Posts

Showing posts from November, 2017

பிரதோஷம் நடத்துவது ஏன் ?

Image
அமிர்தம் பெறும் நோக்கத்துடன் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி, துன்பம் தாளாமல் நஞ்சைக் கக்கியது. இதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர். அதனை ஒரு திவலையாக்கி சிவன் குடித்தார். கழுத்து நீலமானதால் "நீலகண்டன்' என பெயர் பெற்றார். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது, துவாதசி திதிநாளில் அமிர்தம் வெளிவந்தது. தங்களுக்கு உதவிய சிவனுக்கு நன்றி செலுத்த மறந்தனர். திரயோதசி திதியன்று தங்களின் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னித்தருள வேண்டினர். இறைவனும் மன்னித்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு நடுவில் நின்று நடனமாடினார். அந்த புனித வேளையே "பிரதோஷம்'. அப்போது சிவனைத் தரிசித்த தேவர்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறப் பெற்றனர்.  முக்திவரத்தையும் இறைவன் அவர்களுக்கு வழங்கினார். பிரதோஷத்தன்று சிவபார்வதி இருவரும் ஆனந்ததாண்டவம் ஆடும்போது, எல்லா தேவதைகளும் சிவனை தரிசிக்க ஒன்று சேர்வதாக ஐதீகம். தேவதைகள் புல்லாங்குழல் வாசித்தும், மத்தளம் முழங்கியும் அவரை வழிபடுவர். தேவலோக

சிவனின் உருவ தத்துவ விளக்கம் ?

Image
நடராஜர் வடிவம் : நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்கிரகம் செய்வதுமாகும் தட்சினாமூர்த்தி திருக்கோலம் : சிவனின் தட்சிணாமூரத்திக் கோலம் என்பது பிரம்ம நிலையை துலங்க வைப்பது அங்கே செயல் இல்லை. ஒரே மௌனம்தான்.வெளியில் சகல காரியங்களும் செய்யும் ஈசுவரன் எப்போதும் உள்ளே அடங்கி பிரமமாக இருக்கின்றார். பேசாமல் புரிவைக்கும் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அவருக்கு முனனால் கீழே அமர்ந்துள்ள முனிவர்கள்  சனதர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்  நால்வரும் மௌன உபதேசம் பெறுகின்றார்கள் என்பதாகும். மானின் தத்துவம் : சிவபெருமானின் கையில் உள்ள மான் என்ன தத்துவத்தை நமக்கு உணர்த்துவது என்றால். மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான்தாம் வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின்  கையில் உள்ள மான் உணர்த்துகின்றது. பாம்பு புலித்தோல் தத்துவங்கள் : சிவனின் கழுத்தை சுற்றியுள்ள பாம்பு. நம்மை ஒவ்வொரு நிமிடமும் பாவப் படுகுழியில்தள்ள சந்தற்ப

நீதிக்கு தலை வணங்கு

Image
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் புறப்பட்டார். கீரந்தன் என்னும் அந்தணர் வீட்டில் பேசும் குரல் கேட்டது. அவர் தன் மனைவியிடம், '' நாளை காசி யாத்திரை செல்கிறேன். திரும்பி வர நாளாகும். நம் மன்னரின் நல்லாட்சியில் வாழும் நமக்கு குறையேதுமில்லை'' என்றார். இதை கேட்ட மன்னர் அந்தணர் வீட்டை கண்காணித்து வந்தார். ஒரு நாள் நகர்வலம் வந்தபோது அந்த வீட்டில் ஏதோ ஆண்குரல் ஒலிப்பது கேட்டு கதவை தட்டினார். கீரந்தன் காசியிலிருந்து ஊர் திரும்பியிருந்ததை அவர் அறியவில்லை. ''ராத்திரியில் கதவைத் தட்டுபவன் யார்?'' என்று உள்ளே இருந்த கீரந்தன் கேட்டார்.  சுதாரித்த மன்னர், சந்தேகம் வராத விதத்தில் எல்லா வீட்டுக்கதவையும் தட்டி விட்டு ஓடினார்.  திருடன் வந்ததாக கருதிய அப்பகுதி அந்தணர்கள், மன்னரிடம் முறையிட்டனர். குற்றவாளி பிடிபட்டால் என்ன தண்டனை தரலாம்?'' என மன்னர் கேட்க ''கையை வெட்டலாம்'' என்றனர். ''அப்படியா... கதவைத் தட்டியது நான் தான்'' என்ற மன்னர், யாரும் எதிர்பாராத விதத்தில் வாளால் தன் கையை வெட்டி கொண்டார்.

திருமணத்தில் பட்டுப்புடவை உடுத்துவது ஏன் ?

Image
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக்கொள்ள உதவும் உரிமை மணமகனின் சகோதரிக்கு தரப்படுகிறது. ஏனெனில் தன் சகோதரன் (மணமகன்) இல்லற சுகங்களைத் துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான்என்பதை அவ்வேளையில் உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பை அவளுக்கு சாஸ்திரம் வழங்குகிறது. இந்த முகூர்த்தப்புடவை கூறைப்புடவை என்றும் அழைக்கப்படும். அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையை திருமணம் முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின் பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று சொல்லியுள்ளார்* ஆனால் இது தமிழகத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை. பட்டுப்புடவை தேவையா? இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார் தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த பட்டுப் புடவையை வாங்குவதால் அதை பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல் போகிறது. சரி இந்த பட்டுப் புடவை தேவையா? என்று நோக்கும்போது பட்டுத் துணிகள் உயிர்வதையால் உண்டாகிறது. மேலும் ரசாயன நூல்களாலான துணிகள் இயற்கைக்கு ஏற்றதல்ல. மேல

