Posts

Showing posts from May, 2019

மண் பாத்திரங்கள் மூலம் சமைப்பதால் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா??

Image
மண் பானைகளில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது அதில் இருக்கும் நுண் துளைகள் வழியே உள்ளிருக்கும் நீர் தொடர்ந்து ஆவியாகி கொண்டே இருப்பதால் பானையின் வெப்பமும் பானையின் உள்ளே உள்ள நீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாதல் மூலம் வெளியேற்றப்படுவதால் பானையின் உள்ளே இருக்கும் நீர் எப்பொழுதும் குளிர்ந்த நிலையிலேயே இருக்கும். மண்பாண்டங்கள் கழுவுவதற்கு மிக எளிமையானவை ரசாயன பொருட்கள் எதுவும் கொண்டு கழுவ வேண்டாம் மேலும் எந்தக் கெமிக்கலும் நம் உடலுக்கு சேராது. பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். எனவே நீர் ஆவியாவது மிகவும் குறையும். எனவே பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது. பானையில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண்பானையில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. மண்பண்டங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.உணவில் மண்பாண்டங்களில் சமையல் செய்யும் பொழுது அதிக எண்ணெய் சேர்க்க தேவையில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதாகும். பிரி

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது

Image
விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார். மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள். நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:- சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித