Posts

Showing posts from February, 2021

காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!

Image
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. காயத்ரி மந்திரம் தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பிரச்சோதயாத்

தமிழக அரசின் புதிய முயற்சி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய whatsapp சேனல் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Image
தமிழக அரசின் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) ஆனது பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் சேனல் ஒன்றை 26 பிப்ரவரி 2020 வெள்ளிக்கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர, GCC மற்றும் பொதுமக்களிடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான வசதியாகவும் இந்த வாட்ஸ்அப் சேனல் பயன்படுத்தப்படும். வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் முறையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் நகராட்சி அமைப்பு GCC தான் என்றும் அரசு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாட்ஸ்அப் அடிப்படையிலான தானியங்கி குறைகளை பதிவு செய்யும் முறை குடிமக்களுக்கு பதிவு செய்யப்பட்ட குறைகளின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க உதவும். முக்கியமான அறிவிப்புகள், புதுப்பிப்புகள், குறிப்பிட்ட கால நிகழ்வுகள், ஹெல்ப்லைன்கள் போன்றவற்றைப் பற்றிய தகவல்களுக்கும் இது வழி வகுக்கும். சரியான நேரத்தில், பயனாளிகளுக்கான தடுப்பூசி வெளியீட்டு முறைகள் குறித்த முக்கியமான தகவல்களும் இந்த சேனல் வழியாக வழங்கப்படும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல், சரியான நேரத்தில் வரி செலுத்துதல் குறித்த நினைவூட்டல்கள் மற்றும் குடி

நந்தியின் காதுகளில் வேண்டலாமா ?

Image
நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை சிவனிடமே நேரிடையாகச் சொல்வதாகப் பாவித்து நந்தியின் காதில் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வது பல ஆலயங்களிலும் காணப்படுகிறது. இதை சாஸ்திரம் தடுக்கவில்லை. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம்,  ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்து கொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.

பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
நம் அன்றாட வாழ்வில் தினமும் காலையில் பால் அல்லது காபி போன்றவற்றை குடிப்பது வழக்கம். பாலில் அதிக அளவிலான கால்சியம் நிறைந்துள்ளது.  அதே  போல துளசி செரிமான பிரச்சனை மற்றும் சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். பாலுடன் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம். பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் காய்ச்சலை வேகமாக குணமாக்க முடியும். மேலும் இந்த கலவை இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இதமான சூடுள்ள பாலில் துளசி சேர்த்து குடித்தால் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுத்தி பதட்டம், மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். இவை இரண்டும் சேர்ந்த கலவை சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஏற்கனவே இந்த பிரச்சனை இருந்தால் அதை குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை சரி செய்கிறது. மேலும் புற்று நோய் செல்கல் உருவாகமல் தடுக்கிறது. தலைவலிக்கு என்ன தான் மருந்து எடுத்தும் பயனில்லையா? பாலுடன் துளசி சேர்த்து குடித்தால் தலைவலி குறைவதை கண்

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

Image
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி. கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !! நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன். கணபதி மந்திரம் … ப

இறந்த பிறகும் கூட மனிதர்களுக்கு நகங்களும் முடியும் வளரும் என்பது உண்மையா..? தெரிஞ்சுக்க இதைப் படிங்க

Image
இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும் முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இதுகுறித்து பல கதைகள் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில், மனித நகங்களும் முடியும் இறந்த பிறகும் தொடர்ந்து வளர்கிறதா என்பது குறித்து மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சி நடந்துள்ளது என்பதே உண்மை.. உண்மையில், ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலின் வெவ்வேறு பாகங்களின் செல்கள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​மூளைக்கு ஆக்ஸிஜன் வழங்குவது நிறுத்தப்படும். மூளை செல்கள் செயல்பாட்டில் இல்லை. எனவே, இதயம் துடிப்பதை நிறுத்திய ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள், மூளை செல்கள் அனைத்தும் இறக்கின்றன. ஒரு நபரின் உறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றால், அவர் இறந்த அரை மணி நேரத்திற்குள் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தை அகற்ற வேண்டியது அவசியம். இவை அடுத்த ஆறு மணி நேரத்தில் நன்கொடையாளரின் உடலில் பயன்படுத்தப்பட வேண்டும். இருப்பினும், இறந்த பிறகும் தோல் செல்கள் உயிரோடு இருக்கும். ஒரு நபர் இறந்த 12 மணி நேரம் வரை தோல் மா

'ஆ.. செம காரம்"னு = ஒதுக்கிறாதீங்க..! சைனஸ் வயிற்று பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பலவற்றிற்கு தீர்வு இருக்கு..!!

Image
பொதுவாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாயை அனைவரும் பார்த்திருப்போம், சமையலில் சேர்த்திருப்போம். ஆனால் சாப்பிடும் போது அதனை ஒதுக்கி விட்டு தான் சாப்பிடுவோம். ஆனால் அதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் இனி நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். பொதுவாக பச்சை மிளகாயை நன்கு மென்று சாப்பிட்டால் வாயில் உமிழ் நீர் அதிகம் சுரக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த பச்சை மிளகாய் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். மூக்கின் சளிச்சவ்வை தூண்டுவதால் நீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும். இதனால் சைனஸ் பிரச்னை, தலையில் நீர் கோர்த்துக்கொண்டிருந்தாலும் மூக்கின் வழியாக வெளியேற்றிவிடும். பச்சை மிளகாய் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. அதோடு உடலின் புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை பச்சை மிளகாய்க்கு உண்டு. இரும்பு சத்தை இயற்கையாகவே அதிகம் கொண்டிருக்கும் பச்சை மிளகாய் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வத

கோபத்தைக் குறைக்கும் மஹேஸ்வரி காயத்ரி மந்திரம்

Image
சப்த கன்னியரில் ஒருவரும் சிவபெருமானின் அம்சமாகவும் தோன்றியவர் ஶ்ரீமஹேஸ்வரி. இவர் அம்பிகையின் தோளிலிருந்து உருவானவர். இவரை வழிபட்டு வந்தால் நம்முடைய கோபத்தைக் குறைத்து, மன அமைதியைத் தருவார். மேலும் நம்முடைய உடலில் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை மஹேஸ்வரிக்கு உண்டு. வடகிழக்கு எனப்படும் ஈசானியத்தை இவர்தான் நிர்வகிக்கின்றார். இவரது வாகனம் ரிஷபம். சிவ பெருமான் நிகழ்த்தும் அனைத்து சம்ஹாரங்களும் மஹேஸ்வரியின் சக்தியால்தான் செய்கிறார். மந்திரம்: ஓம்  ச்வேத  வர்ணாயை  வித்மஹே! சூல  ஹஸ்தாயை  தீமஹி! தன்னோ  மஹேஸ்வரி  ப்ரசோதயாத். இந்த காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து 108 முறை சொல்லி வந்தால், மனதில் உள்ள கோபம் மறைந்து அமைதி உருவாகும்.

மொபைல் போனை 100% சார்ஜ் செய்யக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?

Image
மொபைல் போனை 100% சார்ஜ் செய்வது ஆபத்தானதாக கருதப்படுகிறது.. இதுகுறித்து பார்க்கலாம்.. நமது மொபைல் போன் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்தால், எந்தப் பயனும் இல்லை. ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும்போது, ​​தொலைபேசி விரைவாக சேதமடையும். உங்கள் தொலைபேசியை 40 முதல் 80% வரை சார்ஜ் செய்தால், உங்கள் பேட்டரி அதிகமாக இயங்கும். இது தவிர, ஒரே இரவில் மொபைலை சார்ஜ் செய்வதும் தவறு. இதைச் செய்வதன் மூலம், தொலைபேசி சூடாகிறது. உண்மையில், லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பத்தால் தொலைபேசியை சேதப்படுத்தும். தொலைபேசி பேட்டரியை மீண்டும் மீண்டும் அகற்றக்கூடாது. தொலைபேசியின் பேட்டரியை நீங்கள் மீண்டும் மீண்டும் 0% ஆக மாற்றினால், அவை நிலையற்றதாகிவிடும். உங்கள் பேட்டரி ஒரு நிலையான சார்ஜிங் சுழற்சியைக் கொண்டுள்ளது, சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட் போனை சூடான இடத்தில் வைக்க வேண்டாம். சார்ஜ் செய்தபின் தொலைபேசியை சார்ஜ் செய்வதிலிருந்து உடனடியாக அகற்றவும். நீண்ட நேரம் போனை சார்ஜரில் பொருத்தியிருந்தால் பேட்டரி மோசமடைகிறது. ஒரே இரவில் தொலைபேசியை படுக்கையில் விட்டுவிட்டு சார்ஜ் செய்