உங்களுக்குக் கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க

Image
கோபம் உங்களை உடன் இருந்தே கொல்லும் வியாதி. நெருப்பு உருவான இடத்தை அழித்து விட்டுத் தான் மற்ற இடங்களுக்கு அது பரவும். அது போலத் தான் கோபம் என்னும் கொடிய குணமும். அது உங்களை அழித்து விட்டுத் தான் பிறரிடம் வேலையை காட்டும். ‘கோபப்படுவது’ அல்லது ‘நான் ரொம்பக் கோபக்காரங்க!’ என்று சொல்லிக் கொள்வது உண்மையில் ஒரு பெருமையான விஷயமே அல்ல. நீங்கள் கோபப் பட்டால் என்னாகும்? உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பற்றிக் கூறும் பதிவு தான் இது. உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கோபத்தை அடக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப் போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும் ஆனால் அந்தக் கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை இத்தகைய பிரச்சனைகள். இது தவிர, கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை பட்டியலிட்டுள்ளோம் அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி

கேட்டதைக் கொடுக்கும் தமிழ்க் கடவுள் முருகன் மந்திரம்!

Image
     முருகன் வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டே பக்தி வழக்காமாக இருந்து வருகிறது. தமிழில் முருகு என்றால் அழகு, இளமை, வீரம் என பலப்பொருள் உண்டு. அதனாலே முருகன் அழகு கடவுளாகவும், இளமையானவராகவும், வீரத்தின் அதிபதியாகவும் திகழ்கிறார். பழனி, மருதமலை, சுவாமிமலை, திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் என அறுபடை வீடுகளுக்கும், கந்தன், கடம்பன், கதிர்வேலன், வேலன், சரவணன், சுப்ரமணியன், சுவாமிநாதன், தகப்பன் சாமி, குமரன் என பலநூறு பெயர்களுக்கும் அதிபதியாகி நிற்கிறான் முருகன். தைப்பூசம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் என பல விசேட நாட்களுக்குச் சொந்தக்கரானாகிய முருகனிடம் யார் எதை வேண்டினாலும் வேண்டிய வரத்தை பெறலாம். புத்திர யோகம், வாகன யோகம், மனை யோகம், உத்தியோக யோகம் என எல்லா யோகங்களையும் கொடுப்பவன் அவனே. ஓம் என்னும் தத்துவனாகிய அவனை வணங்கும்போது இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். இந்த எளிய மந்திரத்தை கூறி அவனை பூஜிப்பதால், நீங்கள் கேட்ட வரத்தை மனமகிழ்ந்து வழங்கிடுவான். “ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ” இவ்வளவுதான் மந்திரம். ஒரு

‘சபரிமலை கருடன்’ யார் என்று உங்களுக்கு தெரியுமா?

Image
சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவன் சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக வாழ்ந்து வந்தார்.அதனால் பக்தர்கள் சபரிமலைக்கு வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியக்கோயில் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் வணங்குகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. திருவாபரணப் பெட்டிகள்: மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம்) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. இந்த அரண்மனையில் மதுரை பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களாக கருதப்படும் பந்தளம் அரச பரம்பரையினர் வாழ்ந்து வந்தனர். பந்தளம் அரச பரம்பரையில் பிறந்தவராகவே சுவாமி ஐயப்பன் புராணங்களில் போற்றப்படுகிறார். அதோடு அச்சன்கோயில் நதியோரத்தில் ஐயப்பன் கோயில் ஒன்றும் உள்ளது. இந்த கோயிலுக்கு நீங்கள் வரும்பொழுது இதற்கும் சபரி மலை கோயிலுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க ஒற்றுமையை க

அறிந்து கொள்வோம்

Image
கண் ஒரு அதிசயம் அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவியில்தான் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறங்களை பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தின் பல்வேறு வகை நிறச் சேர்க்கைகளால் 5 லட்சம் வகை நிறங்களை உருவாக்கக் கூடும். இந்த சிறு கருவியால் மட்டுமே அத்தகைய நிற வித்தியாசங்களை உணர்ந்தறிய இயலும். அந்த கருவி வேறு எதுவும் இல்லை, நமது கண்கள்தான். இதனை இயக்குவதற்கு மின்சாரமோ, அணுத்திறனோ தேவையில்லை. இதன் நுட்பங்களை புரிந்து கொள்ள பெரிய பொறியியல் வல்லுணர்வு தேவையில்லை. நமது கண்ணின் கருவிழி வட்டமான விழியின் மையப்பகுதி தான் ஓரப்பகுதியை விட பொருட்களை தெளிவாக பார்த்து அறிகிறது. நல்ல பகல் வெளிச்சத்தில் கருவிழியின் மையமே, அதிக ஒளியை தெரிந்து கொள்கிறது. ஓரப் பகுதியால் மங்கிய ஒளியை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். இதுவே இரவு நேரங்கள் என்றால், கருவிழியின் மையம் குறைந்த ஒளியை காணுகிறது. மாறாக ஓரப் பகுதியில் அதிக வெளிச்சத்தை உணர முடிகிறது. இதற்கு காரணம் மிகவும் நுட்பம் வாய்ந்த பார்வைப் புலனாய்வு செல்களே ஆகும். இந்த அமைப்பின் அடிப்படையில், அவற்றுக்கு கழி செல்கள், கூம்பு செல்கள்