Posts

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

Image
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் நண்பர்கள் கட்டாயம் தேவை. ஆனால் சில நேரங்களில் உங்கள் நண்பர் உண்மையானவரா அல்லது முற்றிலும் போலியானவரா என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஏனெனில் எதிரிகளை விட போலியான நண்பர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் அக்கறை காட்டுவது போல முகத்திற்கு முன் நடித்தாலும் முதுகிற்கு பின்னால் உங்களை காட்டிக்கொடுங்க தயாராக இருப்பார்கள். இதுபோன்றவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. ஆனால் அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினமாகும். ஜோதிட அறிகுறிகள் ஒருவரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். அந்த வகையில் ஒருவரின் பிறந்த ராசி இந்த குணம் அவர்களுக்கு உள்ளதா என்பதை கூறிவிடும். இந்த பதிவில் நம்பத்தகுத்தவர்கள் போல தோற்றமளிக்கும் ஆனால் நம்பக்கூடாத ராசிகள் யாரென்று பார்க்கலாம். மேஷம் உங்களுடைய விசுவாசமான மற்றும் நல்ல நண்பராக இருப்பதாகக் கூறி, இந்த இராசி அறிகுறிகளின் நபர்கள் உங்கள் முதல் நபரைக் காட்டிக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் சில நேரங்களில் மிகவும் கேள்விக்குரியவையாக இருக்கலாம். ந

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்

Image
நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எதிர்கொள்ள அம்பிகையின் திருவடியை சரணடைவதுதான் ஒரே வழி. சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து தினமும் 27 முறை சொல்லி வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். ஸ்லோகம்: விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம் விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித – த்ருசா மஹா – ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ. விளக்கம்: பிரம்மன், திருமால், எமன், குபேரன், இந்திரன் என அனைவருமே மகா வெள்ளப்பெருக்கு காலத்தில் இல்லாமல் போகிறார்கள். ஆனால், அந்த பெரு வெள்ளக் காலத்தில் சிவன் சம்கார தாண்டவம் புரிவதை, சர்வ வல்லமை கொண்ட தேவி, நீ மட்டும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்

Image
1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது. 2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது. 3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது. 5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது. 6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது. 7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது. மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்

உங்களுக்கு இந்த 10 அறிகுறிகள் இருக்கா..? அப்போ வேகமாகவே வயதாகிறது என்று அர்த்தமாம்...!!

Image
வயது அதிகமாவதால் ஒரு நபர் முதிர்ச்சி அடைவது பொதுவானது. ஆனால் சிலருக்கு வயதான அறிகுறிகள் விரைவில் தோன்றும். அதன் அறிகுறிகளையும் சரிசெய்வதற்கான சில ஆரோக்கியமான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். மெதுவாக நடப்பது- உங்களுக்கு 40 வயது நிறைவடைந்து உங்கள் நடக்கும் வேகம் குறைந்துவிட்டால், நீங்கள் முதுமையை நோக்கி வேகமாக நகர்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். மெதுவாக வட்டவடிவில் நடப்பதை விட ஆசனங்களும் பயிற்சிகளும் சிறந்த வழி. நீங்கள் 5 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மயக்கம் அடையலாம், ஆனால் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 100 படிகள் செல்ல முயற்சிக்க வேண்டும். சன் ஸ்பாட் ஸ்கின் - 50 வயதிற்கு பிறகு, பெரும்பாலான மக்களுக்கு முகம், கைகள் மற்றும் உடலின் பிற பாகங்களில் வடுக்கள் ஏற்படுகின்றன. இது சன் ஸ்பாட் என்று அழைக்கப்படுகிறது. அதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் அதன் நிறம் கறுப்பாக இருந்தால் அல்லது அந்த பகுதியின் தோல் வறண்டு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். பலவீனமான நினைவகம்- வயதுக்கு ஏற்ப நினைவகம் மோசமடைவது இயற்கையானது. இது 4

குளிர்காலத்தில் உப்பை குறைக்கவேண்டும்.காரணத்தைதெரிந்துகொள்ளுங்கள்

Image
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். ஆனால், குளிர்காலத்தில் உப்பு குறைவாக இருக்கும் பண்டங்கள், உணவு பொருள்களைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று கூறுவர். ஆனால், குளிர்காலத்தில் உப்பை தவிர்ப்பது முக்கியம். கோடைக் காலத்தை போலன்றி, குளிர்காலத்தில் நமக்கு அதிகமாக வியர்க்காது. வியர்வை வெளியேறாத காரணத்தால் உடலுக்குள் உப்பு தங்கும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இருதயம் இரத்தத்தை அழுத்தி அனுப்பும் செயல்பாடு குறைவாக இருப்போருக்கு (LV dysfunction) திரவத்தின் அளவு அதிகமாகி இதய செயலிழப்பு நேரிடும் அபாயம் உண்டு. குளிர்காலத்தில் அதிக உப்பு சேர்ப்பது இதயம் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் உடலில் சோடியம் அதிக அளவில் சேருவதைத் தடுப்பதற்குப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். நொறுக்கு தீனிகள், உப்பு பிஸ்க

சனி கொடுக்க எவர் தடுப்பார்

Image
1. நமச்சிவயா எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை. 2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லை. 3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார். 4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. 5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார். 6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார். 7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை. 8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று. 9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை. 10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவத

ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் அறிவியலும் கலந்திருக்கிறது.

Image
முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும்.  ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்... விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாமல் இ