BREAKING: பேருந்துகளில் இலவசம். தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Image
சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயணத்துக்கான டோக்கனை முதியோர் பெறலாம். அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு 10 வீதம் ஆறு மாதங்களுக்கான டோக்கன் வழங்கப்படும். மேலும் mtcbus.tn.gov

நவக்கிரகங்களால் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம் எப்படி?முழு விவரம் உள்ளே

Image
சூரியன் :  பித்ருக்களுக்கு நாம் செய்யும் திதியின் பலனை நம்மிடமிருந்து பெற்று பித்ரு தேவதைகளின் வழியாக இறந்து போன நமது மூதாதையர்களிடம் சேர்ப்பவர் சூரியன். தினந்தோறும் அதிகாலையில் நீராடியவுடன் கிழக்கு திசையை நோக்கி சூரிய பகவானை வணங்குவதும், ஏதேனும் புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு சூரியனை நோக்கி இரண்டு கைகளிலும் நீர் விடுவது சூரியனுக்கு மிகவும் உகந்தது.  சந்திரன்:  சந்திரனின் பலம் அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டு திறன் அதிகரிக்கிறது. வளர்பிறையில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. தேய்பிறையில் அறிவாற்றல் குறைகிறது. அதனால்தான் நல்ல காரியங்களை வளர்பிறையில் துவங்குகிறார்கள். திங்கட்கிழமையில் விரதமிருந்து ஏதாவது கோவிலுக்குச் சென்று மாலையில் தீபம் ஏற்றி வழிபடுவது சந்திர தோஷத்தை நீக்கும் பரிகாரம் ஆகும்.  செவ்வாய்:  பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக் க

உங்கள் ராசிப்படி எந்த நிற ராசிக்கல் அணிய வேண்டும் 'இதன் பயன்கள் என்ன முழு தகவல் உள்ளே

Image
ஜோதிட ரீதியாக நாம் பார்த்தல் பலன்கள் பல முறையில் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்றான 'ராசிக்கல்' எதற்காக பயன்படுத்த வேண்டும்? எந்த ராசிக்காரர்கள் எந்த நிற கல் பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். இதை முழுமையாக நாம் அறிந்து கொண்டாலே போதும். ராசிக்கல் என்ற பெயரில் நம்மை ஏமாற்றுபவர்களிடம் இருந்து நாம் தப்பித்து விடலாம். மேலும் வீண் பணச்செலவு மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றில் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம். நோய்: நமக்கு உடல் உறுப்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான கிரகத்தின் தன்மையை அறிந்து அந்த கற்களை மோதிரமாகவோ அல்லது வேறு எதுவும் நகைகளாகவோ நாம் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அணிந்தால் நம் உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடலாம். கண் திருஷ்டி: கல்லடியை விட கண்ணடி தான் பெரியது. அதனால் 'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்கின்றனர். இவ்வாறு கண்ணடி இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையாது. அதனால் கண் திருஷ்டியை போக்க நம் ராசிக்கு ஏற்ற உரிய கல் என்ன என்பதை அறிந்து அதன்

இந்திய வாகனங்களில் உள்ள வெவ்வேறு நிற நம்பர் பிளேட்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

Image
உங்கள் அன்றாட வாழ்க்கையில் கார்கள் அல்லது சாலையில் உள்ள பிற வாகனங்களில் வெள்ளை, மஞ்சள், கருப்பு மற்றும் சிவப்பு போன்ற நிறங்களில் நம்ப்ர் பிளேட்டுகளை அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அந்த நம்பர் பிளேட்டுகளைப் பார்ப்பதன் மூலம் எந்த வண்ணத் தட்டு எந்த அதிகாரி / அதிகாரத்திற்கு சொந்தமானது என்பது தெரியுமா..? சிவப்பு வண்ண நம்பர் பிளேட்: இந்திய ஜனாதிபதி மற்றும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களுக்கு இந்த வகை நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய வாகனங்களில், உரிம எண்ணிற்கு பதில், இந்தியாவின் சின்னம்" இருக்கும்.. இந்தியாவின் பிரதமரின் காரின் நம்பர் பிளேட் பொதுமக்களின் கார் போல வெள்ளை நிறத்தில் உள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம் நீல நிற நம்பர் பிளேட்: வெளிநாட்டு பிரதிநிதிகள் / தூதர்கள் பயன்படுத்தும் ஒரு வாகனத்திற்கு நீல நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது. இதில் எண் வெள்ளை மை மூலம் எழுதப்பட்டுள்ளது. இது இந்திய மாநிலத்தின் குறியீட்டிற்கு பதிலாக தூதர்கள் சொந்தமான நாட்டின் குறியீட்டைப் பயன்படுத்துகிறது. இந்த வகையான தட்டுகளை வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாட்டு இராஜதந

