சமய சின்னங்களும் அதன் உண்மையான அர்த்தங்களும் உங்களுக்கு தெரியுமா?
உலகில் பல்வேறு சமயங்கள் உள்ளது. மக்கள் அவர்களின் விருப்பமான தெய்வத்தை வணங்கி தங்கள் வாழ்க்கையை அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சமயமும் பல்வேறு சின்னங்களை கொண்டு உள்ளது. அந்த சின்னங்களை புனிதமாக கருதி வழிபட்டு வருகின்றனர். பல்வேறு சமய சின்னங்களும் அதன் உண்மையான அர்த்தங்களும் என்னவென்று பார்க்கலாம் வாங்க..
ஸ்வஸ்திகா எனப்படும் இந்த சின்னம் இந்துக்களின் புனித சின்னம். இது அமைதியும் வளமையும் குறிப்பதாகும். ஸ்வஸ்திகா சின்னத்தை வீட்டு வாசல் கதவுகளில் வரைந்து வைத்து இருப்பார்கள். இது லக்ஷ்மி தேவியை வரவேற்பதாக அமைகிறது.
திரிசூலம் இது இந்து கடவுள் சிவபெருமானை குறிக்கிறது. அளிக்கும் கடவுளான சிவனை குறிக்கும் இந்த திரிசூலம் ஆற்றலை குறிப்பதாகும்.
சிலுவை கிறிஸ்தவர்களின் புனித சின்னமாகும். இயேசு மனிதராக பிறந்து மக்களின் பாவங்களை தன் இரத்தத்தால் கழுவிய புனிதத்தை குறிப்பது இந்த சிலுவை ஆகும்.
பிறை மற்றும் நக்க்ஷத்திரம் இஸ்லாமியர்களின் புனித சின்னமாகும். உருவமற்ற அருவமாக கடவுளை வழிபடுபவர்கள். இஸ்லாமியர்களின் பொதுவான சின்னமாக உள்ளது.
ஓம் என்பது அண்ட சரச்சாரத்தை குறிக்கும். ஆழ்மனதின் ஓசை ஓம். உலகில் உள்ள அனைத்தும் ஓம் என்ற ஓசைக்குள் அடக்கம்.
அகிம்சை கை இந்த சின்னம் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்களின் புனித சின்னமாகும். வன்முறைக்கு எதிரான உறுதிமொழியாக பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment