புயல் கரையை கடக்கும் நிகழ்வை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் இதனை செய்யுங்கள்...


வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

வங்க கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.  இந்த புயல் நாளை மாலை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கடந்து செல்லும்போது கடலோர மாவட்டங்களில், 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.  இதேபோன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

நிவர் புயல் எதிரொலியாக இன்று 3 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு, மோட்டார் இயந்திரங்கள், கடலோர காவல் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தமிழக காவல் துறையினரும் மீட்பு பணியில் களமிறங்க தயார் நிலையில் இருக்கின்றனர்.

நிவர் புயலை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.  சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.  சி.ஏ. உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  புயல் கடந்து செல்லும் பகுதிகளின் வழியே செல்லும் ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், புயல் கரையை கடப்பதை பார்க்க விரும்புபவர்களுக்காக இணையதள முகவரி ஒன்று வெளியாகியுள்ளது. windytvஎன்ற இந்த லிங்க்ஐ கிளிக் செய்து புயலின் தற்போதைய நிலையை காணலாம். இனி புயல் கரையை கடப்பதையும் இந்த லிங்க் மூலமாகவே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில், ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை புயல் கடந்து செல்லும் மற்றும் மையம் கொண்டிருக்கும் பகுதி காட்டப்பட்டிருக்கும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்