Posts

வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்சனைக்கான அறிகுறிகள் இவை!

Image
மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்). மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக செயல்படும், இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அப்படி என்ன தான் அதீதமான வேலைகளைச் செய்கிறது இந்தக் கல்லீரல் என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு பித்த நீர் சுரக்க வேண்டும். அந்த பித்த நீரை தயாரிப்பது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள 80 சதவிகித கொழுப்பை, பித்த நீராக மாற்றி, பித்தப்பையில் சேமித்து வைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை, நம் உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தருகிறது. உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் பல பாகங்களையும் சென்றடைகிறது. பிளாஸ்மாவை ரத்தமாக மாற்றும் வேலையைச் செய்கிறது. ஆற்றலை சேமித்து வைக்கும் கிளைக்கோஜன் என்னும் வேதிப்பொருளை இந்த உறுப்புதான் சேமித்து வைக்கிறது. வேண்டாத நுண்ணுயிர்களை அழித்து, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைச் சீர் செய்து, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்களை சேமித்து வைக்க

முதுகு எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத முருங்கைக் கஞ்சி

Image
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு முதுகு எலும்பு தேய்மானத்தை தடுக்கும் முருங்கைக் கஞ்சி. இன்று நிறைய பேர்களுக்கு முதுகெலும்பு தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.. யாருக்கு எல்லாம் தேய்ந்து போகும் என்றால். அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள். இருசக்கர வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவோருக்கு. நீண்ட நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு.. இவை அனைத்துக்கும் முருங்கக்கீரை கஞ்சி தான் முழுமையான மருந்தாகும்.. முருங்கைக் கஞ்சி செய்வது எப்படி என்று பார்ப்போம். இரண்டு அல்லது மூன்று கட்டு முருங்கைக்கீரை இலைகளை எடுத்து நன்றாக கழுவி எடுத்து மிக்ஸியில் அரைத்து 2 லிட்டர் வரும்படி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.. முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி, 50 கிராம் மிளகு, 20 கிராம் பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வெயிலில் காய வைக்கவும் ‌. முருங்கை சாற்றில் சேர்த்த பொருட்கள் நன்றாக ஊறவேண்டும்.. இதனை ஒரு டப்பாவில் பத்திரபடுத்தி வைக்க வேண்டும்.. தினந்தோறும் இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இருந்து அரிசியை கஞ்சியாக செய்து சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும்.. க

தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் வைத்திருப்பவராக நீங்கள் உங்களுக்கு தான் இது!

Image
தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பதுஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்கத்திற்கு தடையாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தலையணைக்குப் பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது. இந்த நீல நிற ஒளி உடல

இன்று விநாயகர் சதுர்த்தி- விரதம் இருப்பது எப்படி?

Image
உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்த மகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்கள் மற்றும் ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமாக, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம். அதன் அடிப்படையிலேயே இவரை முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றோம். மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், அதை எழுதுவதற்கு தகுந்த நபராக விநாயகரை தேர்வு செய்து, மகாபாரதம் எழுதித்தர வேண்டினார். அதற்கு விநாயகர், ‘நீ விரும்பிய வண்ணம் நாம் எழுதுவோம். ஆனால் நீ நிறுத்தாமல் சொல்லவேண்டும்’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார். 8,800 சுலோகங்கள் கொண்ட மகாபாரதம் விநாயகப்பெருமானால் எழுதப்பட்டது. விநாயகர் வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று கூறப்பட்டாலும், அவர் நான்கு யுகங்களின் அதிபதியாக திகழ்கிறார் என்கிறது ஒரு புராண குறிப்பு. கிருதாயுகத்தில் காஷ்யபர்-அருந்ததி தம்பதிகளின் மகனாகவும் (மகோற்கடர்), திரேதாயுகத்தில் அம்பிகையின் பிள்ளையாக பிறந்து மயிலோ

முதல் வணக்கம் முருகனுக்கே

Image
பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது. திருவண்ணாமலை தலத்தை பொறுத்தவரை அனைத்து கடவுள்களின் அருள்கடாட்சமும் நிரம்பி இருக்கும் தலம் ஆகும். இதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் எந்த சிவாலயத்துக்கும் இல்லாத சிறப்பு திருவண்ணாமலை ஆலயத்துக்கு தனித்துவமாக உள்ளது.அதாவது திருவண்ணாமலையில்தான் சிவபெருமான் தன்னை அக்னி வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டார். பிறகு அந்த அக்னி வடிவமே மலையாக மாறி சிவனாக வழிபடப்படுகிறது. அந்த சிவ மலையை உமையாள் பார்வதிதேவி தவம் இருந்து கிரிவலம் வந்து  ஈசனிடம் பாதி உடலை பெற்றாள். அதுபோல விநாயக பெருமான் இந்த தலத்த