காவல் துறை அதிகாரிகளுக்கு நடுராத்திரியில் வெளியான அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!
சென்னை மாநகர ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அதிரடி மாற்றம் செய்யப்ட்டுள்ளார். புதிய ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். சென்னை,மதுரை போலீஸ் கமிஷனர்கள் உள்பட 39 ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : 1. சென்னை காவல் ஆணையர் ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 2. செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 3. சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சுனில்குமார் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 4. மதுரை காவல் ஆணையராக பதவி வகிக்கும் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஏடிஜிபி தொழில் நுட்பப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி சிறப்பு காவற்படை ஈரோடு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 6. தலைமையிட ஐஜி ஜெயராம் மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்