அறிந்து கொள்வோம்
கண் ஒரு அதிசயம்
அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவியில்தான் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறங்களை பிரித்து அறிய முடியும்.
இது ஒரு நுண்கருவி.
விஞ்ஞானத்தின் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை
நிறங்களை
உருவாக்கக் கூடும்.
இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும்.
அந்த கருவி வேறு எதுவும் இல்லை, நமது கண்கள்தான்.
இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை.
இதன் நுட்பங்களை புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுணர்வு தேவையில்லை.
நமது கண்ணின் கருவிழி வட்டமான விழியின் மையப்பகுதி தான் ஓரப்பகுதியை விட பொருட்களை தெளிவாக பார்த்து அறிகிறது.
நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே, அதிக ஒளியை தெரிந்து கொள்கிறது.
ஓரப் பகுதியால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
இதுவே இரவு நேரங்கள் என்றால், கருவிழியின் மையம் குறைந்த ஒளியை காணுகிறது.
மாறாக ஓரப் பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகிறது.
இதற்கு காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வு செல்களே ஆகும்.
இந்த அமைப்பின் அடிப்படையில், அவற்றுக்கு கழி செல்கள், கூம்பு செல்கள் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.
7 மில்லியன் கூம்பு செல்கள் கருவிழியின் மையப் பகுதியில் இருப்பதாகவும், 130 மில்லியன் கழிசெல்கள் கருவிழி ஓரத்தில் அமிழ்ந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த செல்களுக்கான ஊட்டச் சத்துக்கள் வைட்டமின் ‘ஏ‘ மூலமே கிடைக்கிறது.
இதனால் தான் வைட்டமின் ‘ஏ‘ குறைவு ஏற்பட்டால் கண் நோய்கள் தோன்றுகின்றன.
நமது கண்கள் ஒரு வினாடியில் 40-ல் ஒரு பங்கு நேரத்தைத்தான் ஒரு முறை இமைப்பதற்கு எடுத்துக் கொள்கிறது.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 250 மில்லியன் தடவை கண்களை இமைக்கின்றான்.
கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீருக்கு ‘பாக்டீரியா‘ போன்ற நச்சுக்களை கொல்லும் கிருமி நாசினி குணம் உண்டு.
ஒரு மனிதனின் கண்ணீர் சுரபிகளை அகற்றிவிட்டால் நாளடைவில் கண்கள் வறண்டு, இறுதியில் குருடாகிவிடும்.
Comments
Post a Comment