்யயம் நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்திபாஜனம் கோவர்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் வேத்தாரம் யக்ஞபுருஷம் யக்ஞேஸம் யக்ஞவாஹகம் சக்ரபாணிம் கதாபாணிம் ஸங்கபாணிம் நரோத்தமம் வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் த்ரிவிக்ரமம் த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஸ்வரம் ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம் மங்கலாயுதம் தாமோதரம் தமோபேதம் கேஸவம் கேஸிஸ¨தனம் வரேண்யம் வரதம் விஷ்ணுமானந்தம் வஸூதேவஜம் ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் ஸகலம் நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் ஹிரண்யதனுஸங்காஸம் ஸூர்யாயுத ஸமப்ரபம்மேகஸ்யாமம் சதுர்பாஹம் குஸலம்

காலண்டர் பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் இப்பதிவில் காணலாம்

Image
காலண்டர் என்று நம் நினைவுகளில் வந்து செல்வது என்னவென்றால், அதில் பெரியவர்களாயிருப்பின் முக்கியமான நாட்கள் மற்றும் விழா வைபோகம் பற்றி நினைவுக்கு வரும். அதுவே, சிறியவர்களாயிருப்பின் விடுமுறை எப்பொது கிடைக்கும் என்று நினைப்போம். காலண்டர் என்றவுடனே, முக்கியமான விழாக்கள், விடுமுறை தினங்கள் மற்றும் நாட்டின் சில சிறப்பான விசயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள ஒரு அற்புதமான சாதனம். அதுமட்டுமல்லாமல், எந்த தினத்தில் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிற சாதனம். அதை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இதில் காண்போம். வாருங்கள். காலண்டர் காலண்டர் இந்த பெயர் எதிலிருந்து வந்தது தெரியுமா?  கலேண்டே(மாதத்தின் முதல் நாள் அல்லது கணக்கு கூட்டுவது)  என்ற இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. நாம் பயன்படுத்தும் இந்த காலண்டர் எந்த வகையை சார்ந்தது தெரியுமா? இது கிரிகோரியன் காலண்டர். இதை அறிமுகப்படுத்தியது, அப்போதைய கத்தோலிக் தேவ ஆலயத்தில் உள்ள  போப் கிரிகோரி 13 என்பவர் 1582  ல் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பு ஜூலியன் காலண்டரை பயன்படுத்தி வந்தனர். முதன் முதலில்  எகிப்தியர்கள்  தான் காலண்டரை பிரபலபடுத்தினார். இதை

இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரம் எது தெரியுமா?

Image
பெங்களூரு: இ ந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2வது இடத்தை மும்பையும், 3வது இடத்தை தலைநகர் டில்லியும் பிடித்து உள்ளது. இது தொடர்பாக லிங்க்ட்இன் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரிய வந்ததுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக, ஹார்டுவேர், நெட்வொர்க்கிங் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.14.7 லட்சம், மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையில் பணிபுரிபவர்கள் ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் பணிபுரிபவர்கள் ரூ.9 லட்சமும் சம்பளம் பெறுகின்றனர். பெங்களூருவையடுத்து 9 லட்ச ரூபாய் வருமானம் தரும் மும்பை நகரம் 2ம் இடத்திலும், 8.9 லட்ச ரூபாய் சராசரி வருமானத்துடன் டில்லி-NCR 3ம் இடத்திலும், 8.4 லட்ச ரூபாய் வருமானம் தரும் ஹைதெராபாத் 4ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னை இப்பட்டியலில் 5ம் இடம் வகிக்கிறது. இங்கு நபர் ஒருவருக்கு சராசரி வருமானம் 6.3 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம், நாம் அறிந்திடாத பின்னணி...

Image
கார்த்திகை தீபம் ,  தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது. தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே. அனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து. தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள் ் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்ம

16 வகை தீபங்கள்

Image
தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு. தீபத்திற்கான எண்ணெய் எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது.  இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

Image
திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்... முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும். இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும். மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும். நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும். ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும். ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

உங்கள் உடல் எடை எந்த அளவுக்கு இருந்தால் எத்தனை லிட்டர் குடிக்க வேண்டும்.

Image
உணவு சாப்பிடாமல் கூட வாரக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் ஒரு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் நீர்வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகள் செயல்படும் ஆற்றல் குறைய ஆரம்பிக்கும்.  45 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 50 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 55 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 60 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 65 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 70 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 75 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும். 80 கிலோ வரை உடல் எடை உள்ளவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

எந்த நோய்க்கு என்ன ஜூஸ் குடிக்க வேண்டும்!

Image
ரத்தச்சோகை இருந்தால் பீட்ரூட், பசலைக்கீரை, ஆப்பிள், கேரட், எலுமிச்சை, உலர்ந்த திராட்சை, முளைகட்டிய பயறு போன்றவற்றில் எதையாவது தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. வாதக் கோளாறுகளுக்கு அன்னாசி, பப்பாளி, பாகற்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, வேப்பம்பூ போன்றவற்றில் எதையாவது தனியாக ஜூஸ் செய்து குடிக்கலாம்.  அமிலம் அதிகமாக இருந்து நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு இருந்தால் வெள்ளரி, ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், தர்பூசணி, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, பசலைக்கீரைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம். முகப்பரு தொல்லைக்கு வெள்ளரி,பப்பாளி, எலுமிச்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் பழங்களின் செய்த ஜூஸ் நல்லது.  ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, ஆப்பிள், கேரட், வெங்காயம் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம். உடல்பருமன் உள்ளவர்கள் தக்காளி, கேரட், வெண்பூசணி, சுரைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றின் ஜூஸ்களை அருந்துவது நல்லது.  மெனோபாஸ

