Posts

கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது ஏன் தெரியுமா?

Image
மனிதன் தன் வாழ்நாளில் எப்படியாவது படிப்படியாக முன்னேறி இறைவனை சென்றடைய வேண்டும் என வாழ்ந்து வருகிறான், இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவமுமாகும். இந்த தத்துவத்தை விளக்கும் வகையில் தான் நவராத்திரி கொலு வைப்பதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபட்டு வருகிறோம். முதலாம் படி ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள். இரண்டாம் படி ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படி மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மை கள். நாலாம்படி நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள். ஐந்தாம்படி ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள ஆறாம்படி ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். ஏழாம்படி மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள். எட்டாம்படி தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள். ஒன்பதாம்படி பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை

சிவன் ஆலயங்களில் நந்தி சிலை வைக்கப்பட்டிருப்பது ஏன்? 

Image
சிவன் ஆலயங்களில் வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பலருக்கு தெரியாது. பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான

குத்து விளக்கு என்றால் என்ன?… அர்த்தம் தெரியுமா உங்களுக்கு…

Image
குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிதான் குண்டலினியோகம். நமக்குள்ளாகவே இருப்பது உயிர்ச்சக்தி, ஆன்மா என்ற உயிர்ச் சக்தியை அழுத்தம் கொடுத்து உணர வைப்பதைத் தான் குத்தி விளக்குவது என்று சித்தர்கள் சொன்னார்கள். அது இப்பொழுது குத்து விளக்கு என்றாகி விட்டது. குத்தி விளக்கு அப்படி விளக்குகிறபோது பஞ்ச இந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் நன்றாக விளங்கி விடும் என்பதைக் காட்டுவதாகத் தான் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் வைத்திருக்கிறார்கள். குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. அந்த உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக, சிவமாக இருக்கிறது என்று விளக்கிக் காட்டுவதுதான் அகத்தவப் பயிற்சி.

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா??

Image
இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் நிரந்தரமாக தூங்கிவிட வேண்டியது தான். “சரி, அப்போ நாம தூங்கும் போது நம்ம மூளை என்ன தான் செய்யுது…?” என்று கேட்கிறீர்களா. நமது மூளை தான் மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் இயக்கும் தலைவன். இவருக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. அது என்னென்ன என்று இனிப் பார்க்கலாம். 15 நிமிடங்கள் தூங்கும் போது நீங்கள் காலை அல்லது மாலை வேளையில் குட்டி தூக்கம் போடும் போது, மூளை தனது எனர்ஜியை அதிகரித்துக் கொள்ளுமாம். இதனால் நிறைய கற்கவும், நினைவுகளை சேமிக்கவும் செய்கிறது நமது மூளை. 30 நிமிடங்கள் தூங்கும் போது நீங்கள் 30 நிமிடங்கள் தூங்கும் போது உங்கள் மூளை, கற்பனை திறன் மேம்பாட்டு வேலைகளில் ஈடுபடுகிறதாம். மற்றும் அதே வேளையில் நினைவுத்திறனை பெருக்கிக் கொள்ளவும் செய்கிறது 45 நிமிடங்கள் தூங்கும் போது அரைமணி நேரத்திற்கு மேல் நீங்கள் தூங்கும் போது அதிக விஷயங்களை நினைவுக் கொள்ள உதவுகிறது மூளை. இந்த நேரத்தில் தான், எது வேண்டும், வேண்டாம் என முடிவு செய்து

உங்கள் ‘பிறந்த தேதி’க்கு இதுதான் சரியான ‘தொழில்’..!

Image
நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன். இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் தேர்ந்த நபர்கள். திருபாய் அம்பானி, ரத்தன் டாட்டா, முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் ஆகியோர்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு பிசினஸ் தான் சரியான தொழில். இவர்கள் எந்த பிசினஸை செய்தாலும் வெற்றி பெறுவார்கள். 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் சந்திரன். படைப்புகளிலும், புதியத

தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன?

Image
பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்? தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் பார்ப்போம். கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான். தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமு

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

Image
சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். "ஏக தந்தர்" என்பதைத் தமிழில் "ஒற்றைக் கொம்பன்" என்பார்கள். "ஓம்" என்னும் ஓம்கார எழுத்தின் தனித் தமிழ் வடிவம், ஏறத்தாள யானை முகத்தின் வடிவம் போலக் காணப்படும். ஓம்கார ஒலியைக் காதால் கேட்கலாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்கு புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இவ்விரண்டும் சேர்ந்ததே,"உ" என்கிற பிள்ளையார் சுழி ஆகும். நாதமும் விந்தும் ஒன்றுக் கொன்று துணை (சான்று) நிற்க வேண்டும். இதில்,சான்று என்னும் பதத்தை "கரி" என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய "சுழி" வடிவமும், சிவ சக்தி சான்றாகிய "கரி" வடிவமும் கொண்டு நிற்கும் போது, கணபதியின் வடிவமாகிய ஓம்காரம் தோன்றும். எனவே தான், ஏதேனும் எழுதத் துவங்கும் முன்னர், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத