Posts

Showing posts from May, 2021

நாளை மட்டும் ஊரடங்கில்தளர்வு...?ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அனைத்து கடைகளும் மூடல்..?

Image
தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. நோய்த் தொற்று கட்டுக்குள் வராததால் மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் " கொரோனா காரணமாக கடந்த ஓராண்டு காலத்தில் விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்..ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.. தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு வந்துள்ளது.. முழு ஊரடங்கின் போது தொற்று குறைந்துள்ளதே தவிர, கட்டுப்படுத்த முடியவில்லை.. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை நீக்க அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது" என்று தெரிவித்தார். இதே போல் இந்த கூட்டத்தில் கலந்து மற்ற கட்சி எம்.எல்..ஏக்களு

இன்று தங்கம் வாங்கினால் மகாலட்சுமி....உப்பு வாங்கினால்?

Image
சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாளில் வளர் பிறையில் வரும் திருதியை திதி அக்ஷய திதியாகும். கிருதாயுகத்தில் பிரம்மன் உலகை தோற்றுவித்தது இந்நாளில் தான். திரேதா யுகம் தொடங்கியதும் இந்நாளில்தான். பகீரதன் கடுமையாக தவம் புரிந்து பல போராட்டங்களுக்குப் பிறகு கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததும், கங்கை நீர் பூமியில் பட்டு புண்ணியமான தினமும் அக்ஷயதிருதி அன்றுதான். விஷ்ணு பகவானின் அவதாரமான பரசுராமர் அவதரித்தது இந்நந்நாளில்தான். அக்ஷய என்ற வார்த்தை சமஸ்கிருதத்தைக் கொண்டது. எப்போதும் குறையாதது என்னும் பொருளை கொண்டது. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அதே அட்சயம் என்றால் தேயாதது, குறையாதது, வளர்வது என்று பொருள். எல்லா நலன்களையும் அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில் நாம் வாங்கும் அனைத்தும் அடுக்கடுக்காய் சேரும் என்பது ஐதிகம். அதனால் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர். இன்று அக்ஷய திருதியை என்றால் தங்கம் தான் வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தான் செல்வம் பெருகும் என்பதி

தமிழக அரசின் புதிய அறிவிப்பு கொரோனா அதிகரிப்பு காரணமாக மே-6'முதல் புதிய கட்டுப்பாடுகள் மளிகை, காய்கறிகள் கடைகள் மதியம் 12மணி வரை மட்டுமே அனுமதி

Image
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பல நலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒருசில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டும், வரும் மே 6 ஆம் தேதி முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ''கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. அண்மை காலங்களில் இந்திய அளவில் ஒரு சில நாட்களில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக,மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, உத்திரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த