உங்கள் சமையல் ருசிக்கவில்லையா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க

Image
எத்தனை சமையல் நிகழ்ச்சி பார்த்து சமையல் செய்தாலும் சமையல் ருசியாக இல்லை என்று கவலை வேண்டாம் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க ருசி தூள் கிளப்பும் 1)வெண்பொங்கல், பொங்கல் என்ன செய்தாலும் சூடாக இருக்கும் போதும் நெய் ஊற்றினால் கிரகித்து கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் சிறிது நேரம் ஆறியவுடன் நெய் கொஞ்சம் ஊற்றினால் கூட தாராளமாக ஊற்றியது போல் இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும். 2)முற்றாத பாகற்காயை துண்டுகளாக நறுக்கி எலுமிச்சை சாறை ஊற்றி ஒரு டப்பாவில் போட்டு 15 நாள்கள் ஊற விடுங்கள்.பின்னர் அதை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம் கசப்பு இருக்காது. 3)குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் வினிகர் ஊற்றி காய்கறிகள் மற்றும் பழங்களை போட்டு 5 நிமிடம் வைத்தால் போதும் அதிலுள்ள கிரும்பிகள் அழிந்து விடும். பின்னர் எடுத்து துடைத்து விட்டு பயன்படுத்தலாம். 4)சப்பாத்தி, பூரி போன்றவை இரவில் சாப்பிட்டால் சரியாக ஜீரணம் ஆகாமல் இருக்கும் அப்போது தயிரில் சீனி கலந்து சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். 5)சமையலில் உப்பு, காரம் கூடினால் ஒரு உருளைக்கிழங்கை போட்டால் சரி ஆகும். இந்த டிப்ஸ் எல்லாம் சமையல் பண்ணும் போது use

இந்த டிப்ஸ் வச்சு உங்கள் சமையல் அறையை ரொம்ப சுத்தமாக வைத்து கொள்ளலாம்.

Image
சமையல் முடிந்தவுடன் சமையல் அறையை சுத்தபடுத்தி விட வேண்டும். சமையல் அறை சுத்தமாக இருந்தால் தான் நமக்கு ஆரோக்கியம். இந்த டிப்ஸ் use பண்ணி உங்க நேரத்தை வீணாக்காமல் சமையல் அறையை சுத்தமாக வைத்து கொள்ளலாம். 1) காய்கறிகளை போர்டில் வைத்து நறுக்கும் போது அதன் தோல் மற்றும் வேஸ்ட்டனா பகுதி அந்த போர்டு சுத்தி சிந்தி இருக்கும். இதனால் தரை அழுக்காக ஆகிவிடும். இதை தவிர்க்க போர்டின் ஒரு பக்கத்தில் ஒரு கவரை வைத்து விட்டால் போதும் நறுக்கும் காய்கறியின் தோல் பகுதியை அப்படியே அதனுள் தள்ளிவிடலாம். 2) பாத்திரத்தை sink யில் வைத்து கழுவி பாத்திரம் வைக்கும் கூடையில் வைப்பது வழக்கம்.அவ்வாறு வைக்கும் போது தண்ணீர் வடிந்து ஈரமாக ஆகி விடும். இதை தடுக்க ஒரு கனமான துணியை விரித்து அதன் மீது கூடையை வைத்து பாத்திரம் கழுவினால் தண்ணீர் டைல்ஸ் மீது வடியாது. சுத்தமாக இருக்கும். 3)குக்கரில் பிரியாணி சமைத்து முடித்தவுடன் அதை கழுவுவது ரொம்ப கடினமாக இருக்கும். அதனால் அந்த கறை மீது சிறிது பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வைத்தால் போதும் 5 நிமிடம் கழித்து கழுவினால் ஈஸியாக கறை எல்லாம் போய்விடும். 4)பால் ப

தீபாவளி சார்ந்த நம்பிக்கைகள்

Image
இந்தியா முழுவதும் பண்டிகைகள் என்பது கொண்டாடப்படும் போது நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூஜைகளும் பண்டிகைகளும் கொண்டாட்ட மகிழ்ச்சியை தரும் என்பதுடன் நமது வாழ்வின் வளங்கள் பன்மடங்கு பெருகுவதற்கும், ஆரோக்கியத்தை பெறுவதற்குமான முயற்சிகள்தான். சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பது பெரும்பாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களால் தான் அதிகமாக செயல்படுத்தப்படுகிறது. இறை நம்பிக்கை என்பதுடன், தொடர்ந்து வாழ்வை நகர்த்த மேம்பட்ட முயற்சியாகவும்தான் கொள்ள வேண்டும்.  அது போல் தீபாவளி பண்டிகை சமயத்திலும் சில சமய சடங்குகள் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தீபாவளி சமயத்தில் செய்யப்படும் இந்த தீர்வுக்கான முயற்சிகள் என்பது ஓம் வரைவது, சங்கு ஒலிக்க செய்வது, விநாயகர் - லட்சுமி மந்திரங்கள், கரும்பு வேர் வணங்குவது, தாமரை மலரால் பூஜை செய்வது போன்றவாறு உள்ளன. இவற்றை தீபாவளி சமயத்தில் செய்யும் போது நமது வறுமை நிலை ஒழிந்து செல்வ நிலை மேம்பாடு அடையும் என்பதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக தீபாவளி பூஜையோடு இந்த நம்பிக்கை சார்ந்த விஷயங்களை ம