Posts

Showing posts from July, 2018

சிங்கங்களை பற்றி நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்

Image
யாருடைய வீரத்தையாவது புகழ்ந்து சொல்லும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது"சிங்கம்மாதிரி"அவன் என்று கூறுவோம். சிங்கங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வாங்க பார்க்கலாம் 1)சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது. ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது. பெண் சிங்கம் வேட்டையாடி கொண்டு வரும் உணவை தான் ஆண் சிங்கம் சாப்பிடும். ஆண் சிங்கங்கள் அபூர்வமாக தான் வேட்டைக்கு செல்லும். 2)சிங்கங்கள் இனப்பெருக்கதின் போது தொடர்ந்து ஒரு நாளுக்கு 25-40முறை வரை கூட உடல் உறவில் ஈடுபடுமாம். 3)சிங்கங்களுக்கு இனிப்பு சுவையை உணர முடியாது. 4)சிங்கங்களின் கூட்டத்தை எதிர்த்து சண்டையிடும் துணிச்சல் முள்ளம்பன்றிக்கு உள்ளது. 5)சிங்கங்களின் கர்ஜிக்கும் சத்தம் 8கி.மீ வரை எதிரொலிக்கும் தன்மை கொண்டது. 6)தீ கோழி ஒரே உதையில் சிங்கங்களை உயிர் இழக்க செய்துவிடும் திறன் கொண்டது. 7)சிங்கங்கள் பொதுவாக 10-14 வருடங்கள் உயிர் வாழும். 8)பெண் சிங்கங்களுக்கு பிடரி மயிர் அதிகமாக இருக்கும். ஆண் சிங்கங்களின் மீது அதிக ஈர்ப்பு இருக்கும். 9)சிங்கங்கள் 250 கிலோ வரை எடை கொண்டது. 10)மலை சிங்கங்கள் தனக்கு கிடைத்த உணவை மண்ணில் புதைத

சபரிமலை பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்

Image
1. காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. 2. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.   3. லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும். ஆண்டவனை அடைய முடியாது.   4. மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்துவிடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறிபிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.   5. மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.   6. டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.   7. அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒருபோதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச்சுமை.   8. சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.   9. ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.   10. தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.   11. ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.   12. மனம்: நம்மனம் கெடாது

சகல கஷ்டங்களை போக்கும் ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்

Image
சகல கஷ்டங்களை போக்கும் ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்:      கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜெகதேவி கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள துர்கா பருவததின்  ஆயிரம் அடிக்கு மேல்  அமைந்துள்ளது ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்.  இந்த ஆலயம் கிபி 1200 வது நூற்றாண்டில் செதுக்கப்பட்ட விக்ரமாகும். சுமார் நான்கு அடி உயரத்திற்கு கம்பீரமாக மூஷிக வாகனத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகரை நாமும் திரிசிப்போம். இங்கு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயரும் , ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகரும் இருபது மிகவும் சிறப்பம்சமாகும் . சகல விதமான தோஷங்களும் , திருமணம் இன்மை ,குழந்தை இன்மை , தொழில் தடை , தொழில் இன்மை ,கால சர்ப தோஷம் ,நாகதோஷம், சனி பெயர்ச்சி ,ரகு பெயர்ச்சி போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் நிறைவேறும் . இந்த ஆலயத்திற்கும் வரும் பக்தர்களே அவரவர் கைகளாலே விநாயகருக்கும் , ஹனுமனுக்கும் அபிஷேகம் ,பூஜை ஆகியவை செய்யலாம்.

வாட்சப் குரூப் பெயர் இனி காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும்

Image
சமூக  வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது வாட்ஸ் அப் அப்ளிகேஷன். முன்பு ஒரு காலத்தில் புறாவை கொண்டு தூது அனுப்புவது,பின்னர் கடிதம், அல்லது ஆட்களை நேரடியாக அனுப்பி  தகவல் அனுப்புவது, பின்னர்  டெலிகிராம், போன்,அடுத்து மெயில் என தகவல் பரிமாற்றம் தொடங்கி தற்போது, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் வரை வந்துவிட்டது.   வாட்ஸ் அப்பின் பயன்பாடுகளை அதிகம் விரும்பும் மக்கள், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கும் சரி, புகை படங்கள் அனுப்பி ரசிப்பதற்கும் சரி, வீடியோ கால் மூலம் பேசி மகிழ்வதற்கும் சரி  இந்த ஒரு ஆப் போதுமானதாக உள்ளது   ஆனால் இதே வாட்ஸ் ஆப்  மூலம் பகிரப்படும் அனைத்து விஷயங்களும் சரியானது என்று கூற முடியாது அல்லவா..? உதாரணதிற்கு வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்துள்ள ஒரு கும்பல் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வாட்ஸ் ஆப் மூலம் பெரிதும் பகிரப்பட்டு வந்தது. அதன் விளைவு பல்வேறு இடங்களில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை ஊர்மக்கள் அடித்தே கொன்றனர். இது போன்று சமூக நலனை கெடுக்கும் வகையில் பகிரப்பட்டு வரும் தவறான  தகவல்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

