மனைவி அமைவதெல்லாம்..?
ஆன்மீக கதைகள் நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய்தாள். வந்தவர்கள் பொதுவாகப் பேசுவதைவிட நீலாயதாட்சனுடைய அசாத்திய திறமையைப் பாராட்டிப் பேசுவதை விரும்பிச் செய்தார்கள். ரொம்பவும் பெருமிதமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். நெஞ்சில் கர்வமும் ஏறியது. அவர்கள் புகழப் புகழ, வானில் மிதக்கும் கிறக்கம் கொண்டான். ஆனால், விரைவில் காட்சி மாறியது. சிற்றுண்டிகளுக்குப் பிறகு நிறைவாக மண மணக்கும் காபியை அவர்களுக்குக் கோப்பைகளில் வழங்கினாள் நாராயணி. ‘‘உங்க வீட்டுக்கு வர்ரதானா சாரோட பாட்டைக் கேட்கவும், உங்களோட டிபனை சாப்பிடவும்தான் வரணும். ரெண்டுமே சூப்பர் டேஸ்ட்!’’ என்று பொதுவாகப் பாராட்டினார் ஒருவர். ‘‘ஆனா, நமக்கு மேடம்கிட்டேயிருந்து டிபன் கிடைக்கும்; சார்கிட்டேயிருந்து ஒரு பாட்டு பாடக் கேட்குமா?’’ என்று இன்னொருவர் சற்றே ஏக்கத்துடன் சொன்னார். ‘‘அதுசரி, நமக்குப் பாடற நேரத்ல ஏதாவது சபாவிலே, இந்த சீஸன்ல பாடினார்னா அவருக்கு ஆயிரக்கணக்கிலே வருமானம் வரும்…’’ என்று இழுத்தார் மூன்றாமவர்