டாக்டர்கள் ஏன் வெள்ளை நிறகோட் அணிகின்றனர்தெரியுமா ?பலருக்கும்தெரியாத தகவல்கள்

Image
மருத்துவமனையில் பல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வெள்ளை கோட் அணிந்திருப்பதை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.. எந்தவொரு தொழிலிலும் பணிபுரியும் நபர் போன்றவர்கள் தங்கள் சொந்த அடையாளத்தைக் கொண்டுள்ளனர். அந்த வகையில் மருத்துவர்கள் பெரும்பாலும் வெள்ளை கோட் மற்றும் வக்கீல்கள் கருப்பு கோட் அணிகின்றனர். ஆனால் மருத்துவர்கள் ஏன் வெள்ளை கோட் அணிய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில், ஆய்வகங்களில் பணிபுரிந்த விஞ்ஞானிகள் மட்டுமே லேப் கோட் அணிந்து வந்தனர்.. அவை வெளிர் இளஞ்சிவப்பு (Pink) அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தன. அந்த நேரத்தில் ஆய்வக விஞ்ஞானிகள் மருந்துகளின் சிகிச்சையானது பயனற்றது என்பதைக் காட்டி மருத்துவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததால், மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் அந்த நேரத்தில் விஞ்ஞானிகள் பொதுமக்களாலும், ஆட்சியாளர்களாலும் பாராட்டப்பட்டனர். மருத்துவர்களை யாரும் அதிகம் நம்பவில்லை. எனவே, மருத்துவத் தொழில் விஞ்ஞானத்திற்கு திரும்பியது. இதனால், மருத்துவர்கள் ஒரு விஞ்ஞானியாக மாற முடிவு செய்தனர். எல்லாவற்ற

நாய்களுக்காக பொது விடுமுறை அறிவித்துள்ள நாடு.. என்ன காரணம்தெரியுமா?

Image
மத்திய ஆசிய நாடான துர்க்மெனிஸ்தான் ஜனாதிபதி குர்பங்குலி பெர்டிமுகமடோவின் உள்ளூர் நாய் இன அல்பாயை கௌரவிக்கும் வகையில் தேசிய விடுமுறை தினத்தை அறிவித்துள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி ஞாயிற்றுக்கிழமை இருக்கும். அல்பாய் இனங்கள் இங்கு மிகவும் பிரபலமாக உள்ளன. இந்த இனத்தின் நாய்கள் இங்கே மட்டுமே காணப்படுகின்றன. அதனால்தான் இது துர்க்மெனிஸ்தானின் தேசிய அடையாளத்துடன் இணைந்து காணப்படுகிறது. இந்த நாய்கள் விசுவாசத்திற்கு பிரபலமானவை. அதனால்தான் அவர் உள்ளூர் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது. இந்த இனம் சாதனை மற்றும் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஜனாதிபதி குர்பங்கலி இந்த நாய் இனத்திற்காக பல புத்தகங்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். இந்த அல்பானி நாய் துர்க்மெனிஸ்தானுக்கு ஒரு தேசிய வீராங்கனை போன்றது. மேலும் நாயின் தங்க சிலை துர்க்மெனிஸ்தானின் தலைநகரில் ஒரு சிறப்பு சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, 50 அடி உயரமுள்ள இந்த சிலை வெண்கலத்தால் ஆனது மற்றும் 24 காரட் தங்கத்தால் பதிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் நாட்டை ஆண்ட குர்பங்குலி பெர்

"தினமும் இரண்டு சொட்டு இதை மூக்கில் விட்டால் போதும்".. குறட்டை போயே போச்சு..!!

Image
உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும் .  அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை விடுவதால் அவர்களுக்கு பிரச்சினை இல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இப்பொழுது குறட்டை சத்தத்தை குறைத்து குறட்டையில் இருந்து விடுபட இந்த இயற்கை முறையையே பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1. தும்பை பூ 2. நல்லெண்ணெய் 100 மில்லி செய்முறை: முதலில் தும்பை பூவை 2 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். பின் வானலியில் 100 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் தும்பை பூவை போடவும். ஈரப்பதம் போகும் வரை நன்கு தைல பதத்திற்கு காய்ச்சவும். பின் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இதை இரவில் தினமும் மூக்கில் 2 சொட்டு இட்டு வந்தால் மூன்று