Posts

சிவராத்திரியின்போது விரதம் இருப்பது எத்தகைய பலன்களை பெற்றுத்தரும்...?

Image
சிவராத்திரிக்கு முதல் நாள், ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட வேண்டும். தொடர்ந்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும்.  இரவு வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள், சிவாலயங்களில் நடைபெறும் சிவ  பூஜையில் கலந்து கொள்ளலாம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது கூடுதல் பலன் தரும்.   வீட்டில் பூஜை செய்பவர்கள், பஞ்சாட்சர மந்திரமான ‘நமசிவாய’, ‘சிவாய நம’ வார்த்தைகளை உச்சரித்தபடி இருக்க வேண்டும். மகா சிவராத்திரியின் முதல்  ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் ஜாமத்தில் லிங்கோத்பவரையும், நான்காம்  ஜாமத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திரசேகரர்)யையும் வழிபட வேண்டும்.  நான்கு கால பூஜைக்கு முன்பாக நடராஜரையும், பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவ புராணம்,  திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞான நூல்களைப் ப

பறவையின் பயணம் ! அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா வரை !!

Image
பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறிய பறவை தனது இனப்பெருக்கத்திற்காக அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா வரை பயணம் செய்கிறது. அதாவது இந்த பறவை பிப்ரவரி மாதம் அர்ஜென்டினாவில் இருந்து சுமார் 8300 கிலோமீட்டர் தூரம் பறந்து சென்று மார்ச் மாதம் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சென்றடைகிறது. இந்த பறவை சுமார் இரண்டு மாத காலங்களாக கடலின் மேற்பரப்பில் பறந்து செல்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்தப் பறவை பறந்து செல்லும் போது தனது அழகில் ஒரு குச்சி சுமந்து செல்லும். இந்த குச்சியை பயன்படுத்தி கடலின் மேற்பரப்பில் அவ்வப்போது நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். இந்த பறவை அர்கென்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வருவதற்கு சுமார் 16 ஆயிரத்து 600 கிலோமீட்டர் ஆகிறது.

மூன்றாம் பிறையை பார்க்கலாமா..ஏன்?

Image
மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே சந்திரதரிசனம் என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், பித்தா பிறைசூடி என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார். நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் அதற்காக விளக்கம்.

Image
இந்து சமயத்தில் பெருமாள்,சிவன்,என இரு பெரும்தெய்வங்கள் உண்டு . இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள் ஆடைஆபரணங்கள், நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார். ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தறித்து.உடலில்சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசி கோலத்தில் இருப்பார். பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர்மீது பக்திகொண்டு மக்கள் வழிபட்டுஅவரிடம்கோரிக்கை வைப்பது இயல்பான விசயம். ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவது தான் நிதர்சனம்.அவருடைய அலங்காரம்அப்படி.பெருமாளை யார் வேண்டுமானாலும் வணங்கலாம்.ஆனால் ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர்மீதுபக்திகொள்ள முடியும். பெருமாளை வணங்குவது தகப்பனின் கையை மகன் பிடித்துச்செல்வதுபோலாகும் தகப்பனின் கையை பிடித்துச்செல்லும் குழந்தை வழியில் ஏதாவது பள்ளம் வந்தால் கிழே விழுவதற்கு வாய்ப்பு அதிகம். ஈசனை வணங்குவது தகப்பன் குழந்தையின் கையை பிடிப்பதுபோலாகும். தகப்பனால் கரம்பற்றி அழைத்துச்செல்லப்படும் குழந்தை கீழேவிழுவதற்கோ வழிதவறவோ வாய்ப்பே இல்லை.

சித்தர்களும்... நட்சத்திரமும்..

Image
** சித்தர்களும்... நட்சத்திரமும்.. பிரச்சனைகளும் மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சினை தீர வழிபிறக்கும். * ஒரு முறையாவது உங்களுக்குரிய சித்தர் ஜீவ சமாதிக்கு நேரில் சென்று, ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதந்தோறும் உபவாசம் இருந்து வணங்கி வந்தால் பல மாறுதலான பலன்களை காண முடியும். * சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும், பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நலம் காணுங்கள். பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி, சிவாலயமாகவே இருக்க

பொங்கல் வைக்க நல்ல நேரம் இதோ...

Image
நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது பொங்கல் திருநாள். தைத்திருநாளில் மிக முக்கியமானது பொங்கல் வைப்பது. பொங்கல் திருநாளான (15.01.20)  காலை 09.00  மணி முதல் 10.00 மணி வரையிலான நேரம், பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். இந்த நல்ல நேரத்தில் பொங்கல் வைத்திட நமது வாழ்க்கையில் மங்கலம் பொங்கிடும்.அதிகாலை வைக்க நினைப்போர் காலை 7.30க்குள் வைத்து முடித்துவிட வேண்டும். பொங்கல் தினத்தன்று வீட்டு முற்றத்தில் குத்து விளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் , வாழை இலையின் இடது ஓரத்தில்  பச்சை நெல் வைக்கலாம்.நகரங்களில்  வசிப்பவர்கள் பச்சை நெல்லை வைக்க முடியாவிட்டாலும் , வாழையிலையில் பச்சரிசியை பரப்பி, கத்தரிக்காய், கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றையும்  படையலாக வைக்க வேண்டும். கரும்பை,  கரும்பு தோகையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைப்பது நல்லது.                  

சில ஆன்மீக தகவல்கள் ...

Image
1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் .. 2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது .. 3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் , மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் ...இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் . 4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும் ). 5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும் , (பதப்பட்ட பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் , இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது .. 6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )