Posts

Showing posts from March, 2021

உங்கள் காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கின் அர்த்தம் என்ன தெரியுமா..?

Image
நமது காரில் இருக்கும் ஒவ்வொரு எச்சரிக்கை விளக்கும் எதற்காக எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இதை படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள கால கட்டத்தில் நவீன யுக கார்கள் பல்வேறு வசதிகளுடன் வருவதால் உரிமையாளர்கள் கார்களில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ள வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு எச்சரிக்கை விளக்குகளை வழங்குகின்றன ஆனால் அந்த எச்சரிக்கை விளக்குகளுக்கு என்ன அர்த்தம் என்பது புரியாமல் சிலர் குழம்பி கொள்கின்றனர். எனவே பெரும்பாலான கார்களில் காணப்படும் பொதுவான எச்சரிக்கை விளக்குகளை பற்றி இந்த செய்தியில் வழங்கபட்டுள்ளது. டோர் ஓபன் வார்னிங் லைட் உங்கள் காரில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கதவுகள் சரியாக மூடப்படாத பட்சத்தில் இந்த எச்சரிக்கை விளக்கு ஒளிறும் மேலும் ஒரு சில கார்களில் எந்த கதவை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்ற சரியான தகவலும் காட்டப்படும். வாஷர் ஃப்ளூயிட் ரிமைண்டர் இந்த விளக்குகள் வைப்பர் திரவு அளவு மிகவும் குறைவான நிலைக்கு செல்லும்போது எரியும், ஆனால் பிரீமியம் கார்களில் மட்டுமே இந்த எச்சரிக்கை விளக்கு பொதுவாக காணப்படும்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுகிறீர்களா..? சில பாட்டி வைத்திய குறிப்புகள் இதோ..!

Image
கோடைகாலம் நெருங்கி வருகிறது. இந்த காலக்கட்டத்தில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை உடல் உஷ்ணம். இதன் மூலம் நிறைய நோய்களும் உருவாகிறது. எனவே ஆரம்ப கட்டத்திலேயே உடல் உஷ்ணத்தை குறைப்பது அவசியமாகிறது. அதற்கான பாட்டி வைத்திய முறையில் சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதிகாலை எழுந்ததும் வெறும் வயிற்றில் வெந்தயம் ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு தண்ணீரை குடித்து வர உடல் உஷ்ணம் குறையும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும். கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி தேன் கலந்து குடித்து வர அதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைக்கும். தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உட

கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லவைக்கும் ஜூஸ்கள்!

Image
மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான வயிற்றுப் பிரச்சனைகளுள் ஒன்றாகும். இது ஒழுங்கற்ற குடலியக்கத்தால், வயிற்றில் செரிமான பிரச்சனைகளை தூண்டுவதால் ஏற்படுகிறது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், நீங்கள் கழிக்கும் மலம் இறுக்கமடைந்து கடப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மலச்சிக்கலின் மிகவும் பொதுவான அறிகுறிகள் குறைவான குடல் அசைவுகள், மலத்தைக் கடப்பதில் சிக்கல், வயிற்று வீக்கம் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவையாகும். இத்தகைய மலச்சிக்கலை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் திறம்பட தடுக்கலாம். அதுவும் கோடைக்காலத்தில் ஏராளமானோர் மலச்சிக்கலை அனுபவிப்பார்கள். மலச்சிக்கல் ஏற்பட்டால், அது மிகவும் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும். இறுக்கமடைந்த மலத்தை இளகச் செய்வதற்கு பானங்கள் பெரிதும் உதவி புரியும். கீழே குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பானங்களை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம். குடலியக்கத்திற்கான ஆரோக்கிய பானங்கள் நீங்கள் சந்தி

உடலில் ஹீமோகுளோபின் அளவு மிக குறைவாக இருந்தால் வெளிப்படும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் !

