வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்சனைக்கான அறிகுறிகள் இவை!
மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்). மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக செயல்படும், இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அப்படி என்ன தான் அதீதமான வேலைகளைச் செய்கிறது இந்தக் கல்லீரல் என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு பித்த நீர் சுரக்க வேண்டும். அந்த பித்த நீரை தயாரிப்பது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள 80 சதவிகித கொழுப்பை, பித்த நீராக மாற்றி, பித்தப்பையில் சேமித்து வைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை, நம் உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தருகிறது. உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் பல பாகங்களையும் சென்றடைகிறது. பிளாஸ்மாவை ரத்தமாக மாற்றும் வேலையைச் செய்கிறது. ஆற்றலை சேமித்து வைக்கும் கிளைக்கோஜன் என்னும் வேதிப்பொருளை இந்த உறுப்புதான் சேமித்து வைக்கிறது. வேண்டாத நுண்ணுயிர்களை அழித்து, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைச் சீர் செய்து, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்களை சேமித்து வைக்க