Image
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.      வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது.  சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.   அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்  என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.      மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம். அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு  பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத்  தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த  கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.   அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான்.  ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத  எதுவும் உங்களுக்க

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? என்ன என்று தெரியுமா

Image
சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன்.  இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.  புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும்.  மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும். அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏ

மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம் என்ன தெரியுமா...?

Image
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாஇலைகளிலும் அதன்  சக்தி குறையாது. வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை. சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்புகள் அதிகம்.   மாவிலை ஒரு கிருமிநாசினி இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது.  காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெறும் முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக  மாவிலை தோரணம் கட்டுகிறோம்.    நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, வீட்டு வெளி வாசலில், அடிக்கடி மாவிலைத் தோரணம் கட்டுங்கள்; விசேஷங்களுக்கு மட்டும்தான் கட்டணும் என்றில்லாமல், மாவிலைகள் கிடைக்கும் போதெல்லாம் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.    'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் கொடுக்கும்

திருமணத்தை தாமதப்படுத்தும் தோஷங்கள்

Image
திருமணம் நடைபெற காலதாமதம் ஆகிவிட்டால் பெரும்பாலனவர்கள் ஜாதகத்தைத்தான் குறை சொல்வார்கள். ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கும் என்பார்கள். பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் திருமணத்தை தாமதப்படுத்தும் தோஷங்களாக உள்ளன. அவை ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகும். செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1,2,4,7,8, ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும்.செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தில் மட்டுமே சேர்க்க வேண்டும். ராகு-கேது தோஷம் லக்னம், 2,7,8, ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகு

சச்சினா இது? டெண்டுல்கரின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு.

Image
சச்சின் டெண்டுல்கரின் அரிய புகைப்பட தொகுப்பைக் கீழே காணலாம்.

முகத்தில் பருக்கள் வந்தால் இந்த தப்பை மட்டும் கண்டிப்பா செய்யாதீர்கள்

Image
நம் முகத்தின் அழகை கெடுப்பதே முகப்பரு தான்..அப்படின்னு சொல்லிவிட முடியாது. ஏனென்றால் பருவத்தில் வருவது பரு. அது முகத்தில் வருவதால் முகப்பரு அவ்வளவு தான்.ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது உடலில் நடக்கும்  ஹார்மோன் மாற்றத்தால் அதிக முகப்பரு வருவது வழக்கம். மலச்சிக்கல் வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தலையில் அதிக பொடுகு இருப்பது ஹார்மோனல் பிரச்சனை என இவை  அனைத்தும் முகப்பரு வருவதற்கான காரணங்கள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்தது. சரி இவ்வாறு வரும் முகப்பருவை தடுக்க சில வழிகள் மேற்கொண்டாலும்..அது வந்தே தீரும் என்பது தான் உண்மை. ஒரு சிலருக்கு முகப்பரு இருக்கவே இருக்காது....பார்பதற்கு  அவ்வளவு அழகாக இருக்கும் அவர்களுடைய முகத்தை பார்க்கும் போது... இது போன்றவர்களுக்கு இயற்கையிலேயே இது போன்ற ஜீன்களை கொண்டவர்கள் மற்றும் ஹார்மோன்ஸ் சரியான அளவில் அவர்களுக்கு இருப்பதும் ஒரு காரணமாக கூறலாம் . முகப்பரு வந்தால் செய்யக்கூடாதவை . எப்ப பார்த்தாலும் அந்த பருவை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டே இருப்பது கூடாது பருவினை அழுத்தி உடைத்து எடுத்தல் கட்டாயம் செய்யவே கூடாது  பருவை விரலால் எந்த அளவிற்க