Image
நமது உடலுக்கு அனைத்துவிதமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கிடைக்க வேண்டும். இவற்றில் ஒரு ஊட்டச்சத்து உணவின் மூலம் எளிதில் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான இந்தியர்களிடம் இந்த ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. அது தான் இரும்புச்சத்து. உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாத போது இரும்புச்சத்து குறைபாடு/இரத்த சோகை ஏற்படுகிறது. நமது உடலுக்கு ஏன் இரும்புச்சத்து தேவைப்படுகிறது? இந்த இரும்புச்சத்து குறைவாக இருந்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? எந்த உணவுகளில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடையை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல உதவும் ஹீமோகுளோபின் என்ற புரதத்தை உருவாக்குவதற்கு இரும்புச்சத்து அவசியமாகும். இரத்த சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளன. அவை நம் நுரையீரலில் இருந்து பெறப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. இந்த இரத்த சிவப்பணுக்கள் தான் இந்த ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் இரத்தத

வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்த பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்கள் ! செம குத்து ! அசத்தல் வீடியோ !

Image
தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கமிங் பாடலுக்கு இளம் பெண்கள் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது . அந்த வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது . எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள். உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், https ://youtu.be/sEsNBScf11c திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும். மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்

பாத்ரூம் கதவுக்கு பின்னால் பெண் கண்ட காட்சி..என்ன இருந்தது தெரியுமா..? வைரல் வீடியோ

Image
பகுதி  1 நியூயார்க் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது குளியலறை கண்ணாடியின் பின்னால் ஒரு முழு அப்பார்ட்மெண்டை கண்டுபிடித்தார். இப்போது வைரலாகி வரும் தொடர் டிக்டாக் வீடியோக்களில், சமந்தா ஹார்ட்சோ என்ற பெண் தனது கண்டுபிடிப்பை ஆவணப்படுத்தினார். தனது குளியலறையில் ஜன்னல் இல்லாத நிலையில், எப்படி குளிர்ந்த காற்று வருகிறது என்பதை கண்டறிய முடிவு செய்தது குறித்து சமந்தா தனது முதல் வீடியோவில் விளக்கியுள்ளார். குளியலறையின் சின்க்கின் மீதிருந்த ஒரு கண்ணாடியின் பின்னால் இருந்து தென்றல் வருவதை அந்த பெண் கண்டுபிடித்ததை வீடியோ காட்டுகிறது. கண்ணாடியை அதன் இடத்திலிருந்து அகற்றியபோது, ​​வெளிச்சம் இல்லாத ஒரு அறையில் ஒரு பெரிய துளை திறக்கப்படுவதை அந்த பெண் வெளிப்படுத்தினார். இதுகுறித்து மேலும் அறிய முயற்சித்த ​​அந்த பெண் முகமூடி, கையுறைகள் அணிந்து அறைக்குள் நுழைகிறார், பாதுகாப்புக்காக ஒரு சுத்தியலைப் பிடித்துக் கொண்டார். பகுதி 2 ஆனால் அது ஒரு அறை மட்டுமல்ல, அவளுடைய குளியலறை கண்ணாடியின் பின்னால் ஒரு முழு அபார்ட்மெண்ட் என்று அவள் விரைவில் கண்டுபிடிப்பாள். "ஆஹா, இது முழுக்க முழுக்க அபார்ட்மென்ட

ஆரோக்கியம் தரும் அணிகலன்கள் தமிழர் பாரம்பரியம்

Image
நகைகள், தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகிற்கும், ஆடம்பரத்திற்கும் மட்டுமே நகைகள் அணிவதில்லை. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை என்பதே உண்மை. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலின்  ஒவ்வொரு  உறுப்புகளையும் பராமரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கொலுசு அணிதல் : பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மெட்டி அணிதல் : மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏனென்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில்

விநாயகர் ஸ்லோகம்

Image
மந்திரங்கள்   ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணாய நம ஓம் லம்போதராய நம ஓம் நாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்த்ராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கர்ணாய நம ஓம் ஹேரம்பாய நம ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு சங்கத் தமிழ் மூன்றுந் தாஅல்லல்போம் வல்லினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம் தப்பாமற் சார்வார் தமக்குகணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கருமம் இல்லையே.திருவாக்கும் ச